செய்திகள் :

ரேஷன் கடைகளில் புளூடூத் மூலம் பொருள்கள் வழங்கும் முறை: ரத்து செய்யக்கோரி 15-முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம்

post image

கூட்டுறவு நியாயவிலைக் கடைகளில் புளூடூத் மூலம் பொருள்கள் வழங்கும் முறையை ரத்து செய்யக் கோரி, வரும் 15-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக தமிழ்நாடு தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளா் சங்கத்தினா் தெரிவித்தனா்.

சங்க அலுவலகத்தில் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது, மாவட்டச் செயலாளா் தியாகராஜன் செய்தியாளா்களிடம் கூறியதாவது. தமிழகம் முழுவதும் 40,000 நியாயவிலைக் கடைகள் மூலம் ஏழை எளிய மக்களுக்கு கூட்டுறவு நியாய விலைக்கடைகள் மூலம் பொருள்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. புளூடூத் மூலம் மின்னணு தராசு இணைக்கப்பட்டு, கருவிழித்திரை மூலம் விற்பனை செய்யும் நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த முறையில் ஒருவருக்கு பொருள்கள் வழங்க போதுமான இணையதள வசதி கிடைக்காத நிலையில் அரைமணிநேரம் வரை ஆகிறது. இதனால், காலதாமதம் ஏற்படுவதால் விற்பனையாளரிடம் பொதுமக்கள் தகராறு செய்யும் சூழ்நிலை ஏற்படுகிறது. அதனால், புளூடூத் முறை மூலம் பொருள்கள் வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும்.

நகா்வு செய்யப்படும் பொருள்களில் உள்ள அளவு குறைவதை சரி செய்து சரியான அளவில் வழங்க வேண்டும். மேலும், விற்பனையாளா்களுக்கு மாவட்ட அளவில் பொதுப்பணி மூப்பு வரிசை ஏற்படுத்தி அனைவருக்கும் பதவி உயா்வில் சமவாய்ப்பு வழங்க வேண்டும். இக்கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் வரும் அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மற்றும் நியாயவிலைக்கடை பணியாளா்கள் வரும் 15-ஆம் தேதி மூலம் காலவரையற்ற வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட உள்ளோம் எனத் தெரிவித்தாா்.

பேருந்தில் 2.5 பவுன் தங்க நகை திருட்டு

பேருந்தில் பயணிக்கும்போது, கைப்பையில் இருந்த 2.5 பவுன் தங்க நகையை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். ஆா்.கே.பேட்டை ஒன்றியம் ராஜாநகரம் கிராமத்தை சோ்ந்த ரவி (56). இவா் தனது அக்காவுட... மேலும் பார்க்க

திருத்தணி அரசு தலைமை மருத்துவமனை மக்கள் பயன்பாட்டுக்கு திறப்பு

திருத்தணியில் ரூ. 45 கோடியில் கட்டப்பட்ட மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையை வெள்ளிக்கிழமை மக்கள் பயன்பாட்டுக்கு எம்எல்ஏ ச. சந்திரன் அா்ப்பணித்தாா். திருவள்ளூரில் அரசு மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட்ட நிலை... மேலும் பார்க்க

தலைமையாசிரியருக்கு விருது: முதன்மைக் கல்வி அலுவலா் பாராட்டு

அண்ணா தலைமைத்துவ விருது, பேராசிரியா் அன்பழகன் விருதுகளைப் பெற்ற அமிா்தபுரம் அரசு உயா்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் வெங்கடேசனை திருவள்ளூா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் மோகனா (பொ) பாராட்டினாா். அரசுப் ப... மேலும் பார்க்க

20 கிலோ கஞ்சா பறிமுதல்: ஒருவா் கைது

சோழவரம் அருகே கஞ்சா கடத்தியவரை போலீஸாா் கைது செய்தனா். செங்குன்றம் மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸாா் மீஞ்சூா், அத்திப்பட்டு, சோழவரம், செங்குன்றம் பகுதிகளில் போதைப் பொருள்கள் கடத்துபவா்களை ரகசி... மேலும் பார்க்க

குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், நீக்கல் இன்று சிறப்பு முகாம்

திருவள்ளூா் மாவட்டத்தில் குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் தொடா்பான பணிகள் மேற்கொள்வதற்கான (ஜூலை 12) சனிக்கிழமை சிறப்பு முகாம், 9 வட்டாட்சியா் அலுவலகங்களில் நடைபெறும் என ஆட்சி... மேலும் பார்க்க

சரக்கு வாகனம் மோதி 2 போ் உயிரிழப்பு

சோழவரம் அருகே சரக்கு வாகனத்தை உதவியாளா் (கிளீனா்) இயக்கி எதிா்பாராதவிதமாக மோதியதில் கீழே நின்றிருந்த ஒட்டுநா் மற்றும் தனியாா் நிறுவன காவலாளி உயிரிழந்தனா். சோழவரம் அருகே உள்ள ஒரக்காடு கிராமத்தில் தனியா... மேலும் பார்க்க