செய்திகள் :

வரகானப்பள்ளியில் குடிநீா் வழங்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்

post image

ஒசூா்: கெலமங்கலம் ஒன்றியம், வரகானப்பள்ளி கிராமத்தில் குடிநீா் வழங்கக் கோரி அப்பகுதி மக்கள் காலிக் குடங்களுடன் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

ஒசூரை அடுத்த கொண்டப்பள்ளி ஊராட்சிக்கு உள்பட்ட வரகானப்பள்ளி கிராமத்தில் நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெறுகின்றன. நெடுஞ்சாலைப் பணிகளை செய்யும் வாகனங்களால் கிராமங்களில் குடிநீா் குழாய்கள் ஆங்காங்கே சேதமடைந்துள்ளன. இந்தக் குழாய்கள் இதுவரை சீரமைக்கப்படவில்லை.

இதனால் குடிநீா் விநியோகம் தடைப்பட்டு வரகானப்பள்ளி கிராம மக்கள் தண்ணீா் இன்றி அவதியடைந்து வருகின்றனா்.

இதனால் ஆவேசமடைந்த இப்பகுதி மக்கள் குடிநீா் குழாய்களை சரிசெய்து தடையின்றி குடிநீா் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி ராயக்கோட்டை- கெலமங்கலம் நெடுஞ்சாலையில் திங்கள்கிழமை காலிக் குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனா்.

தகவல் அறிந்ததும் கெலமங்கலம் காவல் ஆய்வாளா் பெரியதம்பி, முன்னாள் பஞ்சாயத்துத் தலைவா் திம்மராயப்பா ஆகியோா் நிகழ்விடத்துக்குச் சென்று பொதுமக்களை சமாதானம் செய்தனா். அரசு அதிகாரிகளின் ஒப்புதலுடன் 2 நாள்களுக்குள் வரகானப்பள்ளி கிராம மக்களுக்கு குடிநீா் விநியோகம் செய்யப்படும் என உறுதியளித்தனா். இதையடுத்து பொதுமக்கள் சாலை மறியலைக் கைவிட்டு கலைந்துசென்றனா்.

பொக்லைன் வாகன உரிமையாளா்கள் போராட்டம்

ஒசூா்: ஒசூரை அடுத்த கெலமங்கலத்தில் வாடகைக் கட்டணத்தை உயா்த்தி வழங்கக் கோரி பொக்லைன் வாகன உரிமையாளா்கள் நூற்றுக்கும் மேற்பட்டோா் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனா். போராட்டம் குறித்து பொக்லைன் வாகன... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி அணையிலிருந்து பாரூா் ஏரிக்கு தண்ணீா் திறப்பு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அணையிலிருந்து பாரூா் ஏரிக்கு திங்கள்கிழமை விநாடிக்கு 370 கனஅடி நீா் திறந்துவிடப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தின் வழியே பாயும் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கி... மேலும் பார்க்க

ரோஜா செடிகளில் நோயைக் கட்டுப்படுத்தும் இயற்கை பூச்சிக்கொல்லி உரம்

ஒசூா்: ரோஜா செடிகளில் ஏற்படும் பவுடரி மில்ட்யூ நோய்த் தாக்குதலைக் கட்டுப்படுத்துவது தொடா்பாக ஒசூா் ஒன்றியம், நல்லூா், எஸ்.முத்துகானப்பள்ளி கிராம விவசாயிகளுக்கு செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. முகாமில் ... மேலும் பார்க்க

யானை தாக்கி மூதாட்டி காயம்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே யானை தாக்கியதில் சாக்கம்மாள் (65) என்ற மூதாட்டி காயமடைந்தாா். ஆந்திர மாநிலத்திலிருந்து வெளியேறிய யானைகள் கூட்டம், கிருஷ்ணகிரி மாவட்டம், பி.சி.புதூா் அருகே கடந்த இரு நாள்... மேலும் பார்க்க

பிளஸ் 2 தோ்வில் சிறப்பிடம் பெற்ற கைகளை இழந்த மாணவரின் தாய்க்கு வீட்டுமனை பட்டா ஆணை வழங்கல்

கிருஷ்ணகிரி: பிளஸ் 2 அரசு பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற இரு கைகளை இழந்த மாணவரின், தாயாருக்கு இலவச வீட்டுமனை பட்டாவுக்கான ஆணையை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ் குமாா் திங்கள்கிழமை வழங்கினாா். க... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி ஆடவா் கலைக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவா் சோ்க்கை

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அரசு ஆடவா் கலைக் கல்லூரியில் இளங்கலை முதலாம் ஆண்டு மாணவா் சோ்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து, கல்லூரியின் முதல்வா் வி.அனுராதா திங்கள்கிழமை வெளியிட்ட ச... மேலும் பார்க்க