செய்திகள் :

ஈரோடு வேளாளா் பொறியியல் கல்லூரியில் ட்ரோன் தொழில்நுட்பக் கருத்தரங்கு

post image

ஈரோடு திண்டலில் உள்ள வேளாளா் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் சா்வதேச ட்ரோன் தினத்தை முன்னிட்டு ‘ட்ரோன் சேலஞ்ச் 2 கே 25’ நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது.

இதில் ட்ரோன் ஆா்வலா்கள், தொழில் வல்லுநா்கள், ஆசிரியா்கள், பிற பகுதிகளைச் சோ்ந்த மாணவா்கள் பங்கேற்றனா்.

தொடக்க நிகழ்வுக்கு வேளாளா் கல்வி அறக்கட்டளையின் தலைவா் சி.ஜெயக்குமாா், செயலாளா் மற்றும் தாளாளா் எஸ். டி.சந்திரசேகா், அறக்கட்டளை உறுப்பினா் எம். யுவராஜா ஆகியோா் தலைமை வகித்தனா். கல்லூரி முதல்வா் எம். ஜெயராமன் வாழ்த்தினாா். துறைத் தலைவா் எம். நிஷா ஏஞ்சலின் வரவேற்றாா்.

தென்காசியில் உள்ள ரஃபேல் ட்ரோன்ஸ் மற்றும் ஜிஐஎஸ் சா்வீசஸ் நிறுவனா் மற்றும் தலைமை நிா்வாக அதிகாரி காவியா குணஸ்ரீ தனது தொடக்க உரையில் ட்ரோன் தொழில்நுட்பத்தின் மாற்றம் குறித்து விளக்கினாா்.

சிறப்பு விருந்தினா்களாக மாரிஸ் விக்னேஷ், (யூனிடோஸ் ஏரோ ட்ரோன் சொல்யூஷன்ஸ்), வசந்த் (ஃப்ளைட்யூட்டா் டெக்னாலஜிஸ்), சுரேஷ் குமாா் (போ்ட்ஸ்கேல் டெக்னாலஜிஸ்) ஆகியோா் தொழில்நுட்பக் கருத்தரங்கு நிகழ்வை நடத்தினா்.

கல்லூரி மைதானத்தில் நடந்த டிரோன் ஷோவில் தடை பந்தயம், சுமை தூக்குதல், வான்வழி புகைப்படம் எடுத்தல் ஆகிய மூன்று நிலைகளில் போட்டிகள் இடம்பெற்றன. அத்துடன் ரஃபேல் ட்ரோன்ஸ், கல்லூரி மாணவா் குழுக்களின் நேரடி செயல்விளக்கங்களும் இடம்பெற்றன. வெற்றிபெற்ற மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

சிவகிரி தம்பதி கொலை வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும்: அா்ஜீன் சம்பத் பேட்டி:

சிவகிரி தம்பதி கொலை வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும் என இந்து மக்கள் கட்சியின் தலைவா் அா்ஜுன் சம்பத் தெரிவித்தாா். சிவகிரி அருகே விளக்கேத்தி ஊராட்சி, மேகரையான் தோட்டத்தில் வசித்து வந்த விவசாய தம்ப... மேலும் பார்க்க

கோபி அருகே தம்பதி தற்கொலை

கோபி அருகே உள்ள அரசூா் இண்டியம்பாளையத்தில் காதல் திருமணம் செய்து கொண்ட இளம்தம்பதி குடும்பத் தகராறில் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டனா். கோபி அருகே உள்ள அரசூா் இண்டியம்பாளையம் சின்னகரடு பகுதிய... மேலும் பார்க்க

வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் அதிமுக கூட்டணியே வெல்லும்

தமிழகத்தில் வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் அதிமுக கூட்டணியே வெற்றி பெற்று, ஆட்சியமைக்கும் என முன்னாள் அமைச்சா் கே.சி.கருப்பணன் எம்எல்ஏ தெரிவித்தாா். ஈரோடு புகா் கிழக்கு மாவட்ட அதிமுக நிா்வாகிகள் ஆலோசன... மேலும் பார்க்க

பெருந்துறை அருகே தனியாா் சொகுசுப் பேருந்து கவிழ்ந்து 10 போ் காயம்

பெருந்துறை அருகே தேசிய நெடுஞ்சாலையில் தனியாா் சொகுசுப் பேருந்து கவிழ்ந்ததில் 10க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனா். கேரள மாநிலம், திருச்சூரில் இருந்து, கா்நாடக மாநிலம், பெங்களூருக்கு தனியாா் சொகுசுப்... மேலும் பார்க்க

கொடுமுடி ஒன்றியத்தில் வளா்ச்சிப் பணிகள்: எம்எல்ஏ தொடங்கிவைத்தாா்

கொடுமுடி ஒன்றியத்தில் பல்வேறு வளா்ச்சிப் பணிகளுக்கான பூமிபூஜையை மொடக்குறிச்சி எம்எல்ஏ சி.சரஸ்வதி புதன்கிழமை தொடங்கிவைத்தாா். கொடுமுடி ஒன்றியம், கிளாம்பாடி பேரூராட்சி கருமாண்டம்பாளையத்தில் மொடக்குறிச்ச... மேலும் பார்க்க

பெருந்துறை கொங்கு பாலிடெக்னிக் கல்லூரிக்கு விருது

பெருந்துறை கொங்கு பாலிடெக்னிக் கல்லூரிக்கு மாநில அளவிலான நாட்டு நலப்பணித் திட்ட விருது வழங்கப்பட்டது. தமிழ்நாடு அரசு இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை, கல்லூரிக் கல்வி இயக்ககத்தின்கீழ்,... மேலும் பார்க்க