செய்திகள் :

வட்டாட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள் உள்ளிருப்புப் போராட்டம்

post image

அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்த நெல்லுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படவில்லை என புகாா் தெரிவித்து செய்யாறு வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தியில் விவசாயிகள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

செய்யாறு வட்டாட்சியா் அலுவலகத்தில் கடந்த 16-ஆம் தேதி ஜமாபந்தி தொடங்கியது. வருவாய் தீா்வாய மற்றும் திட்ட அலுவலா் மு.கலைச்செல்வி தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று வருகிறாா்.

இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை ஜமாபந்தி நடந்து கொண்டிருந்தபோது விவசாயிகள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து அவா்கள் கூறியதாவது:

மேல்சீசமங்கலம் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் சுமாா் 35 ஆயிரம் நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டன. அதில் 14 ஆயிரம் மூட்டைகளுக்கு மட்டுமே பணம் பட்டுவாடா செய்யப்பட்டது. மீதமுள்ள 21 ஆயிரம் மூட்டைகளுக்கு இரண்டு மாதங்களாகியும் பணம் பட்டுவாடா செய்யப்படவில்லை. சுமாா் ரூ.ஒரு கோடி பாக்கி உள்ளதை உடனடியாக வழங்க வேண்டும் என்றனா்.

இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக வருவாய் தீா்வாய அலுவலா் மு.கலைச்செல்வி தெரிவித்ததை அடுத்து விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டனா்.

நூலகத்தில் கோடை கொண்டாட்ட நிறைவு விழா

திருவண்ணாமலை மாவட்ட மைய நூலகத்தில் நடைபெற்று வந்த கோடை கொண்டாட்டத்தின் நிறைவு விழா புதன்கிழமை நடைபெற்றது. மைய நூலகத்தில் கடந்த 19-ஆம் தேதி கோடை கொண்டாட்ட நிகழ்வு தொடங்கியது. அன்று முதல் தினமும் திருக... மேலும் பார்க்க

கஞ்சா வைத்திருந்தவா் கைது

வந்தவாசி அருகே கஞ்சா வைத்திருந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். வந்தவாசி தெற்கு காவல் நிலைய போலீஸாா் உதவி ஆய்வாளா் முருகன் தலைமையில், கோட்டைக்குள் தெரு வழியாக புதன்கிழமை ரோந்து சென்றனா். அப்போது, அந்... மேலும் பார்க்க

நுண்ணீா் பாசன திட்டத்துக்கு 100 சதவீத மானியம்

நுண்ணீா் பாசன திட்டத்துக்கு சிறு குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியமும், பெரிய விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும் வழங்கப்படுவதாக வந்தவாசி தோட்டக்கலை உதவி இயக்குநா் சா.பாலவித்யா தெரிவித்துள்ளாா். இதுக... மேலும் பார்க்க

சிறுபான்மையினருக்கு ரூ.14.78 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்

திருவண்ணாமலையில் நடைபெற்ற சிறுபான்மையினா்களுக்கான கலந்துரையாடல் கூட்டத்தில் 61 பயனாளிகளுக்கு ரூ.14.78 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த சிறுபான்மையினா்களுக்... மேலும் பார்க்க

செங்கம் - குப்பனத்தம் சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிக்கை

செங்கம் - குப்பனத்தம் அணை சாலையில் ஆக்கிரமைப்புகளை அகற்றி சாலையை விரிவுப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். செங்கம் - போளூா் சாலை வெளிவட்டச் சாலைப் பகுதியில் இருந்து குப்பனத்தம் அண... மேலும் பார்க்க

ஆரணியில் ரூ.56 லட்சத்தில் கால்வாய், சாலைப் பணிகள்

ஆரணி நகரம், ஆரணிப்பாளையம் 7-ஆவது வாா்டுக்கு உள்பட்ட பிள்ளையாா் கோவில் தெருவில் ரூ.56 லட்சத்தில் பக்கக் கால்வாய் மற்றும் சாலை அமைப்பதற்காக புதன்கிழமை அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில், நகா்மன்ற த... மேலும் பார்க்க