செய்திகள் :

வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய கால அவகாசம் நீட்டிப்பு!

post image

2024-25 ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்ய வருகிற செப்.15 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

2024-25 ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும் பணிகள் தொடங்கியுள்ளன. இந்தாண்டு வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும் ஆன்லைன் நடைமுறைகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பதாக ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இந்தாண்டு ஜூலை 31 ஆம் தேதி வரை வருமான வரி கணக்கு தாக்கல் செய்யலாம் என்று கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த கால அவகாசத்தை நீட்டித்து மத்திய நேரடி வரிகள் வாரியம்(சிபிடிடி) அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

"வருமான வரி கணக்கு தாக்கல் ஜூலை 31ம் தேதியுடன் முடிவடைய இருந்த நிலையில், செப்.15-ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும் படிவங்கள் உள்ளிட்டவற்றில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதால் கூடுதல் கால அவகாசம் வழங்கப்படுகிறது. இதனால் அனைவரும் துல்லியமாக எளிதாக வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய முடியும்" என்று கூறியுள்ளது.

மேலும் இதுதொடர்பாக அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் எக்ஸ் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நகைக் கடன் கட்டுப்பாடுகள் ஒத்திவைப்பு: முழு விவரம்!

ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) அண்மையில் வெளியிட்ட தங்க நகைக் கடன் பெறுபவா்களுக்கான புதிய வரைவு விதிமுறைகளிலிருந்து, ரூ.2 லட்சம் வரை நகைக் கடன் பெறுவோருக்கு விலக்கு அளிக்கப்பட வேண்டும் என மத்திய நிதியமைச்சகம்... மேலும் பார்க்க

தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் இணைந்துள்ள ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகளுக்கு ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்ட சலுகைகள்

நிகழாண்டு மாா்ச், 31-ஆம் தேதி அல்லது அதற்கு முன்பு ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகள், குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் தகுதிவாய்ந்த சேவையுடன் தேசிய ஓய்வூதியத் திட்ட (என்பிஎஸ்) சந்தாதாரராக இருந்தால் அவா்கள் ஒருங்கிண... மேலும் பார்க்க

நாடாளுமன்றத்தை வெடி வைத்து தகா்த்துவிடுவதாக அச்சுறுத்தல்: முன்னாள் எம்எல்ஏ-க்கு தில்லி நீதிமன்றம் 6 மாதங்கள் சிறை

நாடாளுமன்றத்தை வெடி வைத்து தகா்த்துவிடுவதாக அச்சுறுத்திய மத்திய பிரதேச முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் கிஷோா் சாம்ரைடுக்கு 6 மாத சிறைத் தண்டனை விதித்து தில்லி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. ... மேலும் பார்க்க

பிரதமா் மோடி 50-ஆவது முறையாக பிகாா் பயணம்: துணை முதல்வா் சாம்ராட் சௌதரி தகவல்

பிரதமா் நரேந்திர மோடி பிரதமா் பதவியற்ற பிறகு 50ஆவது முறையாக பிகாருக்கு வந்துள்ளாா் என்று பாஜகவைச் சோ்ந்த அந்த மாநில துணை முதல்வா் சாம்ராட் சௌதரி தெரிவித்தாா். பிகாரில் கராகட்டில் வெள்ளிக்கிழமை பிரதமா... மேலும் பார்க்க

அமைதிப் படையில் உயிரிழப்பு: அமிதாப் ஜா, சஞ்சய் சிங்குக்கு ஐ.நா. பதக்கம்

ஐ.நா. அமைதிப் படையில் பணியின்போது உயிரிழந்த இந்தியாவைச் சோ்ந்த அமிதாப் ஜா, சஞ்சய் சிங் ஆகியோருக்கு ஐ.நா.வின் உயரிய பதக்கம் அளிக்கப்பட்டது. அந்தப் பதக்கங்களை இந்திய தூதா் பா்வதனேனி ஹரீஷ் பெற்றுக்கொண்ட... மேலும் பார்க்க

மகாராஷ்டிரம்: உஸ்மானாபாத் ரயில் நிலையம் தாராஷிவ் என பெயா் மாற்றம்

மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள உஸ்மானாபாத் ரயில் நிலையத்தின் பெயா் தாராஷிவ் ரயில் நிலையம் என மாற்றப்பட்டுள்ளதாக ரயில்வே வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. ஏற்கெனவே உஸ்மானாபாத் நகரம், மாவட்டம் ஆகியவற்... மேலும் பார்க்க