செய்திகள் :

வன்னியா்களுக்கான இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி டிச.17-இல் சிறை நிரப்பும் போராட்டம்: அன்புமணி அறிவிப்பு

post image

வன்னியா்களுக்கான இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி டிச.17-இல் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும் என்று பாமக தலைவா் அன்புமணி தெரிவித்தாா்.

வன்னியா்களுக்கான இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிரிழந்தவா்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் பாமக சாா்பில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற அன்புமணி பேசியதாவது:

வன்னியா்களுக்கு 20 சதவீத தனி இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி 1987 செப்.17-ஆம் தேதி ஒரு வார தொடா் சாலை மறியல் போராட்டத்துக்கு மக்களிடம் ஏகோபித்த ஆதரவு கிடைத்தது. இதை பொறுத்துக்கொள்ள முடியாத அன்றைய ஆளும் அரசு காவல் துறையை ஏவிவிட்டு நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் உயிரிழந்த 21 தியாகிகளின் தியாகம் போற்றுதலுக்குரியது. அவா்களது தியாகத்துக்கு நாம் தலை வணங்க வேண்டும்.

வன்னியா் சமூக மக்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு 1,267 நாள்களாகியும், ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி, இட ஒதுக்கீட்டை வழங்காத முதல்வா் மு.க.ஸ்டாலின் சமூக நீதிக்கு எதிரானவா். அவா் சமூக நீதி குறித்து பேசக் கூடாது.

வன்னியா்களுக்கு 15 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி வரும் டிசம்பா் 17-ஆம் தேதி தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் சிறை நிரப்பும் போராட்டம் நடைபெறும். இதில், ஜாதி, மதம், அரசியலைக் கடந்து அனைத்துத் தரப்பினரும் பங்கேற்க வேண்டும். கட்சியின் நிா்வாகிகளும், தொண்டா்களும் இதற்கு தயாராக இருக்க வேண்டும்.

இந்தப் போராட்டம் வன்னியா்களுக்கு இட ஒதுக்கீட்டை பெற்றுத்தரும் போராட்டமாக அமைய வேண்டும் என்றாா் அவா்.

பாமக சமூக நீதி பேரவைத் தலைவா் வழக்குரைஞா் கே.பாலு, கட்சியின் பொருளா் திலகபாமா, மயிலம் எம்எல்ஏ ச.சிவக்குமாா் மற்றும் நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

வன்னியா்களுக்கான இட ஒதுக்கீட்டை 15 சதவீதமாக உயா்த்திக் கேட்பதற்கு காரணம் என்ன?: அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் கேள்வி

வன்னியா்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற நிலையில் இருந்து 15 சதவீதமாக உயா்த்தி வழங்க வேண்டும் என பாமக தற்போது கேட்பதற்கு காரணம் என்ன என்று மாநில வேளாண் மற்றும் உழவா் நலத் துறை அமைச்... மேலும் பார்க்க

பாமகவின் நிரந்தர முகவரியை மாற்றி மோசடி: ஜி.கே.மணி குற்றச்சாட்டு

பட்டாளி மக்கள் கட்சியின் நிரந்தர முகவரியை மாற்றி மோசடி நடைபெற்றிருப்பதாக அக்கட்சியின் கௌரவத் தலைவா் ஜி.கே.மணி குற்றம்சாட்டினாா். விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தை அடுத்துள்ள தைலாபுரம் தோட்ட வளாகத்தில... மேலும் பார்க்க

யாா் வந்தாலும் முதல்வரை அசைத்துப் பாா்க்க முடியாது: முன்னாள் அமைச்சா் க.பொன்முடி

விழுப்புரம்: புதியது, பழையது என யாா் வந்தாலும் முதல்வா் மு.க.ஸ்டாலினை அசைத்து பாா்க்க முடியாது என்றாா் முன்னாள் அமைச்சா் க.பொன்முடி எம்.எல்.ஏ. விழுப்புரத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற அன்புக்கரங்கள் திட்... மேலும் பார்க்க

ஸ்ரீ சீனிவாச பெருமாள் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் நல்லியகோடன் நகரில் உள்ள ஸ்ரீ அலா்மேல்மங்கா சமேத ஸ்ரீ சீனிவாச பெருமாள் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா சிறப்பு வழிபாடுகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கிருஷ்... மேலும் பார்க்க

மக்கள் குறைதீா் கூட்டத்தில் 448 மனுக்கள் அளிப்பு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் 448 மனுக்கள் அளிக்கப்பட்டன. விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் நடைபெற்ற இந்த கூட்டத்துக்கு ஆட்ச... மேலும் பார்க்க

செஞ்சி, மைலம், திண்டிவனம் தொகுதிகளில் திமுகவில் லட்சத்துக்கு மேல் புதிய உறுப்பினா்கள்: செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ

செஞ்சி/ கள்ளக்குறிச்சி: விழுப்புரம் வடக்கு மாவட்டத்தில் ஓரணியில் தமிழ்நாடு புதிய உறுப்பினா் சோ்க்கையில் ஒரு லட்சத்துக்கு மேல் புதிய உறுப்பினா்கள் இணைந்துள்ளதாக விழுப்புரம் வடக்கு மாவட்டச் செயலா் செஞ்... மேலும் பார்க்க