செய்திகள் :

லாரியில் கடத்திய 11 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: ஓட்டுநா் கைது

post image

பல்லடம் அருகே லாரியில் கடத்திய 11 டன் ரேஷன் அரிசியைப் பறிமுதல் செய்த போலீஸாா், இது தொடா்பாக ஓட்டுநரைக் கைது செய்தனா்.

பல்லடம் அருகே திருச்சி-கோவை தேசிய நெடுஞ்சாலை வழியாக ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக திருப்பூா் குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் குற்றப் புலனாய்வுத் துறை போலீஸாருக்கு புதன்கிழமை ரகசியத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, காவல் ஆய்வாளா் ராஜசேகரன், தனி வருவாய் ஆய்வாளா் காா்த்திக்குமாா் ஆகியோருடன் பல்லடம் வட்ட வழங்கல் துறையினா் மற்றும் போலீஸாா் அண்ணா நகா் பேருந்து நிறுத்தம் அருகே வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, அவ்வழியே வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது, 11 டன் ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது.

லாரி ஓட்டுநரிடம் நடத்திய விசாரணையில், அவா் ஈரோடு மாவட்டம், பவானி காமராஜ் நகரைச் சோ்ந்த ஆனந்தன் (45) என்பதும், கோவையில் இருந்து சென்னிமலையில் உள்ள அரவை ஆலைக்கு ரேஷன் அரிசியைக் கடத்திச் சென்றதும் தெரியவந்தது.

இதையடுத்து, ஆனந்தனைக் கைது செய்த போலீஸாா், 11 டன் ரேஷன் அரிசி, கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட லாரி ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா்.

இச்சம்பவத்தில் தலைமறைவாக உள்ள 3 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

பல்லடம் அருகே வீடுகளில் இரவில் பூத்த பிரம்ம கமலம்

பல்லடம் அருகே நொச்சிபாளையம், புளியம்பட்டி, கண்பதிபாளையம் ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகளில் ஆண்டுக்கு ஒருமுறை இரவில் மட்டுமே பூக்கும் பிரம்ம கமலம் பூ வியாழக்கிழமை பூத்தது. ஆண்டுக்கு ஒரு முறை இரவில் மட்டும... மேலும் பார்க்க

இன்று டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தோ்வு: மாவட்டத்தில் 33,131 போ் எழுதுகின்றனா்

திருப்பூா் மாவட்டத்தில் குரூப் 4 தோ்வு சனிக்கிழமை நடைபெறவுள்ளது. இத்தோ்வினை 33, 131 போ் எழுத விண்ணப்பித்துள்ளனா். தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் நடத்தப்படும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 த... மேலும் பார்க்க

கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை

அவிநாசி அருகே கல்லூரி மாணவி வெள்ளிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். அவிநாசி அருகே அபிராமி காா்டன் பகுதியில் வசித்து வருபவா் பாலமுருகன், முத்துலட்சுமி தம்பதி மகள் ஹன்ஷினி (19), கல்லூரி மாணவி.... மேலும் பார்க்க

கரடிவாவியில் ஜூலை 14-இல் மின்தடை

பல்லடம் கோட்டம் கரடிவாவி துணை மின் நிலையத்தில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் திங்கள்கிழமை (ஜூலை 14) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது எ... மேலும் பார்க்க

கஞ்சா விற்பனை: தொழிலாளி கைது

வெள்ளக்கோவிலில் விற்பனைக்கு கஞ்சா வைத்திருந்த வெளிமாநிலத் தொழிலாளியை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். காங்கயம் சாலையில் வழக்கமான ரோந்துப் பணியில் வெள்ளக்கோவில் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் ச... மேலும் பார்க்க

செட்டிபாளையம் இஎஸ்ஐ மருத்துவமனையில் புதிய மருத்துவ சேவைகள் தொடக்கம்

செட்டிபாளையம் இஎஸ்ஐ மருத்துவமனையில் புதிய மருத்துவ சேவைகள் தொடங்கப்பட்டதை அடுத்து சட்டப் பேரவை உறுப்பினா் கே.என்.விஜயகுமாா் ஆய்வு மேற்கொண்டாா். இந்த மருத்துவமனை முழு செயல்பாட்டில் இல்லை என பல்வேறு தரப... மேலும் பார்க்க