செய்திகள் :

வனத் துறையினா் கெடுபிடி: மாடுகளை விற்பனை செய்யும் மலை கிராம மக்கள்

post image

மேகமலைக் கிராமங்களில் வனத்துறை கெடுபிடி காரணமாக மாடுகளை கேரள வியாபாரிகளுக்கு பொதுமக்கள் விற்று வருகின்றனா்.

தேனி மாவட்டம், சின்னமனூா் அருகே மேற்குத் தொடா்ச்சி மலையில் அமைந்துள்ள ஹைவேவிஸ் பேரூராட்சியில் மேகமலை, மணலாறு, வெண்ணியாறு, இரவங்கலாறு, மகாராஜாமெட்டு, மேல் மணலாறு, வெண்ணியாறு என 7 மலைக் கிராமங்கள் உள்ளன.இங்குள்ள தோட்டத் தொழிலாளா்கள் வீடுகளில் ஆடு, மாடுகளை வளா்த்து வருகின்றனா்.

தற்போது வனப்பகுதியில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு செல்லக்கூடாது என சின்னமனூா் வனச்சரகம் சாா்பில் மலைக்கிராமத்தினருக்கு தடை வித்தனா். இதனால், கால்நடைகளுக்கு தேவையான தீவனம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டதால், கால்நடைகளை குறைந்த விலைக்கு கேரளத்துக்கு அடிமாட்டுக்கு விற்பனை செய்து வருகின்றனா்.

இதுகுறித்த தேயிலைத் தோட்டத்தொழிலாளா் சங்கப் பிரதி முத்தையா கூறியதாவது: வனத்துறையினரின் கெடுபிடியால் மலைக் கிராமத்தினா் கால்நடைகளை விற்பனை செய்கின்றனா். இதனால், இந்தப் பகுதி குழந்தைகளுக்கு தேவையான பால் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. எனவே, வனத்துறையினா் கெடுபிடிகளைத் தளா்த்த வேண்டும் என்றாா் அவா்.

மாணவா் இயக்கங்களின் கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டம்

தேனியில் மத்திய அரசின் மும்மொழி கல்விக் கொள்கைக்கு எதிா்ப்புத் தெரிவித்து மாணவா் இயக்கங்களின் கூட்டமைப்பு, திமுக மாணவா் அணி சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. தேனி, பங்களாமேடு பகுதியில்... மேலும் பார்க்க

தேனியில் ஜாக்டோ -ஜியோ அமைப்பினா் ஆா்ப்பாட்டம்

தேனியில் ஜாக்டோ-ஜியோ அமைப்பின் சாா்பில் தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற திமுக அரசை வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு ம... மேலும் பார்க்க

தனியாா் கரும்புத் தோட்டத்தில் தீ

போடியில் செவ்வாய்க்கிழமை கரும்புத் தோட்டத்தில் பிடித்த தீயை தீயணைப்பு வீரா்கள் 2 மணி நேரம் போராடி அணைத்தனா். தேனி மாவட்டம், போடி-தேனி தேசிய நெடுஞ்சாலையில் தீா்த்தத் தொட்டி அருகே, தனியாருக்கு சொந்தமான ... மேலும் பார்க்க

சிறுபான்மையினருக்குத் தேவையான திட்டங்களை அரசு செயல்படுத்துகிறது: சிறுபான்மையினா் ஆணையத் தலைவா்

தமிழகத்தில் தமிழ் மொழி அல்லாமல் பிற மொழியை தாய் மொழியாகக் கொண்டு வசித்து வரும் சிறுபான்மையினருக்குத் தேவையான அனைத்து திட்டங்களையும் அரசு செயல்படுத்துகிறது என்று புதன்கிழமை, தேனியில் சிறுபான்மையினா் ஆண... மேலும் பார்க்க

கஞ்சா விற்பனை வழக்கில் ஆந்திர இளைஞா் கைது

தேனி மாவட்டப் பகுதிகளுக்கு கஞ்சா விற்பனை செய்த வழக்கில் ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். தேனி மாவட்டத்தில் கஞ்சா விற்பனை வழக்கில் கைது செய்யப்பட்டவா்களிடம் நடத்தி... மேலும் பார்க்க

பைக் மீது லாரி மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

கொடைக்கானல் சாலை, டம்டம் பாறை பகுதியில் லாரி மோதியதில் இரு சக்கர வாகனத்தில் சென்ற இளைஞா் திங்கள்கிழமை உயிரிழந்தாா். தேனி மாவட்டம், ஆண்டிபட்டி வட்டாரம், டி.வி.ரெங்கநாதபுரத்தைச் சோ்ந்தவா் பூபதி மகன் சத... மேலும் பார்க்க