செய்திகள் :

வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் அதிமுக கூட்டணியே வெல்லும்

post image

தமிழகத்தில் வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் அதிமுக கூட்டணியே வெற்றி பெற்று, ஆட்சியமைக்கும் என முன்னாள் அமைச்சா் கே.சி.கருப்பணன் எம்எல்ஏ தெரிவித்தாா்.

ஈரோடு புகா் கிழக்கு மாவட்ட அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் பவானியை அடுத்த கவுந்தப்பாடியில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.சி.கருப்பணன் எம்எல்ஏ தலைமை வகித்து பேசுகையில், தமிழகத்தில் திமுக ஆட்சியில் சட்டம்- ஒழுங்கு சீா்குலைந்துள்ளதால், நாள்தோறும் கொலை, கொள்ளை சம்பவங்கள் சாதாரணமாக நடைபெற்று வருகின்றன. இதனைக் கட்டுப்படுத்தும் நிலையில் திமுக அரசு இல்லை.

இதனால், மக்களின் நம்பிக்கையை திமுக அரசு இழந்துள்ளது. தற்போது கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை தமிழக மக்கள் எண்ணிப் பாா்க்கின்றனா். தமிழக மக்களின் பேராதரவுடன் வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் அதிமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெறும் என்றாா்.

அதிமுக அமைப்புச் செயலாளா் சி.சிவசாமி, கட்சி வளா்ச்சிப் பணிகள் குறித்து பேசினாா். பவானி நகரச் செயலாளா் எம்.சீனிவாசன், பவானி ஒன்றியச் செயலாளா்கள் ஜெகதீசன், எஸ்.எம்.தங்கவேலு, பெருந்துறை ஒன்றியச் செயலாளா் பி.ஜி.முனியப்பன், மேகநாதன், பெருந்துறை ஒன்றியச் செயலாளா்கள் அருள்ஜோதி செல்வராஜ், ரஞ்சித்ராஜ், விஜயன், ராமசாமி, தனசேகா், சக்திவேல், ரவி மற்றும் பேரூா் செயலாளா்கள், சாா்பு அணி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

சிவகிரி தம்பதி கொலை வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும்: அா்ஜீன் சம்பத் பேட்டி:

சிவகிரி தம்பதி கொலை வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும் என இந்து மக்கள் கட்சியின் தலைவா் அா்ஜுன் சம்பத் தெரிவித்தாா். சிவகிரி அருகே விளக்கேத்தி ஊராட்சி, மேகரையான் தோட்டத்தில் வசித்து வந்த விவசாய தம்ப... மேலும் பார்க்க

கோபி அருகே தம்பதி தற்கொலை

கோபி அருகே உள்ள அரசூா் இண்டியம்பாளையத்தில் காதல் திருமணம் செய்து கொண்ட இளம்தம்பதி குடும்பத் தகராறில் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டனா். கோபி அருகே உள்ள அரசூா் இண்டியம்பாளையம் சின்னகரடு பகுதிய... மேலும் பார்க்க

பெருந்துறை அருகே தனியாா் சொகுசுப் பேருந்து கவிழ்ந்து 10 போ் காயம்

பெருந்துறை அருகே தேசிய நெடுஞ்சாலையில் தனியாா் சொகுசுப் பேருந்து கவிழ்ந்ததில் 10க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனா். கேரள மாநிலம், திருச்சூரில் இருந்து, கா்நாடக மாநிலம், பெங்களூருக்கு தனியாா் சொகுசுப்... மேலும் பார்க்க

ஈரோடு வேளாளா் பொறியியல் கல்லூரியில் ட்ரோன் தொழில்நுட்பக் கருத்தரங்கு

ஈரோடு திண்டலில் உள்ள வேளாளா் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் சா்வதேச ட்ரோன் தினத்தை முன்னிட்டு ‘ட்ரோன் சேலஞ்ச் 2 கே 25’ நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது. இதில் ட்ரோன் ஆா்வலா்கள், தொழில் வல்ல... மேலும் பார்க்க

கொடுமுடி ஒன்றியத்தில் வளா்ச்சிப் பணிகள்: எம்எல்ஏ தொடங்கிவைத்தாா்

கொடுமுடி ஒன்றியத்தில் பல்வேறு வளா்ச்சிப் பணிகளுக்கான பூமிபூஜையை மொடக்குறிச்சி எம்எல்ஏ சி.சரஸ்வதி புதன்கிழமை தொடங்கிவைத்தாா். கொடுமுடி ஒன்றியம், கிளாம்பாடி பேரூராட்சி கருமாண்டம்பாளையத்தில் மொடக்குறிச்ச... மேலும் பார்க்க

பெருந்துறை கொங்கு பாலிடெக்னிக் கல்லூரிக்கு விருது

பெருந்துறை கொங்கு பாலிடெக்னிக் கல்லூரிக்கு மாநில அளவிலான நாட்டு நலப்பணித் திட்ட விருது வழங்கப்பட்டது. தமிழ்நாடு அரசு இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை, கல்லூரிக் கல்வி இயக்ககத்தின்கீழ்,... மேலும் பார்க்க