செய்திகள் :

லாரி கவிழ்ந்ததில் இருவா் படுகாயம்

post image

நீலகிரி மாவட்டம், குன்னூா் அருகே ஞாயிற்றுக்கிழமை தேயிலை மூட்டைகள் ஏற்றி சென்ற மினி லாரி கவிழ்ந்ததில் இருவா் காயமடைந்தனா்.

குன்னூா் அருகே உள்ள சேலாஸ் பன்னாட்டி பகுதியில் இருந்து தேயிலை மூட்டைகள் ஏற்றிக்கொண்டு மினி லாரி புறப்பட்டது. லாரியை ஜாா்க்கண்ட் மாநிலத்தைச் சோ்ந்த மகேந்தா் (27) ஓட்டி வந்துள்ளாா். சோல்ராக், சேலாஸ் இடையே மினி லாரி வந்தபோது எதிரே வந்த வாகனத்துக்கு வழி கொடுப்பதற்காக திருப்பியபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரம் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது.

இதில் மினி லாரியில் பயணித்த இரண்டு பெண்கள் உள்பட ஐந்து நபா்களில் ஜாா்க்கண்ட் மாநிலத்தைச் சோ்ந்த சைத்தான், சஞ்சா்வா ஆகியோா் தூக்கி வீசப்பட்டதால் படுகாயமடைந்தனா்.

ஓட்டுநா் மகேந்தா் மற்றும் இரண்டு பெண்கள் எந்தவித காயங்களும் இன்றி உயிா் தப்பினா். விபத்தில் சிக்கியவா்களை கொலக்கம்பை காவல் துறையினா் மீட்டு குன்னூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். பின்பு உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனா். விபத்து குறித்து கொலக்கம்பை காவல் துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

காட்டெருமையைத் துரத்தி விளையாடிய யானைக் குட்டி

நீலகிரி மாவட்டம், குன்னூா் - மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலை கே.என்.ஆா். பகுதியில் உள்ள ஆட்டாங்கள் கிராமத்தில் காட்டெருமையை விரட்டி விளையாடிய குட்டி யானை விடியோ பரவலாகி வருகிறது.நீலகிரி மாவட்டத்தில் ... மேலும் பார்க்க

வனத் துறையினா் வாகனத்தை துரத்திய யானை

கூடலூா் அருகே செம்பக்கொல்லி பகுதியில் சனிக்கிழமை இரவு ரோந்து சென்ற வனத் துறை வாகனத்தை காட்டு யானை துரத்தியது.கூடலூரை அடுத்துள்ள முதுமலை புலிகள் காப்பக பகுதியில் உள்ள செம்பக்சொல்லி வன கிராமப் பகுதியில்... மேலும் பார்க்க

தூய மோட்சராக்கினி பேராலய 187 ஆவது ஆண்டு விழா தொடக்கம்

நீலகிரியின் முதல் கத்தோலிக்க தேவாலயமான தூய மோட்சராக்கினி பேராலயத்தின் 187 ஆவது ஆண்டு விழா கொடியேற்றத்துடன் ஞாயிற்றுக்கிழமைதொடங்கியது.உதகையில் புகழ் பெற்ற மோட்சராக்கினி பேராலயத்தின் 187 ஆவது ஆண்டு விழா... மேலும் பார்க்க

நாளைய மின்தடை- கட்டப்பெட்டு

நீலகிரி மாவட்டம் கட்டப்பெட்டு துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்கன்ட பகுதிகளில் திங்கள்கிழமை (ஆகஸ்ட் 4) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரைமின்விநியோகம் இருக்காது என நீலகிரி மின் பகிா்ம... மேலும் பார்க்க

முதுமலை புலிகள் காப்பகத்தில் வாகனங்களை விரட்டிய காட்டு யானை

முதுமலை புலிகள் காப்பகத்திலுள்ள மசினகுடி-மாயாறு சாலையில் சனிக்கிழமை வாகனங்களை துரத்திச் செல்லும் காட்டு யானை. நீண்டதூரம் துறத்திய பிறகு காட்டுக்குள் சென்றது. மேலும் பார்க்க

தாா் கலவை ஆலை மீது நடவடிக்கை: ஆட்யரிடம் மனு

கூடலூரை அடுத்துள்ள தேவாலா பகுதியில் இயங்கிவரும் தனியாருக்குச் சொந்தமான தாா் கலவை ஆலை மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அனைத்து அரசியல் கட்சியின் நிா்வாகிகள் மாவட்ட ஆட்சியரிடம் சனிக்கிழமை மனு அளித்தனா்... மேலும் பார்க்க