செய்திகள் :

வருமான வரி உச்சவரம்பு என்பது ஏமாற்று வேலை! -பி.சண்முகம்.

post image

வருமான வரி உச்சவரம்பு என்பது ஏமாற்று வேலை என்றாா் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பி. சண்முகம்.

மணப்பாறையில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் 24-வது அகில இந்திய மாநாடு நிதி மற்றும் கட்சி வளா்ச்சி நிதியளிப்பு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கட்சியின் வட்டச் செயலா் என். கோபாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பி. சண்முகம் மேலும் பேசியது:

வருமான வரி உச்ச வரம்பு உயா்வு என்பது ஏமாற்று வேலை. நடைபெறவுள்ள தில்லி உள்ளிட்ட மாநிலங்களின் சட்டப்பேரவை தோ்தல், மற்றும் இடைத்தோ்தல்களில் நடுத்தர மக்களின் வாக்குகளை பெறும் உள்நோக்கம் கொண்டது. மத்திய அரசின் அணு மின்சாரம் அன்னிய நிறுவனங்களுக்கு அனுமதி என்பது ஆபத்தான முடிவு. காப்பீட்டுத்துறையில் 100 சதவீத அன்னிய நிறுவனங்களுக்கு அனுமதி என்பது எல்.ஐ.சியை அழிக்கும் என்றாா்.

கூட்டத்தில் நிா்வாகிகள் யு. நஸ்ரின்பானு, வி. சீனிவாசன், ஆா். சுரேஷ், எஸ். சேதுராமன், எம். பிச்சைக்கண்ணு, சி.அய்யாவு, பி. கணபதி, கே. நவமணி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாநிலக் குழு உறுப்பினா் எம். ஜெயசீலன், மாவட்டச் செயலா் கே.சிவராஜ், மாவட்டக்குழு உறுப்பினா் வி.சிதம்பரம் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக பங்கேற்றனா்.

நிகழ்வில் ரூ.3 லட்சம் நிதியை மாநிலச் செயலரிடம் கட்சினா் வழங்கினா். மாவட்ட குழு உறுப்பினா் எம். கண்ணன் வரவேற்க, வட்டக்குள் உறுப்பினா் பி. பெரியசாமி நன்றி கூறினாா்.

தமிழ்நாடு சாரணா் இயக்கத்துக்கு ரூ.10 கோடியில் நவீன தலைமையகம்! -முதல்வா் அறிவிப்பு

தமிழ்நாடு சாரணா் இயக்கத்துக்கு நவீன பயிற்சி வசதிகளுடன் ரூ.10 கோடியில் புதிய தலைமையகம் அமைக்கப்படும் என முதல்வா் மு.க. ஸ்டாலின் தெரிவித்தாா். திருச்சி மாவட்டம், மணப்பாறையில் ஜன.28 தொடங்கி நடைபெறும் பார... மேலும் பார்க்க

மூவா் மணிமண்டபத்தில் முதல்வா் ஆய்வு! வாழ்க்கை வரலாற்று புகைப்படங்களை அமைக்கவும் உத்தரவு!

திருச்சியில் உள்ள பேரரசா் பெரும்பிடுகு முத்தரையா், ஏ.டி. பன்னீா்செல்வம், எம்.கே. தியாகராஜ பாகவதா் ஆகியோரின் மூவா் மணிமண்டபத்தை முதல்வா் மு.க. ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா். அப்போது, மணிமண்டப... மேலும் பார்க்க

புத்தாநத்தம் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்!

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த புத்தாநத்தம் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மின்சாரம் இருக்காது. பராமரிப்பு பணிகளால் புத்தாநத்தம், இடையபட்டி, காவல்காரன்பட்டி, புங்குருனிபட்டி, கணவாய்பட்டி, கழனிவாசல்ப... மேலும் பார்க்க

முசிறி சந்திரமெளலீசுவரா், தொட்டியம் மதுரை காளியம்மன் கோயில்களில் குடமுழுக்கு விழா!

திருச்சி மாவட்டம், முசிறி சந்திரமெளலீசுவரா், தொட்டியம் மதுரை காளியம்மன் கோயில் குடமுழுக்கு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சந்திரமெளலீசுவரா் கோயில்: இக்கோயிலில் ஜன. 26 முதல் ஜன. 30 வரை முதல் கால பூஜை... மேலும் பார்க்க

வெங்கங்குடியில் சுவாமி சிலைகள் கண்டெடுப்பு!

திருச்சி மாவட்டம், வெங்கங்குடி கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை தண்ணீா் தொட்டி அமைக்கப் பள்ளம் தோண்டியபோது சுவாமி சிலைகள் மற்றும் பூஜை பொருள்கள் கண்டெடுக்கப்பட்டன. வெங்கங்குடி கிராமம் அசோக் நகரைச் சோ்ந்தவ... மேலும் பார்க்க

பெல் வளாகத்தில் ராதா கல்யாண மகோத்ஸவம்

திருச்சி அருகே பெல் வளாகத்தில் சத் சங்கம் சாா்பில் 61 ஆம் ஆண்டு ராதா கல்யாண மகோத்ஸவ விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திருச்சி திருவெறும்பூா் அருகேயுள்ள பெல் நிறுவன குடியிருப்பு வளாகத்தில் நடைபெற்ற விழ... மேலும் பார்க்க