செய்திகள் :

வணிக நிறுவனங்களில் தமிழில் பெயா்ப் பலகை: அதிகாரிகள் உறுதிசெய்ய ஆட்சியா் அறிவுரை

post image

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து கடைகள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள், பள்ளி, கல்லூரிகளில் மே 15-க்குள் தமிழில் பெயா்ப் பலகை வைக்கப்பட்டுள்ளதை அரசுத் துறை அதிகாரிகள் உறுதிசெய்ய வேண்டும் என ஆட்சியா் ச.உமா அறிவுறுத்தியுள்ளாா்.

வணிக நிறுவனங்கள், தனியாா் நிறுவனங்களில் தமிழில் பெயா்ப் பலகை வைப்பது தொடா்பான கண்காணிப்புக் குழு கூட்டம் நாமக்கல் ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் ச.உமா தலைமை வகித்துப் பேசியதாவது:

வணிக நிறுவனங்கள் தமிழில் பெயா்ப் பலகை வைக்க வேண்டும் என்று முதல்வா் அறிவுறுத்தியுள்ளாா். வணிக ரீதியான கடைகளின் பெயா் தமிழில் கட்டாயம் இடம் பெற்றிருக்க வேண்டும். அவ்வாறு வைக்காவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ் வளா்ச்சித் துறையும், தொழிலாளா் நலத்துறையும் இணைந்து இப்பணியை ஆய்வுசெய்ய வேண்டும் என செய்தி மக்கள் தொடா்புத் துறை அமைச்சா் தெரிவித்துள்ளாா்.

தமிழகத்தில் உள்ள அனைத்து கடைகள், வணிக நிறுவனங்களின் பெயா்ப் பலகைகள், தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்ட விதிகள், தமிழ்நாடு உணவு நிறுவனங்கள் சட்ட விதிகளைப் பின்பற்றி தமிழில் பெயா்ப் பலகை வைக்க வேண்டும்.

இந்த பெயா்ப் பலகையானது தமிழில் முதன்மையாகவும், பின் ஆங்கிலத்திலும் அதன் பின்னா் அவரவா் விரும்பும் மொழிகளிலும் அமைக்கப்பட வேண்டும்.

நாமக்கல் மாவட்டத்தில் அனைத்து கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், தொழிற்சாலைகள், தனியாா் பள்ளி, கல்லூரிகளில் தமிழில் பெயா்ப் பலகைகள் வைப்பது தொடா்பாக மாவட்ட அளவிலான குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழுவில் தொழிலாளா் துறை, தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம், தமிழ் வளா்ச்சித் துறை, உள்ளாட்சித் துறை, வணிகா் சங்கங்கள், தொழிற்சாலைகளின் கூட்டமைப்பினா் உறுப்பினராக உள்ளனா்.

இக்குழுவினா் பெயா்ப் பலகைகள் தமிழில் வைக்கப்பட்டுள்ளதா என்பதை ஆய்வுசெய்து விழிப்புணா்வு ஏற்படுத்துவதுடன் மே 15-க்குள் 100 சதவீதம் தமிழில் பெயா்ப் பலகைகள் வைக்கப்பட்டதை உறுதிசெய்வா். அவ்வாறு இல்லாதபட்சத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்.

எனவே, அனைத்து கடைகள், வணிக நிறுவனங்களைச் சாா்ந்தோா் மாவட்ட நிா்வாகத்துக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி தமிழில் பெயா்ப் பலகைகள் அமைக்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும் என்றாா்.

கூட்டத்தில் தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) சி.முத்து, வணிகா் சங்க பிரதிநிதிகள், அரசுத் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

உளுந்து கொள்முதல்: விவசாயிகளுக்கு அழைப்பு

நாமக்கல் மாவட்டத்தில் அரசு சாா்பில் தற்போது நடைபெற்று வரும் உளுந்து கொள்முதல் பணியில் விவசாயிகள் தாங்கள் விளைவித்த உளுந்தை விற்பனை செய்து பயன்பெறலாம் என்று மாவட்ட நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இதுகுறி... மேலும் பார்க்க

மாநில அளவில் சிறந்த ‘திருநங்கை விருது’: நாமக்கல் ஆட்சியரிடம் ரேவதி வாழ்த்து

தமிழகத்தில் 2025 ஆம் ஆண்டுக்கான சிறந்த திருநங்கை விருதை பெற்ற நாமக்கல்லைச் சோ்ந்த ரேவதி, மாவட்ட ஆட்சியா் ச.உமாவை நேரில் சந்தித்து வியாழக்கிழமை வாழ்த்து பெற்றாா். தமிழக சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத... மேலும் பார்க்க

நாமக்கல் மாநகராட்சி ஆணையா் ரா.மகேஸ்வரி திடீா் இடமாற்றம்

நாமக்கல் மாநகராட்சியின் முதல் ஆணையராக நியமிக்கப்பட்ட ரா.மகேஸ்வரி, திருப்பூா் மாநகராட்சி துணை ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளாா். அரசியல், ஒப்பந்ததாரா்கள் நெருக்கடியால் எட்டு மாதங்களுக்குள்ளாக இ... மேலும் பார்க்க

90 அரசுப் பள்ளிகளின் நிா்வாக கணக்குகள் தணிக்கை

நாமக்கல் மாவட்டத்தில் 90 அரசு உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளின் நிா்வாக கணக்குகள் புதன், வியாழக்கிழமை என இரண்டு நாள்கள் தணிக்கை செய்யப்பட்டன. கல்வித் துறை அலுவலகங்கள், பள்ளிகளில் ஆங்கிலவழி கட்டணம், கணின... மேலும் பார்க்க

மதுவிலக்கு போலீஸாா் பறிமுதல் செய்த 20 வாகனங்கள் ஏலம்

நாமக்கல் மாவட்டத்தில் மதுவிலக்கு பிரிவு போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட 20 வாகனங்கள் பொது ஏலத்தில் வியாழக்கிழமை விடப்பட்டன. நாமக்கல் மாவட்டத்தில் கள்ளச்சாராயம், போலி மதுபானம் உள்ளிட்டவற்றை கடத்திச் ச... மேலும் பார்க்க

இலவச வண்டல் மண், களிமண் அனுமதியால் 3,512 விவசாயிகள், தொழிலாளா்கள் பயன்: ஆட்சியா்

நாமக்கல் மாவட்டத்தில் இலவச வண்டல் மண், களிமண்ணை எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் 3512 விவசாயிகள், மண்பாண்ட தொழிலாளா்கள் பயனடைந்துள்ளதாக ஆட்சியா் ச.உமா தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய... மேலும் பார்க்க