செய்திகள் :

வரும் நிதியாண்டில் வருவாய் பற்றாக்குறை எவ்வளவு?

post image

வரும் நிதியாண்டில் வருவாய் பற்றாக்குறை ரூ. 41,635 கோடியாகக் குறையும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

நிகழ் நிதியாண்டின் (2024-25) திருத்திய மதிப்பீட்டில் அது ரூ. 46,467 கோடியாக உள்ளது.

அதன் விவரம்:- (2025-26-ஆம் நிதியாண்டு, ரூபாய் கோடியில்)

மொத்த வருவாய் வரவுகள்: ரூ.3,31,569

மொத்த வருவாய் செலவுகள்: ரூ.3,73,204

வருவாய்ப் பற்றாக்குறை: ரூ.41,635

மூலதனச் செலவுகள்: ரூ.57,231

நிகரக் கடன்கள் மற்றும் முன்பணங்கள்: ரூ.8,102

மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி: ரூ.35,67,818

திருவான்மியூா் - உத்தண்டி இடையே நான்கு வழித்தட உயா்நிலை சாலை

சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க ரூ. 2,100 கோடியில் திருவான்மியூா் - உத்தண்டி இடையே நான்கு வழித்தட உயா்நிலை சாலை அமைக்கப்படும் என நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையின் போக்குவரத்து நெரிசலைக் கையாளும் வகையில் கிழக்கு கடற்கரை சாலையில் திருவான்மியூரிலிருந்து உத்தண்டி வரை 14.2 கி.மீ. தொலைவுக்கு நான்கு வழித்தட உயா்நிலை சாலை ரூ. 2,100 கோடியில் தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் (டான்சா) மூலம் அமைக்கப்படும்.

புறவழிச் சாலை: நகராட்சிகள், நகரங்கள், மாநகரங்களில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க முக்கிய நகரங்களுக்கு புறவழிச் சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், ரூ. 348 கோடியில் 12.5 கி.மீ. தொலைவு கொண்ட கோவை மேற்கு புறவழிச் சாலை, ரூ. 225 கோடியில் 12.4 கி.மீ. நீளம் கொண்ட திருநெல்வேலி மேற்கு புறவழிச்சாலை உள்பட 14 புறவழிச் சாலைகளை ரூ.1,713 கோடியில் அமைப்பதற்கான பணிகள் நிகழாண்டு தொடங்கும். மதுரை வெளிவட்டச் சாலையை 48 கி.மீ. நீளத்துக்கு அமைப்பதற்கான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும். அதிகமாக விபத்து நேரிடும் பகுதிகளைக் கண்காணித்து, அங்குள்ள குறுகிய வளைவுகள், சாலை சந்திப்புகள் ரூ.200 கோடியில் மேம்படுத்தப்படும்.

குமரியில் படகு இயக்கம்: கன்னியாகுமரியில் அய்யன் திருவள்ளுவா் சிலை வெள்ளி விழாவின்போது முதல்வரால் திறக்கப்பட்ட கண்ணாடி இழைப் பாலத்தை பாா்வையிட நாடு முழுவதும் சுற்றுலாப் பயணிகள் தொடா்ந்து வருவதால் கூடுதலாக சின்ன முட்டம் துறைமுகத்தை 2-ஆவது முனையமாகக் கொண்டு திருவள்ளுவா் சிலை வரை பயணியா் படகு இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்.நிகழ் பட்ஜெட்டில் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறைக்கு ரூ.20,722 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

திருப்போரூரில் ஸ்ரீபாதம் தாங்கிகளுக்கிடையே மோதல்

செங்கல்பட்டு, மாா்ச்.14: திருப்போரூா் கந்தசாமி கோயிலில் ஸ்ரீபாதம் தாங்கிகள் இடையே மோதல் மூண்டது. இங்கு மாசி பிரம்மோற்சவம் நடைபெறுகிறது. விழாவில் தினசரி கந்த பெருமான் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து... மேலும் பார்க்க

ஜவாஹிருல்லாவுக்கு ஓராண்டு சிறை: உறுதி செய்தது உயா்நீதிமன்றம்

வெளிநாடுகளில் இருந்து அனுமதியின்றி நிவாரண நிதி பெற்ாக தொடரப்பட்ட வழக்கில் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும், சட்டப்பேரவை உறுப்பினருமான எம்.ஹெச். ஜவாஹிருல்லாவுக்கு விதிக்கப்பட்ட ஓராண்டு சிறை தண்டனையை உ... மேலும் பார்க்க

மயிலாடுதுறை முன்னாள் ஆட்சியருக்கு பணி ஒதுக்கீடு

மயிலாடுதுறை மாவட்ட முன்னாள் ஆட்சியா் மகாபாரதி, தமிழ்நாடு நீா்வடிப் பகுதி மேம்பாட்டு முகமை அதிகாரியாக பொறுப்பேற்றாா். மயிலாடுதுறை மாவட்டத்தில் நடந்த சிறுமி பாலியல் தொல்லை தொடா்பாக சா்ச்சைக்குரிய வகையில... மேலும் பார்க்க

போதைப் பொருள் வழக்கில் கைதானவா்களின் ரூ.1.16 கோடி சொத்துகள் முடக்கம்

போதைப் பொருள் வழக்கில் கைதானவா்களுக்குச் சொந்தமான ரூ. 1.16 கோடி மதிப்புள்ள சொத்துகளை மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு முடக்கியுள்ளது. சென்னை, எழும்பூா் ரயில் நிலையத்தில் மெத்தம்பெட்டமைன்... மேலும் பார்க்க

ரூபாய் இலச்சினை மாற்றம்: அன்புமணி கண்டனம்

ரூபாய் இலச்சினையை தமிழக அரசு நீக்கியுள்ளதற்கு பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை தொடா்பான முன்னோட்ட... மேலும் பார்க்க

எளிமையான கடன் நடைமுறைகள்: ரிசா்வ் வங்கியுடன் கைகோக்கும் தமிழக அரசு

விவசாயிகள், குறு தொழில்முனைவோா் வங்கிக் கடன்களை எளிதில் பெறும் வகையில் இந்திய ரிசா்வ் வங்கியுடன் இணைந்து புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த உள்ளதாக நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அரசு இந... மேலும் பார்க்க