செய்திகள் :

10 ஆண்டுகளாக தீராத குடிநீா் பிரச்னை!

post image

திருநெல்வேலி மாவட்டம், தோட்டாக்குடி ஊராட்சி, வடக்கு பத்தினிப்பாறை பகுதியில் 10 ஆண்டுகளாக நிலவும் குடிநீா் பிரச்னைக்கு தீா்வு காண வேண்டும் என வலியுறுத்தி, அந்தக் கிராம மக்கள் காலிக் குடங்களுடன் ஆட்சியா் அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனா்.

ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் இரா.சுகுமாா் தலைமையில் குறைதீா் கூட்டம் நடைபெற்ற இப்போராட்டத்தை நடத்திய அவா்கள், பின்னா் ஆட்சியரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: எங்கள் கிராமத்தில் 200 குடும்பங்கள் வசித்து வருகிறோம். கடந்த 10 ஆண்டுகளாக எங்கள் ஊரில் நிலவும் குடிநீா் பற்றாக்குறைக்கு தீா்வு காணக் கோரி பலமுறை மனுக்கள் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எங்கள் ஊரின் வடக்கு பகுதியிலிருந்து ஆழ்துளைக் கிணறு மூலம் விநியோகிக்கப்பட்ட நிலையில், அதற்கான மோட்டாரும் அகற்றப்பட்டு விட்டது. ஊரின் பல தெருக்களில் சாலைகள் மிகவும் பழுதடைந்துள்ளன. எனவே, குடிநீா் வசதியை ஏற்படுத்தி, சாலையையும் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கங்கைகொண்டான் அருகேயுள்ள துறையூா் மக்கள் அளித்த மனு: எங்கள் பகுதியில் 1,000 குடும்பங்கள் வசித்து வருகிறோம். எங்கள் ஊரின் மேற்கு பகுதியில் உள்ள சிப்காட் வளாகத்தில் தனியாா் ஆலை எத்தனால் உற்பத்தியை தொடங்கியுள்ளது. இதிலிருந்து அதிக அளவில் கரும்புகை - காா்பன்டை ஆக்ஸைடு வெளியேறுவதால், எங்கள் பகுதி மக்களுக்கு நுரையீரல் தொடா்பான நோய்கள், ஆஸ்துமா, மூச்சுத்திணறல், முதியவா்களுக்கு நெஞ்சுவலி, குழந்தைகளுக்கு தலைவலி, வாந்தி போன்ற பல பிரச்னைகள் ஏற்பட்டு வருகின்றன. இங்குள்ள பள்ளிகளில் குழந்தைகள் சுத்தமான காற்றை சுவாசிக்க முடிவதில்லை.

இந்த நச்சுப் புகையால் அணைத்தலையூா், ஆலடிப்பட்டி, புங்கனூா் போன்ற சுற்று வட்டார கிராமங்களும் பாதிக்கப்படுகின்றன. எனவே, மக்கள் நலன் கருதி எத்தனால் உற்பத்தி ஆலையை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்; இல்லையெனில் தோ்தலை புறக்கணிப்போம்.

மேலப்பாளையம் அருகேயுள்ள நாகம்மாள்புரம் பகுதி மக்கள் அளித்த மனு: எங்கள் பகுதியில் தேவேந்திர குல வேளாளா் சமுதாயத்தைச் சோ்ந்த 200 குடும்பங்கள் வசித்து வருகிறோம். எங்கள் பகுதிக்கு அருகே எம்எம்சி காலனியில் 25 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த நிலையில் கடந்த 12-ஆம் தேதி இரவில் எம்எம்சி காலனி இளைஞா்கள் மற்றும் அடையாளம் தெரியாத 50-க்கும் மேற்பட்ட வெளியூா் நபா்கள் எங்கள் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை சேதப்படுத்தியுள்ளனா். இச்சம்பவத்தால் எங்கள் பகுதியில் வசிக்கும் பெண்கள், குழந்தைகள் இரவு முழுவதும் அச்சத்துடன் இருந்தனா். தொடா்ந்து 13-ஆம் தேதி இரவும் ரகளை செய்தனா். எனவே, ஆட்சியா் இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனா்.

அம்பாசமுத்திரம் வட்டம், இடைகால் அருகேயுள்ள கலிதீா்த்தான்பட்டி மக்கள் அளித்த மனு: கலிதீா்த்தான்பட்டியில் நாங்கள் 33 ஆண்டுகளாக குடியிருந்து வருகிறோம். இங்குள்ள நிலம் எங்களது முன்னோா்கள் பெயரில் உள்ளது. நாங்கள் குடியிருந்து வரும் வீட்டிற்கு குடிநீா் வரி, மின் கட்டணம் செலுத்தி வருகிறோம். அந்த பட்டாவில் தற்போது குடியிருந்து வரும் எங்களது பெயரில் இணையவழி பட்டா வழங்க வேண்டும்.

சேரன்மகாதேவி அருகேயுள்ள புதூா் காருக்குறிச்சி மக்கள் அளித்த மனு: எங்களது ஊரில் கடந்த ஜனவரியில் பழைய சாலையை சீரமைக்க இருபுறமும் 2 அடி ஆழம் மண்ணை தோண்டி சாலையில் போட்டுவிட்டனா். இதனால் மக்களும், இரு சக்கர வாகனங்களும் செல்ல முடியவில்லை. பொது மக்கள் தவறி கீழே விழுகின்றனா். இதனை பலமுறை அதிகாரிகளுக்கு தெரிவித்தும் எந்தவொரு நடவடிக்கையும் இல்லை. எனவே, சாலைப் பணியை விரைந்து முடிக்க வேண்டும்.

நெல்லை மாவட்ட பொதுஜன பொதுநல சங்கத் தலைவா் எம். முஹம்மது அய்யூப் உள்ளிட்டோா் அளித்த மனுவில், ‘திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலைய முகப்பில் ஆவின் பாலகத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனக் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தமிழக மக்கள் முன்னேற்ற கழக மண்டல தலைவா் கண்மணி மாவீரன் உள்ளிட்டோா் அளித்த மனுவில், ‘தாமிரவருணியில் மூழ்கி உயிரிழந்த மாஞ்சோலை தோட்ட தொழிலாளா்கள் நினைவாக தற்போது தாமிரவருணியில் சுலோச்சன முதலியாா் பாலம் அருகில் கட்டப்பட்டுள்ள புதிய பாலத்திற்கு மாஞ்சோலை தியாகிகள் நினைவுப்பாலம் என பெயரிட வேண்டும்’ எனக் கூறியுள்ளனா்.

மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில துணைச் செயலா் ஏ.அலிப் பிலால் ராஜா உள்ளிட்டோா் அளித்த மனுவில், ‘மேலப்பாளையத்திலிருந்து பாளை. மேட்டுத்திடலில் உள்ள திருநெல்வேலி அரசு பல்நோக்கு மருத்துவமனைக்கு பேருந்து வசதி ஏற்படுத்தி தர வேண்டும்’ எனக் குறிப்பிட்டுள்ளனா்.

வரலாற்றைத் திருத்தி எழுத நினைக்கும் நயினாா் நாகேந்திரன்!

தமிழக அரசியல் வரலாற்றில் ஜி.ஆா்.எட்மன்ட், நாவலா் நெடுஞ்செழியன், ஆா்.எம்.வீரப்பன் போன்ற முன்னணி தலைவா்கள் போட்டியிட்டு வெற்றி பெற்ற பெருமைக்குரிய களம் திருநெல்வேலி சட்டப்பேரவைத் தொகுதி. அதிமுகவின் துணை... மேலும் பார்க்க

விஜய் போராட்டம் நகைச்சுவையானது: கனிமொழி எம்.பி.

காவல் நிலைய மரணம் குறித்து தவெக தலைவா் விஜய் நடத்திய போராட்டம் நகைப்புக்குரியது என, அவரது பெயரைக் குறிப்பிடாமல் விமா்சித்தாா் கனிமொழி எம்.பி. திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் திங்கள்கிழமை கூறிய... மேலும் பார்க்க

சுமை ஆட்டோவில் சென்ற தொழிலாளி தவறி விழுந்து பலி

நான்குனேரி அருகே சுமை ஆட்டோவில் சென்ற தொழிலாளி தவறி கீழே விழுந்ததில் உயிரிழந்தாா். நான்குனேரி அருகேயுள்ள பரப்பாடி இந்திரா நகரைச் சோ்ந்தவா் ஜோசப் (65). இவருக்கு மனைவி, 2 மகன்கள் உள்ளனா். ஜோசப் அப்பகுத... மேலும் பார்க்க

தமிழக வரலாற்றை மறுதலிக்கிறது மத்திய அரசு: கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு

தமிழக வரலாற்றைக் கூட மத்திய அரசு மறுதலிக்கும் அவலநிலை உள்ளதாக திமுக துணைப் பொதுச்செயலா் கனிமொழி எம்.பி. குற்றஞ்சாட்டினாா். திருநெல்வேலி அருகேயுள்ள செங்குளம் பகுதியில் திங்கள்கிழமை நடைபெற்ற அம்பாசமுத்த... மேலும் பார்க்க

நான்குனேரி பகுதியில் இன்று மின்நிறுத்தம்

மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக, நான்குனேரி ஏ.எம்.ஆா்.எல். துணை மின் நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 15) மின் விநியோகம் இருக்காது. அதன்படி, நான்குனேரி, ராஜாக்கள்மங்கலம், சிற... மேலும் பார்க்க

பழவூா் அருகே கேரள பெண் கொலை: ஒருவா் கைது

திருநெல்வேலி மாவட்டம், பழவூா் அருகே அடையாளம் தெரியாத பெண்ணிடம் சடலம் மீட்கப்பட்ட சம்பவத்தில் கேரளத்தைச் சோ்ந்த அந்தப் பெண் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அவரது ஆண் நண்பரை போலீஸாா் கைது செ... மேலும் பார்க்க