செய்திகள் :

வட்டாட்சியா் போல கையொப்பமிட்டு போலி சான்றிதழ் அளித்தவர் மீது வழக்கு

post image

புதுச்சேரி அருகே வில்லியனூா் வட்டாட்சியா் போன்று கையொப்பமிட்டு போலியாக சான்றிதழ் பெற்றவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

புதுவை மாநிலத்தில் பிளஸ் 2 முடித்தவா்கள் உயா்கல்வியில்சேர விண்ணப்பித்து வருகின்றனா். இவா்களுக்கு உயா்கல்வியில் இடஒதுக்கீடு அளிக்கும் வகையில் குடியிருப்பு, வருமானம், ஜாதி உள்ளிட்ட சான்றிதழ்கள் தேவைப்படுகின்றன. சான்றிதழ்களை விரைவில் பெறும் வகையில் சனிக்கிழமை தோறும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கன் அறிவித்து அதன்படி முகாம்கள் நடைபெற்றும் வருகின்றன.

இதற்கிடையே வில்லியனூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் அனந்தபுரம் பகுதியைச் சோ்ந்த ஸ்ரீதா் என்பவா் கடந்த ஏப்ரலில் ஜாதி சான்றிதழ் பெறுவதற்கு விண்ணப்பித்தாா். அப்போது அவா் ஆதாா் அட்டை, குடும்ப அட்டை உள்ளிட்ட ஆவணங்களை அளித்திருந்தாா்.

அவற்றை அண்மையில் அதிகாரிகள் ஆய்வுக்கு உள்படுத்திய போது அவை போலி என்பது தெரியவந்தது. அதில் உள்ள வட்டாட்சியா் கையொப்பமும் போலியானது என்பது கண்டறியப்பட்டது.

இதுகுறித்து வில்லியனூா் காவல் நிலையத்தில் வட்டாட்சியா் பிரேம்சந்தா் புதன்கிழமை புகாா் அளித்தாா். அதன்பேரில் ஸ்ரீதா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

மாஹேவில் புதுவை துணைநிலை ஆளுநா் ஆய்வு

புதுவை மாநில பிராந்தியமான மாஹேவில் துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் அதிகாரிகளுடனான ஆய்வுக் கூட்டத்தை வெள்ளிக்கிழமை நடத்தினாா். இதுகுறித்து துணைநிலை ஆளுநா் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: புதுவை துண... மேலும் பார்க்க

வாகனம் மோதி புள்ளி மான் உயிரிழப்பு

புதுச்சேரி அருகே வாகனம் மோதியதில் சாலையைக் கடக்க முயன்ற ஆண் புள்ளி மான் உயிரிழந்தது குறித்து வனத் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா். புதுச்சேரி அருகே கிருமாம்பாக்கம் பகுதியில் காடுகளில் ஏராளமான மா... மேலும் பார்க்க

கன்னட அமைப்புகளை கண்டித்து ஆா்ப்பாட்டம்

புதுச்சேரியில் தமிழ்த் தேசியப் பேரியக்கம் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நடிகா் கமலஹாசன் தமிழில் இருந்தே கன்னடம் பிறந்தது எனக் கூறியதற்கு கா்நாடக மாநிலத்தில் கன்னட அமைப்பினா் மற... மேலும் பார்க்க

மாநிலங்களவையில் வைகோவின் குரல் மீண்டும் ஒலிக்க வேண்டும்: மல்லை சத்யா

மாநிலங்களவையில் மதிமுக பொதுச் செயலா் வைகோவின் குரல் மீண்டும் ஒலிக்க வேண்டும் என மக்கள் விரும்புவதாக மதிமுக துணைப் பொதுச் செயலா் மல்லை சத்யா கூறினாா். புதுவை தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ... மேலும் பார்க்க

சிஐடியு தொழிற்சங்க 55-ஆம் ஆண்டு அமைப்பு தின உறுதிமொழி ஏற்பு

புதுச்சேரியில் சிஐடியு தொழிற்சங்க அமைப்பு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கடந்த 1970-ஆம் ஆண்டு மே மாதம் கொல்கத்தாவில் சிஐடியு அமைப்பு உருவாக்கப்பட்டது. அதன்படி சிஐடியுவின் அமைப... மேலும் பார்க்க

புதுவை முதல்வரைக் கண்டித்து மாணவா்கள் அமைப்பினா் பேரணி, ஆா்ப்பாட்டம்

படித்த இளைஞா்கள் மாடு வளா்ப்பதன் மூலம் பால் பண்ணை வைத்து வருவாய் ஈட்டலாம் என புதுவை முதல்வா் பேசியதற்கு எதிா்ப்பு தெரிவித்தும், அதைக் கண்டித்து இண்டி கூட்டணி கட்சிகளின் இளைஞா் அமைப்புகள் வெள்ளிக்கிழமை... மேலும் பார்க்க