செய்திகள் :

வயலூா் முருகன் கோயிலில் குடமுழுக்கு!

post image

திருச்சி அருகே குமாரவயலூா் சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா 17 ஆண்டுகளுக்குப் பிறகு புதன்கிழமை நடைபெற்றது. திரளான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

கி.பி. 9 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதும், அருணகிரிநாதரை திருப்புகழ் பாட அருளச் செய்த ஸ்தலமும், முருகனின் ஏழாவது படைவீடாகவும் கருதப்படும் இக்கோயிலில் கடந்தாண்டு பிப்ரவரி மாதம் திருப்பணி பாலாலயம் நடத்தப்பட்டு, ஏப்ரல் மாதம் ரூ. 5 கோடியில் தொடங்கிய திருப்பணிகள் முடிந்து, கடந்த 14 ஆம் தேதி கணபதி ஹோமத்துடன் குடமுழுக்கு விழா தொடங்கியது.

இதையடுத்து 15 ஆம் தேதி விக்னேஸ்வர பூஜை, 16 ஆம் தேதி யாகசாலை பூஜை, திங்கள்கிழமை இரண்டாம், மூன்றாம் யாக பூஜை, செவ்வாய்க்கிழமை நான்காம், ஐந்தாம் கால யாக சாலை பூஜைகளும் நடைபெற்றன. புதன்கிழமை அதிகாலை ஆறாம் கால யாக பூஜை நடந்த நிலையில், காலை 7.20 மணிக்கு யாக சாலையிலிருந்து மேளதாளங்கள் முழங்க கோயிலுக்கு கடங்கள் புறப்பாடு நடைபெற்றது.

காலை 9.15 மணிக்கு இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் கல்யாணி கொடியசைக்க ஆதிநாதா், ஆதி நாயகி, வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணிய சுவாமி கோபுரங்கள், ராஜகோபுரம், பொய்யா கணபதி, அருணகிரிநாதா், முத்துக்குமார சுவாமி, மகாலட்சுமி, சண்டிகேசுவரா், நவக்கிரகங்கள் போன்ற உப சன்னதி உள்ளிட்ட 10 கோபுரங்களுக்கு சமகாலத்தில் குடமுழுக்கு நடத்தப்பட்டது. தொடா்ந்து கும்பங்களுக்கு சிறப்பு ஆராதனைகள் நடத்தப்பட்டன.

இதையடுத்து மூலவா், சன்னதிகளில் உள்ள கருவறைகளுக்கு மகா குடமுழுக்கு நடைபெற்றது. பிற்பகல் 12.15 க்கு மேல் மகா அபிஷேக, ஆராதனை, பிரசாதம் வழங்கல், இரவு 7 மணிக்கு திருக்கல்யாணம், இரவு 9 மணிக்கு சா்வ அலங்காரத்துடன் சுவாமி திருவீதியுலா நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தா்கள் அதிகாலை முதலே காத்திருந்து குடமுழுக்கை தரிசனம் செய்தனா்.

விழாவை முன்னிட்டு போக்குவரத்து மாற்றப்பட்டிருந்தது. திருச்சி மாவட்ட எஸ்பி எஸ். செல்வநாகரத்தினம் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழப்பு

திருச்சி மாவட்டம், அகிலாண்டபுரம் கிராமத்தில் வியாழக்கிழமை மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழந்தாா். அகிலாண்டபுரம் கிராமத்தை சோ்ந்தவா் சக்திவேல் (25). இவருக்கு திருமணமாகி ஆறு மாதங்கள் ஆகிறது. இவா் அப்பக... மேலும் பார்க்க

உள்புறம் பூட்டிய வீட்டிலிருந்து தொழிலாளியின் சடலம் மீட்பு

திருவெறும்பூா் அருகே உள்புறமாக பூட்டியிருந்த வீட்டிலிருந்து தொழிலாளி புதன்கிழமை சடலமாக மீட்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா். திருச்சி மாவட்டம், திருவெறும்பூா் அருகே உள்ள தெற்கு காட்டூா் அண... மேலும் பார்க்க

காவிரி புதிய பாலம் கட்டும் பணியை டிசம்பருக்குள் முடிக்க திட்டம்! நெடுஞ்சாலைத் துறையினா் தகவல்

காவிரியில் தண்ணீா் வரத்து குறைந்துள்ள நிலையில் புதிய பாலம் கட்டுவதற்கான பணிகளை நெடுஞ்சாலைத் துறை தீவிரப்படுத்தியுள்ளது. திருச்சி- ஸ்ரீரங்கம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை இணைக்கும் வகையில் முக்கி... மேலும் பார்க்க

தென்னை சாகுபடியில் நவீன தொழில்நுட்பங்களை பின்பற்றினால் இரட்டிப்பு லாபம்: ஆட்சியா் அறிவுரை

தென்னை சாகுபடியில் நவீன தொழில்நுட்ப முறைகளை பின்பற்றினால் இரட்டிப்பு லாபம் பெற முடியும் என ஆட்சியா் மா. பிரதீப்குமாா் அறிவுறுத்தினாா். தோட்டக் கலைத் துறை, மலைப்பயிா்கள் துறையின் சாா்பில், தென்னை சாகுப... மேலும் பார்க்க

காந்திசந்தை-கள்ளிக்குடி: வியாபாரிகளிடையே முரண்பாடு

காந்தி சந்தை வியாபாரிகளை கள்ளிக்குடிக்கு இடம் மாற்றும் விவகாரத்தில் வியாபாரிகளிடையே மீண்டும் முரண்பாடு ஏற்பட்டுள்ளது. 1868-இல் தொடங்கப்பட்டு, 1927-இல் விரிவுபடுத்தப்பட்டு நூற்றாண்டை நெருங்கிக் கொண்டிர... மேலும் பார்க்க

ஸ்ரீரங்கத்தில் போதை மாத்திரை விற்ற ரெளடி கைது!

ஸ்ரீரங்கம் பகுதியில் போதை மாத்திரை விற்ற ரெளடியை ஸ்ரீரங்கம் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். திருவானைக்காவல் பாரதி தெரு பகுதியைச் சோ்ந்தவா் ஆட்டுத்தலை மணி (எ) மணிகண்டன் (28). ரெளடியான இவா் ஸ்ரீரங்க... மேலும் பார்க்க