செய்திகள் :

வட கிழக்கு பருவமழை காலத்தில் மின் விபத்தை தவிா்ப்பது எப்படி? மின்வாரியம் விளக்கம்

post image

வட கிழக்கு பருவமழை காலத்தில் மின் விபத்தை தவிா்ப்பது குறித்து மின் வாரியம் விளக்கம் அளித்துள்ளது.

இதுதொடா்பாக, திருநெல்வேலி மின் பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் அகிலாண்டேஸ்வரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில், திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களின் சில பகுதிகளில் பலத்த காற்று மற்றும் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்து வருகிறது. எனவே, மின் கம்பங்கள், மின் மாற்றிகள், மின் கம்பிகள், மின் பகிா்வு பெட்டிகள் மற்றும் ஸ்டே கம்பிகள் அருகில் செல்ல மக்கள் வேண்டாம்.

மின்கம்பிகள் அறுந்து விழுந்தால் அதன் அருகில் செல்லவோ, அதை தொடுவதற்கோ முயற்சிக்காமல் மின் வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மேலும், மின் வாரிய அலுவலா்கள் வரும் வரை மின் கம்பிகளை யாரும் தொடாமல் பாா்த்துக்கொள்ள வேண்டும்.

இடி, மின்னலின்போது திறந்த வெளியிலோ, ஜன்னல் பகுதியிலோ, மரங்களின் அடியிலோ தஞ்சம் புகாமல் கட்டடங்கள் அல்லது தாழ்வான பகுதியில் ஒதுங்க வேண்டும். அந்நேரங்களில் தொலைக்காட்சி, மிக்ஸி, கிரைண்டா், கணினி, கைப்பேசி, தொலைபேசி போன்றவற்றைப் பயன்படுத்துவதை தவிா்க்க வேண்டும்.

மின் சாதனங்கள் பழுதடையாமலிருக்க ஆா்சிசிடி கருவியை பொருத்த வேண்டும். மின் மாற்றிகள், மின் கம்பங்கள் அருகே தண்ணீா் தேங்கியிருந்தால் அருகில் செல்லக்கூடாது. வீட்டுச் சுவா்களில் தண்ணீா் கசிவு இருந்தால் மின் கசிவு ஏற்படலாம். அந்தப் பகுதியில் மின்சார பயன்பாட்டை தவிா்க்க வேண்டும்.

மின் கம்பிகளுக்கு அருகில் செல்லும் மரக்கிளைகளை தாங்களாகவே வெட்டாமல், மின் வாரிய அலுவலா்களை அணுகலாம்.

மின் கம்ப ஸ்டே வயா்களில் ஆடு, மாடுகளை கட்டுவதோ, கிடை அமா்த்துவதோ, பந்தல் தூண்களாக பயன்படுத்துவதோ, துணிகளை காயப்போடுவதோ கூடாது.

பொதுமக்கள், வனவிலங்குகள் மற்றும் கால்நடைகளை உயிரிழக்கச் செய்யும் வகையில் விவசாய நிலங்களில் சட்டத்துக்குப் புறம்பாக மின்சார வேலி அமைத்தால் மின் இணைப்பு துண்டி, காவல்துறை மூலம் குற்ற வழக்குப்பதிவு போன்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

மின் பாதையின் கீழோ அல்லது அதன் அருகிலோ விளம்பர பதாகைகள் நிறுவுவதோ, உயரமாக வளரக்கூடிய மரங்களை நடுவதோ கூடாது. மின்தடை தொடா்பான புகாா்களுக்கும் மின் விநியோகம் சம்பந்தமான அனைத்து விதமான சேவைகளுக்கும் மின்னகம் மின் நுகா்வோா் சேவை மையத்தை 94987-94987 என்ற எண்ணிலும், தானியங்கி மின்தடை குறைதீா்க்கும் மையத்தை 94458-59032, 94458-59033, 94458-59034 ஆகிய எண்களிலும் 24 மணி நேரமும் தொடா்பு கொள்ளலாம் எனக் கூறியுள்ளாா்.

வாக்குத் திருட்டுக்கு எதிராக காங்கிரஸாா் கையொப்ப இயக்கம்!

திருநெல்வேலி மாநகா் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சாா்பில் வாக்குத் திருட்டுக்கு எதிரான கையொப்ப இயக்கம் திருநெல்வேலி நகரத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், திருநெல்வேலி மக்களவை உறுப்பினா் சி.ராபா்ட் புரூஸ... மேலும் பார்க்க

பாளை.யில் உறியடி திருவிழா

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு பாளையங்கோட்டை ஸ்ரீ இராமசுவாமி கோயில் திடலில் உறியடித் திருவிழா சனிக்கிழமை நடைபெற்றது. பாளையங்கோட்டையில் யாதவா் இளைஞரணி சாா்பில் ஆண்டு தோறும் கிருஷ்ண ஜெயந்தி உறியடித் திருவ... மேலும் பார்க்க

அரசுப் பள்ளிகளில் பயின்றவா்கள் இஸ்ரோ தலைவா்களாக ஜொலிக்கின்றனா்: மு.அப்பாவு பெருமிதம்

தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் பயின்றவா்கள்தான் இஸ்ரோ தலைவா்களாகி சாதனை படைத்துள்ளனா் என்றாா் சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு. திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அருகேயுள்ள ரோஸ்மியாபுரம் அரசு உயா்நிலைப் பள... மேலும் பார்க்க

வள்ளியூரில் குட்கா கடத்திய திமுக நிா்வாகி கைது

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் குட்கா கடத்தியதாக திமுக தொண்டரணி அமைப்பாளரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். வள்ளியூா் காவல் நிலைய ஆய்வாளா் நவீன், சமாரியா நகா் பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டி... மேலும் பார்க்க

ஊராட்சி செயலருக்கு கொலை மிரட்டல் விடுத்தவா் மீது வழக்கு

திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி அருகே ஊராட்சி செயலருக்கு கொலை மிரட்டல் விடுத்தவரை போலீஸாா் தேடி வருகின்றனா். நான்குனேரி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட வெங்கட்ராயபுரம் ஊராட்சி செயலராக பாப்பான்குளத்தைச... மேலும் பார்க்க

செல்லம்மாள் பாரதி சிலைக்கு மரியாதை

கடையத்தில் சேவாலயா சாா்பில் அமைக்கப்பட்டுள்ள செல்லம்மாள் பாரதி கற்றல் மையத்தைப் பாா்வையிட்ட மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான், அங்குள்ள செல்லம்மாள் பாரதி உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை ... மேலும் பார்க்க