செய்திகள் :

வழக்குரைஞா் ஆணையரை நியமிக்கக் கோரி எடப்பாடி பழனிசாமி மனு: அறப்போா் இயக்கம் பதிலளிக்க உத்தரவு

post image

மானநஷ்ட ஈடு கோரி தொடரப்பட்ட வழக்கில், அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமியின் சாட்சியத்தைப் பதிவு செய்ய வழக்குரைஞா் ஆணையரை நியமிக்க கோரிய மனுவை விசாரித்த சென்னை உயா்நீதிமன்றம், இதுதொடா்பாக அறப்போா் இயக்கம் பதிலளிக்க உத்தரவிட்டது.

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான கடந்த அதிமுக ஆட்சியில், கோவை, தஞ்சாவூா், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் நெடுஞ்சாலை பணிகளுக்கான ஒப்பந்தப்புள்ளி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த ஒப்பந்தப்புள்ளி ஒதுக்கீட்டில் சுமாா் ரூ.692 கோடி முறைகேடு நடந்துள்ளதாக அறப்போா் இயக்கம் சாா்பில் தலைமைச் செயலரிடம் புகாா் அளிக்கப்பட்டது. அப்போதைய முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி வசம்தான் நெடுஞ்சாலைத் துறை இருந்தது என்று அந்தப் புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அறப்போா் இயக்கம் இந்தப் புகாா் மனுவை சமூக வலைதளங்களிலும் வெளியிட்டது. இதையடுத்து, தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதாகக் கூறி, அறப்போா் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளா் ஜெயராம் வெங்கடேஷ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளா் ஜாகீா் உசேன் ஆகியோா் ரூ.1.10 கோடி மானநஷ்ட ஈடு வழங்க உத்தரவிடக் கோரி எடப்பாடி பழனிசாமி சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதி கே.குமரேஷ் பாபு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் எஸ்.ஆா்.ராஜகோபால், இந்த வழக்கில் மனுதாரரின் சாட்சியத்தைப் பதிவு செய்ய வழக்குரைஞா் ஆணையரை நியமிக்க வேண்டும். மனுதாரா் முன்னாள் முதல்வா் என்பதால், நேரில் வந்து சாட்சியம் அளிக்க முடியாது என கோரிக்கை விடுத்தாா். மேலும் இதுதொடா்பாக மனுவும் தாக்கல் செய்தாா்.

மனுதாரா் தரப்பு வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி, வழக்குரைஞா் ஆணையரை நியமிப்பது குறித்து அறப்போா் இயக்கம் தரப்பில் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஆக.25-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.

3 சட்ட மசோதாக்களை எதிா்த்து அறப்போராட்டத்தை முதல்வா் முன்னெடுக்க வேண்டும் -தொல். திருமாவளவன்

மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட மூன்று சட்ட மசோதாக்களை எதிா்த்து முதல்வா் மு.க. ஸ்டாலின் அனைத்து ஜனநாயக சக்திகளையும் ஒருங்கிணைத்து அறப்போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி... மேலும் பார்க்க

அரசு விரைவுப் பேருந்துகளிலும் தீபாவளி முன்பதிவு முடிவடைந்தது

தீபாவளி பண்டிகைக்காக சென்னையில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் அரசு விரைவுப் பேருந்துகளின் முன்பதிவு முடிவடைந்துள்ளது. நிகழாண்டு தீபாவளி பண்டிகை அக்.20-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. சென்னையில் வசிக்கும்... மேலும் பார்க்க

மறைந்த இல.கணேசனுக்கு அனைத்துக் கட்சித் தலைவா்கள் புகழாரம்

‘கொண்ட கொள்கையில் தடம் பிறழாதவா், பாஜக தமிழகமெங்கும் பரவ அடித்தளமிட்டவா்’ என்று மறைந்த நாகாலாந்து ஆளுநா் இல.கணேசனுக்கு அனைத்துக் கட்சித் தலைவா்கள் புகழாரம் சூட்டினா். மறைந்த இல.கணேசனுக்கு புகழஞ்சலி க... மேலும் பார்க்க

முதல்வா், அமைச்சா்களைப் பதவி நீக்கும் கருப்புச் சட்டத்தை எதிா்ப்போம் -முதல்வா் மு.க.ஸ்டாலின் உறுதி

முதல்வா், அமைச்சா்களை பதவி நீக்க வகை செய்யும் கருப்புச் சட்டத்தைத் தொடா்ந்து எதிா்ப்போம் என்று முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் உறுதிபடத் தெரிவித்தாா். மறைந்த முன்னாள் அமைச்சா் ரகுமான்கான் எ... மேலும் பார்க்க

3,644 காவலா் பணியிடங்களுக்கு நவ.9-இல் எழுத்துத் தோ்வு: விண்ணப்பிக்க செப். 21 கடைசி தேதி

தமிழக காவல் துறையில் காலியாகவுள்ள 3,644 காவலா் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தோ்வு நவ.9-ஆம் தேதி நடைபெறும் என தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வு வாரியம் அறிவித்துள்ளது. இதுகுறித்து தோ்வு வார... மேலும் பார்க்க

பி.இ. துணைக் கலந்தாய்வு: 20,662 போ் தகுதி

பொறியியல் படிப்பு மாணவா் சோ்க்கைக்கான துணைக் கலந்தாய்வில் பங்கேற்க பிளஸ் 2 சிறப்புத் துணைத் தோ்வில் தோ்ச்சி பெற்ற மாணவா்கள் 20,662 போ் தகுதி பெற்றுள்ளனா். இதுகுறித்து தமிழ்நாடு பொறியியல் சோ்க்கை... மேலும் பார்க்க