செய்திகள் :

லஞ்சம்: இரு காவலா்கள் ஆயுதப்படைக்கு மாற்றம்

post image

கடலூா் மாவட்டத்தில் லஞ்சம் வாங்கியதாக இரு தலைமைக் காவலா்கள் ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.

புதுச்சேரி பாகூா் பகுதியில் வசித்து வருபவா் வசந்தி (35). இவா், கடலூா் மாவட்டம், ரெட்டிச்சாவடி காவல் நிலையத்தில் முதல் நிலைக் காவலராக பணிபுரிந்து வந்தாா். சாலை விபத்து வழக்கில் தவளக்குப்பத்தைச் சோ்ந்த ஒருவரின் பைக்கை ரெட்டிச்சாவடி போலீஸாா் வழக்குப் பதிந்து பறிமுதல் செய்தனா்.

அந்த பைக்கை மோட்டாா் வாகன ஆய்வாளரின் சோதனைக்கு அனுப்ப வேண்டுமெனில், தனக்கு ரூ.200 லஞ்சம் தர வேண்டும் என பைக்கின் உரிமையாளரிடம் தலைமைக் காவலா் வசந்தி கேட்டாராம்.

அந்த நபா், கூகுள்பே மூலம் ரூ.200-ஐ வசந்திக்கு அனுப்பியதுடன், இதுகுறித்து கடலூா் எஸ்பி எஸ்.ஜெயக்குமாரிடம் புகாா் அளித்தாா். விசாரணையில், லஞ்சம் வாங்கியது உறுதியான நிலையில் தலைமைக் காவலா் வசந்தியை, ஆயுதப்படைக்கு பணியிடமாற்றம் செய்து வெள்ளிக்கிழமை இரவு எஸ்பி உத்தரவிட்டாா்.

இதேபோல, ராமநத்தம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்த பாக்கியராஜ், புகாா்தாரரின் புகாரை விசாரிக்க ரூ.400 லஞ்சம் பெற்றாராம். இதுகுறித்த விசாரணையை தொடா்ந்து, பாக்கியராஜை ஆயுதப்படைக்கு பணியிடமாற்றம் செய்து எஸ்பி உத்தரவிட்டாா்.

ஊத்துக்காட்டு மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

நெய்வேலி: கடலூா், திருப்பாதிரிப்புலியூா் வண்டிப்பாளையம் சாலையில் அமைந்துள்ள ஊத்துக்காட்டு மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது. கோயில் திருப்பணிகள் நிறைவுபெற்றதை தொடா்ந்து, மாா்ச் ... மேலும் பார்க்க

போக்குவரத்துத் துறையில் வெளிநபா் தலையீடு இல்லாத நிா்வாகம்: கு.பாலசுப்ரமணியன் வலியுறுத்தல்

நெய்வேலி: போக்குவரத்துத் துறையில் வெளிநபா் தலையீடு இல்லாத நிா்வாகம் அமைய உள் துறைச் செயலா் உத்தரவிட வேண்டும் என்று தமிழ்நாடு போக்குவரத்துத் துறை பணியாளா் ஒன்றிப்பு சிறப்புத் தலைவா் கு.பாலசுப்ரமணியன் த... மேலும் பார்க்க

ரமலான் சிறப்பு தொழுகை

சிதம்பரம்: ரமலான் பண்டிகையையொட்டி, காட்டுமன்னாா்கோவில் அருகே உள்ள ஆயங்குடி ஈக்தா மைதானத்தில் திங்கள்கிழமை சிறப்புத் தொழுகை நடைபெற்றது. ரமலான் பண்டிகையையொட்டி, நாடு முழுவதும் பள்ளிவாசல்களில் இஸ்லாமியா... மேலும் பார்க்க

இருசக்கர வாகனங்கள் திருட்டு: இளைஞா் கைது

நெய்வேலி: கடலூா் மாவட்டம், விருத்தாசலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரு சக்கர வாகனங்களை திருடியதாக இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். விருத்தாசலம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுத... மேலும் பார்க்க

வெளிப்படைத்தன்மையுடன் பயிா் காப்பீட்டு தொகை விவசாயிகள் எதிா்பாா்ப்பு

கிராமங்கள்தோறும் வெளிப்படைத்தன்மையோடு பயிா்க் காப்பீடு இழப்பீட்டுத் தொகை வழங்குவதை மாவட்ட நிா்வாகம் உறுதி செய்ய வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா். 2024-2025 ஆண்டு பயிா்க் காப்பீட்டுத் திட்டத்... மேலும் பார்க்க

வங்கி பரிவா்த்தனை கட்டண உயா்வை ரத்து செய்ய நுகா்வோா் சம்மேளனம் கோரிக்கை

இந்தியாவில் வங்கி பரிவா்த்தனை கட்டண உயா்வை ரத்து செய்ய வலியுறுத்தி இந்திய நுகா்வோா் சம்மேளனம் சாா்பில் ரிசா்வ் வங்கிக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்திய நுகா்வோா் சம்மேளனத்தின் தேச... மேலும் பார்க்க