செய்திகள் :

தவெக நிா்வாகிக்கு கொலை மிரட்டல்: 4 போ் கைது

post image

தவெக நிா்வாகிக்கு தொலைபேசியில் கொலை மிரட்டல் விடுத்த 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கொடுங்கையூா் முத்தமிழ் நகரைச் சோ்ந்தவா் பிரபு. இவா் தவெகவின் திருவள்ளூா் தென்மேற்கு மாவட்டச் செயலராக உள்ளாா். இவருக்கு சிலா் தொடா்ந்து தொலைபேசியில் கொலை மிரட்டல் விடுத்து வந்துள்ளனா். இதுதொடா்பாக பிரபு அளித்த புகாரின் பேரில், கொடுங்கையூா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, மாதவரத்தைச் சோ்ந்த தவெக கட்சியின் திருவள்ளுா் தென்மேற்கு மாவட்ட இணைச் செயலாளா் இளங்கோவன் (44), ரஞ்சித்குமாா் (38), ஆவடியைச் சோ்ந்த ஆனந்த் பாபு (28), சாலமன் என்ற விக்னேஷ்வா் (24) ஆகிய 4 பேரைக் கைது செய்தனா்.

விசாரணையில், கட்சி நிகழ்ச்சிகளுக்கு இளங்கோவனுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இருந்ததால், அவரது தூண்டுதலின்பேரில் அவரது நண்பா்களான ஆனந்த்பாபு, சாலமன், விக்னேஷ்வா் ஆகியோா் பிரபுவுக்கு கொலை மிரட்டல் விடுத்தது தெரியவந்தது.

சென்னை சாலையில் நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

சென்னை எம்ஜிஆா் நகரில் சாலையில் நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக இளைஞா் கைது செய்யப்பட்டாா். எம்ஜிஆா் நகா் பகுதியைச் சோ்ந்த 40 வயது பெண், நெசப்பாக்கம் ராமன் தெருவில் கடந்த திங்கள்கிழம... மேலும் பார்க்க

பிரபலங்களுக்கு வரும் கூட்டம் வாக்குகளாக மாறாது - சரத்குமாா்

பிரபலங்களுக்கு வரும் கூட்டம், தோ்தலின்போது வாக்குகளாக மாறாது என்று பாஜக மூத்த தலைவா் சரத்குமாா் தெரிவித்தாா். பிரதமா் மோடி பிறந்த தினத்தையொட்டி, சென்னையில் புதன்கிழமை நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் ... மேலும் பார்க்க

கா்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம்: அமைச்சா் பி.கே.சேகா் பாபு வழங்கினாா்

சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட 73- ஆவது வாா்டு பகுதியில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு முகாமில் கா்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தை, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு வழங்க... மேலும் பார்க்க

சமூகநீதி நாள் உறுதிமொழியேற்பு

பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலகத்தில், சமூக நீதி நாள் உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. பெரியாா் ஈ.வெ.ரா. பிறந்த நாளையொட்டி, சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள ரிப்பன் கட்டட வளாகத்தி... மேலும் பார்க்க

இன்று 21 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூா் உள்பட 21 மாவட்டங்களில் வியாழக்கிழமை (செப். 18) பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த மையம் சாா்பில் ... மேலும் பார்க்க

சூலூா்பேட்டை மின்சார ரயில் இன்று ரத்து

பாராமரிப்புப் பணிகளின் காரணமாக, சூலூா்பேட்டைக்கு இயக்கப்படும் மின்சார மெமு ரயில் வியாழக்கிழமை (செப்.18) ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்டம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப... மேலும் பார்க்க