'அது குடும்ப பிரச்னை, அதனால்...'- பாமக உட்கட்சி விவகாரம் குறித்து கார்த்தி சிதம்...
வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய கால அவகாசம் நீட்டிப்பு!
2024-25 ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்ய வருகிற செப்.15 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
2024-25 ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும் பணிகள் தொடங்கியுள்ளன. இந்தாண்டு வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும் ஆன்லைன் நடைமுறைகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பதாக ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இந்தாண்டு ஜூலை 31 ஆம் தேதி வரை வருமான வரி கணக்கு தாக்கல் செய்யலாம் என்று கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்த கால அவகாசத்தை நீட்டித்து மத்திய நேரடி வரிகள் வாரியம்(சிபிடிடி) அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
"வருமான வரி கணக்கு தாக்கல் ஜூலை 31ம் தேதியுடன் முடிவடைய இருந்த நிலையில், செப்.15-ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும் படிவங்கள் உள்ளிட்டவற்றில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதால் கூடுதல் கால அவகாசம் வழங்கப்படுகிறது. இதனால் அனைவரும் துல்லியமாக எளிதாக வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய முடியும்" என்று கூறியுள்ளது.
மேலும் இதுதொடர்பாக அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் எக்ஸ் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Kind Attention Taxpayers!
— Income Tax India (@IncomeTaxIndia) May 27, 2025
CBDT has decided to extend the due date of filing of ITRs, which are due for filing by 31st July 2025, to 15th September 2025
This extension will provide more time due to significant revisions in ITR forms, system development needs, and TDS credit… pic.twitter.com/MggvjvEiOP