செய்திகள் :

ரோலெக்ஸ் நிறுவனர் ஹான்ஸ், ஹிட்லரின் உளவாளியா? - வெளியானஅறிக்கை; இங்கிலாந்தில் அதிர்ச்சி!

post image

பிரபல ரோலக்ஸ் கடிகார பிராண்டின் நிறுவனர் ஹான்ஸ் வில்ஸ்டோர்ஃப், ஹிட்லரின் ஆட்சிக்கு ஆதரவு கொண்டிருந்ததாகவும் நாஜி உளவாளியாக இருந்ததாகவும் தி டெலிகிராஃப் அறிக்கை கூறுகிறது.

பிரபலங்கள் தொடங்கி பணக்காரர்கள் என அனைவரும் விரும்பும் ஒரு ஆடம்பர கடிகார பிராண்டாக ரோலக்ஸ் உள்ளது. இந்த கடிகாரத்தின் தனித்தன்மை காரணமாக பலரும் இதனை வாங்க விரும்புகின்றனர்.

இந்த ரோலக்ஸ் பிராண்டை ஹான்ஸ் வில்ஸ்டோர்ஃப் என்பவர் உருவாக்கினார். ரோலக்ஸ் நிறுவனத்தின் முக்கியமான கண்டுபிடிப்புகளில் ஒன்றாக நீர்ப்புகா தன்மைக்கொண்ட வாட்ச்கள் இடம்பெறுகின்றன. ரோலக்ஸ் வாட்ச்களுக்கு என ஒரு தனி அங்கீகாரம் சந்தைகளில் உள்ளது.

இந்த நிலையில் ரோலக்ஸ் நிறுவனர் ஹான்ஸ் வில்ஸ்டோர்ஃப் ஒரு உளவாளியாக இருந்ததாக அறிக்கைகள் கூறுகின்றன.

1941 மற்றும் 1943 -க்கு இடையில் எழுதப்பட்ட, முத்திரையிடப்பட்ட இரண்டாம் உலகப் போர் ஆவணங்களான MI5 , வில்ஸ்டோர்ஃப் "உளவு பார்த்ததாக சந்தேகிக்கப்படுபவர்" என்று விவரிக்கின்றன.

அவர் பிரிட்டிஷ் குடிமகனாக இருந்த போதிலும் இரண்டாம் உலகப்போரின் போது நாட்டு நலன்களுக்கு அச்சுறுத்தலாக அவரை பார்த்ததாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருப்பு பட்டியில் அவரை சேர்ப்பதற்கான பரிசீலனைகள் வந்ததாகவும் அவ்வாறு கருப்பு பட்டியலில் ஹான்ஸ் வில்ஸ்டோர்ஃப்பை சேர்ப்பது வெளிநாட்டு வர்த்தகத்தை பாதிக்கும் என்று குறிப்பிடப்பட்டதாக ஆவணங்கள் வெளிப்படுத்தின.

ஆனால் இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளித்த ரோலக்ஸ் நிறுவனம் இதுதொடர்பாக வரலாற்று ஆசிரியர்கள் குழுவை நியமித்ததாகவும் கூறியிருக்கிறது.

இந்த குற்றச்சாட்டுகளின் உணர்திறன் காரணமாக அந்த காலகட்டத்தில் ஹான்ஸ் வில்ஸ்டோர்ஃப் சரியான பங்கை ஆராய்ச்சி செய்யும் அதிகாரப்பூர்வ வரலாற்று ஆசிரியர்கள் குழுவை ஏற்கனவே நியமித்துள்ளதாக ரோலக்ஸ் நிறுவனம் கூறியிருக்கிறது.

இங்கிலாந்து

ஜெர்மனியில் பிறந்து, இளம் வயதிலேயே பெற்றோரை இழந்த ஹான்ஸ் வில்ஸ்டோர்ஃப் ஸ்விட்சர்லாந்தில் குடிப்பெயர்ந்தார். அதன் பின்னர் ரோலக்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கி அதனை மிகப்பெரிய வளர்ச்சிப் பாதையில் எடுத்துச் சென்று புகழின் உச்சத்தை அடைந்தார்.

உலக அளவில் புகழ்பெற்ற பிராண்டாக மாறியதற்கு முக்கிய பங்கு வகித்தார். இவரின் இறப்புக்குப் பின்னர் ரோலக்ஸ் நிறுவனத்தை தொண்டு நிறுவனம் தொடர்ந்து நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பண்டைய காலத்தில் கோதுமையை வைத்து கண்டறியப்பட்ட கர்ப்பம்; எப்படி நடந்தது இந்த சோதனை?

நவீன கர்ப்ப பரிசோதனை கருவிகள் கண்டுபிடிப்பதற்கு முன்பு இந்தியா, ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளில் இயற்கை பொருட்கள் மற்றும் பாரம்பரிய நம்பிக்கைகளை பயன்படுத்தி கர்ப்பத்தை கண்டறிந்துள்ளனர். நவீன கருவிகள் இல்லாம... மேலும் பார்க்க

ஆதிச்சநல்லூர்: 'நம்ம நாகரிகத்தை நாமே பேசலன்னா... யாரு பேசுவா?'- கவனம் ஈர்க்கும் ஆன் சைட் மியூசியம்

ஆசிய கண்டத்தில் சைனாவிற்கு பிறகு இந்தியாவில் முதன்முதலில் ஆன் சைட் மியூசியமா..? ஆன் சைட் மியூசியம் என்றால் என்ன? தமிழில் தள அருங்காட்சியகம் என்று அழைக்கப்படும் ஆன் சைட் மியூசியம் என்பது ஒரு வரலாற்று அ... மேலும் பார்க்க

ஆதிச்சநல்லூர்: ``எலும்புக்கூடு நெற்றியில் ஓட்டை இருக்க இதுதான் காரணம்'' -முத்தாலங்குறிச்சி காமராசு

பொருநைப் பூக்கள், பொதிகை மலை அற்புதங்கள், தாமிரபரணி கரை சித்தர்கள், ஆதிச்சநல்லூர் அகழாய்வுகள் என்று பல்வேறு ஆய்வு நூல்களை எழுதிய திருநெல்வேலியைச் சேர்ந்த முத்தாலங்குறிச்சி காமராசு பாளையங்கோட்டையில் உள... மேலும் பார்க்க

மதுரை: சமூக விரோதிகளின் கூடாரமாகும் சமண மலை; சீரழியும் சிலப்பதிகாரத் தலம்; பாதுகாக்குமா தமிழக அரசு?

தமிழர்களின் தொன்மையான நாகரிக வரலாற்றைச் சொல்லும் கீழடி உள்ளிட்ட தொல்லியல் இடங்களையும், மதுரை மாவட்டத்தில் சங்க கால சின்னங்களையும், சமணத் தடங்களையும் தமிழக அரசு பாதுகாத்து வருகிறது.கொங்கர் புளியங்குளம்... மேலும் பார்க்க

ஜாலியன் வாலாபாக் படுகொலை; பழிதீர்ப்பும்; வீர மரணமும் - சர்தார் உதம் சிங் நினைவு தின கட்டுரை!

இந்திய வரலாற்றிலேயே பிரிட்டிஷாரால் நிகழ்த்தப்பட்ட மிகக்கொடியசம்பவமாக இன்றளவும் பார்க்கப்படுவது ஜாலியன் வாலாபாக் படுகொலை. இதில்கொல்லப்பட்டதன் நாட்டு மக்களுக்குநீதியைபெற்று தர, அந்த படுகொலைக்கு காரணமான ... மேலும் பார்க்க