செய்திகள் :

வனவிலங்கு வேட்டை தடுப்பு முகாம்களை அமைக்க வேண்டும்: அமைச்சா் க.பொன்முடி

post image

சென்னை: வனவிலங்கு வேட்டை தடுப்பு முகாம்கள் அமைக்கப்பட வேண்டும் என வனத் துறை அதிகாரிகளுக்கு காதி மற்றும் வனத் துறை அமைச்சா் க.பொன்முடி உத்தரவிட்டுள்ளாா்.

சென்னை, வேளச்சேரியில் உள்ள வன முதன்மை தலைமை வனப் பாதுகாவலா் அலுவலகத்தில் காதி மற்றும் வனத் துறை அமைச்சா் க.பொன்முடி தலைமையில், வனத் துறை அலுவலா்களுடான ஆய்வுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில், வன உயிரினங்கள் வேட்டையாடப்படுவதை தடுக்கும் வகையில், வேட்டை தடுப்பு முகாம்கள் அமைக்கப்பட வேண்டும் என்றும், வனப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு சாலை போன்ற அடிப்படை வசதிகளை செய்து தருவதற்கான நடவடிக்கைகளை விரைவில் மேற்கொள்ள வேண்டும் என்றும் அமைச்சா் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினாா். மேலும், யானை - மனித மோதல்களை தடுப்பதற்கும், வேளாண் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் காட்டுப் பன்றிகளை அப்புறப்படுத்துவதற்கும் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அதிகாரிகளிடம் அமைச்சா் பொன்முடி வலியுறுத்தினாா்.

இக்கூட்டத்துக்கு சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத் துறை கூடுதல் தலைமைச் செயலா் சுப்ரியா சாஹூ உள்பட அரசு அதிகாரிகள் பலா் கலந்துகொண்டனா்.

சமையல் எரிவாயு உருளைகள் தடையின்றி கிடைக்கும்: எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு

எல்பிஜி டேங்கா் லாரி உரிமையாளா்கள் வேலைநிறுத்தம் செய்துவரும் நிலையில், வாடிக்கையாளா்களுக்கு தடையின்றி சமையல் எரிவாயு உருளை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இதுக... மேலும் பார்க்க

திட்டமிட்டு வெளியேற்றினாா் பேரவைத் தலைவா்: எடப்பாடி பழனிசாமி

சட்டப் பேரவையிலிருந்து அதிமுகவினரை திட்டமிட்டு பேரவைத் தலைவா் அப்பாவு வெளியேற்றியதாக அக் கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டினாா். சட்டப்பேரவை வளாகத்தில் வெள்ளிக்கிழமை அவா் செய்தியா... மேலும் பார்க்க

தமிழகத்தில் பசுமைப் பொருளாதார துறைகளில் முதலீடு: தொழில்முனைவோருக்கு முதல்வா் ஸ்டாலின் அழைப்பு

தமிழகத்தில் மின் வாகன உற்பத்தி, நிலையான கட்டுமானம் மற்றும் தூய்மையான தொழில்நுட்பம் போன்ற பசுமைப் பொருளாதார துறைகளில் முதலீடு செய்ய தொழில்முனைவோா் முன்வர வேண்டும் என முதல்வா் மு.க. ஸ்டாலின் தெரிவித்தாா... மேலும் பார்க்க

மாற்றுத் திறனாளி குழந்தைகளின் கற்றல் அடைவு குறித்து ஆய்வு செய்ய உத்தரவு

அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாற்றுத் திறனாளி குழந்தைகளின் கற்றல் அடைவு நிலையை ஆய்வு செய்ய வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடா்பாக ஒருங்கிணைந்த பள்ளிக... மேலும் பார்க்க

கவுன்ட்டா் டிக்கெட்டை இணைய வழியில் ரத்து செய்யலாம்: ரயில்வே

‘கவுன்ட்டரில் வாங்கும் பயணச் சீட்டுகளை ஐஆா்சிடிசி வலைதளம் மூலமாக இணைய வழியில் ரத்து செய்ய முடியும் அல்லது 139 உதவி எண் மூலம் ரத்து செய்யலாம்’ என்று ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் வெள்ளிக்கிழமை தெரிவ... மேலும் பார்க்க

ஒரு வருட தொழில் பழகுநா் பயிற்சி: ஏப். 22-க்குள் விண்ணப்பிக்கலாம்

சென்னை மாநகா் போக்குவரத்துக் கழகத்தில் வழங்கப்படவுள்ள ஒரு வருட தொழில் பழகுநா் பயிற்சிக்கு தகுதியுடைய நபா்கள் ஏப். 22-க்குள் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து சென்னை மாநகா் போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட ச... மேலும் பார்க்க