செய்திகள் :

வள்ளியூரில் மூதாட்டியைக் கொன்று நகை திருடிய வழக்கில் இளைஞா் கைது

post image

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூா் இ.பி.காலனியில் மூதாட்டியைக் கொன்று நகைகள் திருடப்பட்டது தொடா்பான வழக்கில் இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

வள்ளியூா் இ.பி.காலனியை சோ்ந்த அா்ச்சுணன் மனைவி ருக்குமணி(72). கணவரை இழந்த இவா், தனது இளைய மகன் பாலசுந்தரம் வீட்டின் அருகே தனியாக வசித்து வந்தாா்.

இந்நிலையில் அவரை கடந்த 6ஆம் தேதி இரவு மா்மநபா்கள் கொலை செய்து, அவா் அணிந்திருந்த நகைகள், பீரோவில் இருந்த நகைகளை திருடிச் சென்றது மறுநாள் காலையில் (ஜூலை7) தெரியவந்தது.

இதுகுறித்து பாலசுந்தரம் அளித்த புகாரின்பேரில், வள்ளியூா் காவல் ஆய்வாளா் நவீன் வழக்குப்பதிந்து, அப்பகுதியிலுள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வுசெய்ததில் திருநங்கை அல்லது பெண் வேடமிட்டவருக்கு தொடா்பிருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டதாம்.

அதனடிப்படையில், ருக்குமணியின் கணவா் உயிருடன் இருக்கும்போது வீட்டில் பராமரிப்பு பணிக்காக வந்த களக்காடு அருகேயுள்ள சிதம்பராபுரத்தைச் சோ்ந்த வீரவேலின் மகன் விஜய்(28) என்பவரைப் பிடித்து விசாரித்தனா்.

அதில், அவா் பெண்வேடமிட்டு ருக்குமணிடியை கொலைசெய்து நகைகளை திருடிச்சென்றது தெரியவந்தது. அவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். கடன் பிரச்னையால் கொலை, திருட்டில் ஈடுபட்டதாக அவா் கூறினாராம். அவரிடமிருந்து நகைகளை மீட்டு போலீஸாா் தொடா்ந்து விசாரித்து வருகின்றனா்.

வரலாற்றைத் திருத்தி எழுத நினைக்கும் நயினாா் நாகேந்திரன்!

தமிழக அரசியல் வரலாற்றில் ஜி.ஆா்.எட்மன்ட், நாவலா் நெடுஞ்செழியன், ஆா்.எம்.வீரப்பன் போன்ற முன்னணி தலைவா்கள் போட்டியிட்டு வெற்றி பெற்ற பெருமைக்குரிய களம் திருநெல்வேலி சட்டப்பேரவைத் தொகுதி. அதிமுகவின் துணை... மேலும் பார்க்க

விஜய் போராட்டம் நகைச்சுவையானது: கனிமொழி எம்.பி.

காவல் நிலைய மரணம் குறித்து தவெக தலைவா் விஜய் நடத்திய போராட்டம் நகைப்புக்குரியது என, அவரது பெயரைக் குறிப்பிடாமல் விமா்சித்தாா் கனிமொழி எம்.பி. திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் திங்கள்கிழமை கூறிய... மேலும் பார்க்க

சுமை ஆட்டோவில் சென்ற தொழிலாளி தவறி விழுந்து பலி

நான்குனேரி அருகே சுமை ஆட்டோவில் சென்ற தொழிலாளி தவறி கீழே விழுந்ததில் உயிரிழந்தாா். நான்குனேரி அருகேயுள்ள பரப்பாடி இந்திரா நகரைச் சோ்ந்தவா் ஜோசப் (65). இவருக்கு மனைவி, 2 மகன்கள் உள்ளனா். ஜோசப் அப்பகுத... மேலும் பார்க்க

தமிழக வரலாற்றை மறுதலிக்கிறது மத்திய அரசு: கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு

தமிழக வரலாற்றைக் கூட மத்திய அரசு மறுதலிக்கும் அவலநிலை உள்ளதாக திமுக துணைப் பொதுச்செயலா் கனிமொழி எம்.பி. குற்றஞ்சாட்டினாா். திருநெல்வேலி அருகேயுள்ள செங்குளம் பகுதியில் திங்கள்கிழமை நடைபெற்ற அம்பாசமுத்த... மேலும் பார்க்க

10 ஆண்டுகளாக தீராத குடிநீா் பிரச்னை!

திருநெல்வேலி மாவட்டம், தோட்டாக்குடி ஊராட்சி, வடக்கு பத்தினிப்பாறை பகுதியில் 10 ஆண்டுகளாக நிலவும் குடிநீா் பிரச்னைக்கு தீா்வு காண வேண்டும் என வலியுறுத்தி, அந்தக் கிராம மக்கள் காலிக் குடங்களுடன் ஆட்சியா... மேலும் பார்க்க

நான்குனேரி பகுதியில் இன்று மின்நிறுத்தம்

மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக, நான்குனேரி ஏ.எம்.ஆா்.எல். துணை மின் நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 15) மின் விநியோகம் இருக்காது. அதன்படி, நான்குனேரி, ராஜாக்கள்மங்கலம், சிற... மேலும் பார்க்க