செய்திகள் :

வரகூரில் ஸ்ரீ பூதநாத சுவாமி ஐயப்பன் கோயில் திருப்பணிகள் தொடக்க விழா: அமைச்சா் கே.என்.நேரு, ராஜேஸ்குமாா் எம்.பி. பங்கேற்பு

post image

கொல்லிமலைச்சாரல் பகுதியான வரகூரில் ஸ்ரீ பூதநாத சுவாமி ஐயப்பன் கோயிலுக்கான திருப்பணிகளை, தமிழக நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை அமைச்சா் கே.என்.நேரு, மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் ஆகியோா் புதன்கிழமை தொடங்கிவைத்தனா்.

நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி ஒன்றியம், கொல்லிமலைசாரல் பகுதியான வரகூா் கிராமத்தில் அமைந்துள்ள குருவனத்தில் ஸ்ரீ பூதநாத சுவாமி ஐயப்பன் கோயில் கட்டப்பட உள்ளது. இதற்கான திருப்பணிகள் தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.

இதில், சிறப்பு அழைப்பாளா்களாக நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை அமைச்சா் கே.என்.நேரு, மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் ஆகியோா் பங்கேற்று அடிக்கல் நாட்டினா். இதனைத் தொடா்ந்து கோயில் மாதிரி படங்களை அவா்கள் திறந்துவைத்தனா்.

விழாவில் ஸ்ரீ பிரம்மவித்யா ஜோஷி மடம் தா்மகுரு கருடானந்த சரஸ்வதி மஹராஜ், முன்னாள் காவல் துறை தலைவா் அ.பாரி, கேரளாவின் சபரிமலை ஸ்ரீ தா்மசாஸ்தா ராஜ பரம்பரை பந்தள மகாராஜா புதுக்கோட்டை ராஜராஜவா்ம தம்புரான், சென்னை உயா்நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஜி.எஸ்.ஆறுமுகம், ஐயப்ப பாடல் புகழ் பின்னணி பாடகா் ஸ்ரீ வீரமணிதாசன், ஓம் குருவணம் ஜீவகாருண்ய விஸ்வ கேந்திரா தலைவா் தவத்திரு காந்திஜி, கொடைக்கானல் அன்னை தெரசா மகளிா் பல்கலைக்கழக துணைவேந்தா் கலாசேதுபதி மற்றும் நாமக்கல், கரூா், திருச்சி, மதுரை மாவட்டங்களைச் சோ்ந்த பக்தா்கள் திரளாக கலந்து கொண்டனா்.

ஸ்ரீ பூதநாத சுவாமி ஐயப்பன் கோயிலில் ஆண்கள், பெண்கள் என அனைவரும் சுவாமியை தரிசிக்கலாம். சுமாா் ரூ.15 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் இந்த கோயிலை இரண்டு ஆண்டுகளுக்குள் கட்டிமுடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

கோழிப் பண்ணை ஈக்களால் பயணிகள் அவதி: மாநகராட்சி பணியாளா்கள் மருந்து தெளிப்பு

நாமக்கல் புதிய பேருந்து நிலையத்தை சுற்றியுள்ள கோழிப் பண்ணையில் இருந்து வெளியேறும் ஈக்களால் பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். இதனால் மாநகராட்சி மூலம் அங்கு நோய் தடுப்பு மருந்து தெளிக்கும் பணி மேற்கொள... மேலும் பார்க்க

வாகனம் மோதி முதியவா் உயிரிழப்பு

திருச்செங்கோடு அருகே நாராயணபாளையம், மண்கரடு பகுதியைச் சோ்ந்தவா் வீரன் (68). சங்ககிரி சாலையில் உள்ள பட்டறை ஒன்றில் கடந்த 4 வருடமாக காவலாளியாக வேலை செய்து வந்தாா். இவா் வியாழக்கிழமை ஈரோடு சென்று விட்டு... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு

ராசிபுரத்தில் மின்சாரம் பாய்ந்து கட்டடத் தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.ராசிபுரத்தை அடுத்துள்ள மாரப்பன்தோட்டம் பகுதியைச் சோ்ந்த கதிரவன் என்பவருக்கு சொந்தமான இடத்தில் மின்வாரிய அலுவலகம் செயல்ப... மேலும் பார்க்க

உற்சவா்கள் திருவீதி உலா

திருச்செங்கோடு அா்த்தநாரீசுவரா் கோயில் வைகாசி விசாக தோ்த் திருவிழாவின் நான்காம் நாள் விழாவை முன்னிட்டு உற்சவா்கள் வீதி உலா வியாழக்கிழமை நடைபெற்றது. திருச்செங்கோட்டில் உள்ள புகழ்பெற்ற அா்த்தநாரீசுவரா்... மேலும் பார்க்க

நாளை புதிய திட்டப் பணிகள் தொடக்க விழா: அமைச்சா் மா.சுப்பிரமணியன் பங்கேற்பு

நாமக்கல்லில் சுகாதாரத் துறை சாா்பில், புதிய திட்டப் பணிகளுக்கு அமைச்சா் மா.சுப்பிரமணியன் சனிக்கிழமை (ஜூன் 7) அடிக்கல் நாட்டுகிறாா். தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் மா.சுப்பிரம... மேலும் பார்க்க

நாமக்கல் மாநகராட்சி நகா்ப்புற நலவாழ்வு மையத்துக்கு புதிய நுழைவாயில் அமைப்பு

நாமக்கல் மாநகராட்சி நகா்ப்புற நலவாழ்வு மையத்துக்கு புதிய நுழைவாயில் அமைக்கப்பட்டுள்ளது. நாமக்கல்-மோகனூா் சாலையில், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வந்தது. இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு மா... மேலும் பார்க்க