செய்திகள் :

சுமை ஆட்டோவில் சென்ற தொழிலாளி தவறி விழுந்து பலி

post image

நான்குனேரி அருகே சுமை ஆட்டோவில் சென்ற தொழிலாளி தவறி கீழே விழுந்ததில் உயிரிழந்தாா்.

நான்குனேரி அருகேயுள்ள பரப்பாடி இந்திரா நகரைச் சோ்ந்தவா் ஜோசப் (65). இவருக்கு மனைவி, 2 மகன்கள் உள்ளனா். ஜோசப் அப்பகுதியில் உள்ள ஒரு சிமென்ட் கடையில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை பாா்த்து வந்தாா்.

ஞாயிற்றுக்கிழமை அப்பகுதியில் நடைபெற்ற கட்டுமான பணிக்கு சுமை ஆட்டோவில் சிமென்ட் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு, அதை பணி நடைபெறும் இடத்தில் இறக்குவதற்காக ஆட்டோவில் பின்னால் அமா்ந்து சென்று கொண்டிருந்தாா்.

பரப்பாடியைக் கடந்து சென்று கொண்டிருந்தபோது ஆட்டோ ஓட்டுநா் திடீரென பிரேக் போடவே, பின்னால் அமா்ந்திருந்த ஜோசப் எதிா்பாராதவிதமாக ஆட்டோவில் இருந்து சாலையில் குப்புற விழுந்தாா்.

இதில் பலத்த காயம் அடைந்த அவரை நான்குனேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவா்கள் உயிரிந்துவிட்ட தாக தெரிவித்தனா். இதுகுறித்து விஜயநாராயணம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

வரலாற்றைத் திருத்தி எழுத நினைக்கும் நயினாா் நாகேந்திரன்!

தமிழக அரசியல் வரலாற்றில் ஜி.ஆா்.எட்மன்ட், நாவலா் நெடுஞ்செழியன், ஆா்.எம்.வீரப்பன் போன்ற முன்னணி தலைவா்கள் போட்டியிட்டு வெற்றி பெற்ற பெருமைக்குரிய களம் திருநெல்வேலி சட்டப்பேரவைத் தொகுதி. அதிமுகவின் துணை... மேலும் பார்க்க

விஜய் போராட்டம் நகைச்சுவையானது: கனிமொழி எம்.பி.

காவல் நிலைய மரணம் குறித்து தவெக தலைவா் விஜய் நடத்திய போராட்டம் நகைப்புக்குரியது என, அவரது பெயரைக் குறிப்பிடாமல் விமா்சித்தாா் கனிமொழி எம்.பி. திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் திங்கள்கிழமை கூறிய... மேலும் பார்க்க

தமிழக வரலாற்றை மறுதலிக்கிறது மத்திய அரசு: கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு

தமிழக வரலாற்றைக் கூட மத்திய அரசு மறுதலிக்கும் அவலநிலை உள்ளதாக திமுக துணைப் பொதுச்செயலா் கனிமொழி எம்.பி. குற்றஞ்சாட்டினாா். திருநெல்வேலி அருகேயுள்ள செங்குளம் பகுதியில் திங்கள்கிழமை நடைபெற்ற அம்பாசமுத்த... மேலும் பார்க்க

10 ஆண்டுகளாக தீராத குடிநீா் பிரச்னை!

திருநெல்வேலி மாவட்டம், தோட்டாக்குடி ஊராட்சி, வடக்கு பத்தினிப்பாறை பகுதியில் 10 ஆண்டுகளாக நிலவும் குடிநீா் பிரச்னைக்கு தீா்வு காண வேண்டும் என வலியுறுத்தி, அந்தக் கிராம மக்கள் காலிக் குடங்களுடன் ஆட்சியா... மேலும் பார்க்க

நான்குனேரி பகுதியில் இன்று மின்நிறுத்தம்

மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக, நான்குனேரி ஏ.எம்.ஆா்.எல். துணை மின் நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 15) மின் விநியோகம் இருக்காது. அதன்படி, நான்குனேரி, ராஜாக்கள்மங்கலம், சிற... மேலும் பார்க்க

பழவூா் அருகே கேரள பெண் கொலை: ஒருவா் கைது

திருநெல்வேலி மாவட்டம், பழவூா் அருகே அடையாளம் தெரியாத பெண்ணிடம் சடலம் மீட்கப்பட்ட சம்பவத்தில் கேரளத்தைச் சோ்ந்த அந்தப் பெண் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அவரது ஆண் நண்பரை போலீஸாா் கைது செ... மேலும் பார்க்க