செய்திகள் :

`வா வாழலாம்..!’ திருமண தேதியை அறிவித்தது, தமிழ் பிக்பாஸ் மூலம் காதலித்து கரம் பிடிக்கும் முதல் ஜோடி!

post image
2023 ம் ஆண்டு காதலர் தினத்தன்று காதலை முறைப்படி உலகத்துக்குச் சொன்ன பிக்பாஸ் ஜோடியான அமீர் - பாவ்னி, இந்தக் காதலர் தினத்தில் கல்யாண அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.

வரும் ஏப்ரல் மாதம் இவர்களது திருமணம் நடைபெற இருக்கிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும் நாட்களில் காதல் மலர்ந்து அது கல்யாணத்தில் முடிவதெல்லாம் இந்தி பிக் பாஸில் சாதாரணமானது. ஆனால் தமிழில் பிக்பாஸ் மூலம் காதலித்து திருமணம் செய்யவிருக்கும் முதல் ஜோடி என்ற பெருமையைப் பெற இருக்கிறார்கள் அமீர் - பாவ்னி.

முன்னதாக இந்த ஜோடி காதலை அறிவித்திருந்த போது ஐரோப்பாவில் இருந்த பாவனியிடம் பேசியிருந்தோம்.

‘’சீரியல்களில் நடிச்சிட்டிருந்த எனக்கு பிக்பாஸ் வாய்ப்பைத் தந்த சேனலுக்கு முதல் நன்றியைத் தெரிவிச்சுக்கிடுறேன். ஏன்னா அந்த நிகழ்ச்சி எனக்குப் பெரிய ரீச்சைத் தந்தது. பிக்பாஸுக்கு முன் பின் என என் வாழ்க்கையை பிரிக்கலாம்.

நிறைய ரசிகர்களை எனக்குத் தந்தது மட்டுமில்லாம எனக்கு வாழ்க்கையைத் தந்ததும் அந்த நிகழ்ச்சி தானே? அதுல கலந்துக்கலைன்னா அமீரை நான் சந்திச்சிருப்பேனானு தெரியலையே?

அமீர் - பாவனி

நிகழ்ச்சியின் தொடக்கத்திலேயே அவர் என் மீது காட்டின அக்கறை என்னை ஏதோ செய்தது. எங்க ரெண்டு பேருக்குமிடையில் இருந்தது காதல்னு ரெண்டு பேருக்குமே கொஞ்ச நாள்லயே புரிஞ்சிடுச்சு. இருந்தாலும் ரசிகர்களுக்கு ஒரு சர்ப்ரைஸா இருக்கட்டுமேனுதான் லவ்வர்ஸ் டே அன்னிக்குச் சொல்றோம்’ எனக் கூறியிருந்தார்.

மேலும் ’திருமணத்துக்கு கொஞ்க காலம் ஆகலாம். ஏன்னா ரெண்டு பேருமே இப்பதான் சினிமாவுல தலைகாட்டத் தொடங்கியிருக்கோம். வர்ற வாய்ப்புகளை மிஸ் பண்ணாமப் பண்ணிட்டு அப்புறம் பண்ணிக்கலாம்னு இருக்கோம்’ எனவும் சொல்லியிருந்தார்.

அமீர் - பாவனி

இந்நிலையில் சரியாக இரண்டு வருடம் கழித்து இந்தக் காதலர் தினத்தில் திருமண தேதியை அறிவித்திருக்கிறார்க்ள் இவர்கள். அதன்படி வரும் ஏப்ரல் மாதம் 20 ம் தேதி நடக்கவிருக்கிறதாம். பாவ்னி, தனது இன்ஸ்டா பதிவில் `வா வாழலாம்’ என்ற பதிவுடன் தேதியை அறிவித்துள்ளார்.

அமீர் பாவ்னி ஜோடிக்கு டிவி, சினிமாப் பிரபலங்கள் பலரும் இப்போதே வாழ்த்துச் சொல்லத் தொடங்கி விட்டனர்.

Vikatan Play

இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்' பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்! 

https://tinyurl.com/Velpari-Vikatan-Play

7 முதல் 3 மணி வரை விடாத போன் கால்; ஓட்டமெடுத்த தேர்தல் அலுவலர்; செய்தி வாசிப்பாளர் சங்கப் பஞ்சாயத்து

சுமார் 500 பேர் உறுப்பினர்களாக இருக்கும் தமிழ் செய்தி வாசிப்பாளர் சங்கத்தில் புதிய நிர்வாகிகள் தேர்தல் இம்மாதக் கடைசியில் நடக்கவிருப்பதாக சில தினங்களுக்கு முன்னர் அறிவிப்பு வெளியானது.தேர்தல் நடத்தும் ... மேலும் பார்க்க

Siragadikka aasai : வீண் வம்பு, ஈகோ யுத்தம் - அருணை வீடியோ எடுத்த முத்து!

சிறகடிக்க ஆசை சீரியலில் முத்துவுக்கு எதிராக அருண் கதாபாத்திரமும் மீனாவுக்கு எதிராக சிந்தாமணியும் அறிமுகப்படுத்தப்பட்டனர். சிந்தாமணி விஜயாவின் நடனப்பள்ளியில் இணைந்து மீனாவுக்கு எதிராக செயல்பட்டு வருகிற... மேலும் பார்க்க

Kayal Serial: ஒரு வருடத்திற்கு மேல் கர்ப்பமாக இருக்கும் தேவி; வளைகாப்பு குறித்து ரசிகர்கள் கேள்வி

கயல் சீரியலில் தேவிக்கு வளைகாப்பு நடத்தக் கயல் ஏற்பாடு செய்கிறார். ஆனால் தேவியின் கணவர் தாயின் பேச்சைக் கேட்டு வளைகாப்புக்கு வர மறுக்கிறார்.கயல் தன் தங்கை தேவியின் கணவர் விக்னேஷை எப்படியாவது சமாதானப்ப... மேலும் பார்க்க

Lollu Sabha Udhaya: `அப்பாவுக்கு சர்ஜரி பண்ணி இடது கால் எடுத்துட்டோம்!' - உதயாவின் மகள்

சந்தானத்தின் பல காமெடி வசனங்களை எழுதியவர் நடிகர் சிரிக்கோ உதயா.இவர் லொள்ளு சபா நிகழ்ச்சியின் மூலம் பலருக்கும் பரிச்சயமானவர். நடிப்பை தாண்டி இவர் இசையின் பக்கமும் கவனம் செலுத்தியிருக்கிறார். சினிமாவை த... மேலும் பார்க்க

Manimegalai : `தொகுப்பாளினியாக மீண்டும் களமிறங்கும் விஜே மணிமேகலை... குவியும் வாழ்த்துகள்!'

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்ற நடன நிகழ்ச்சி `டான்ஸ் ஜோடி டான்ஸ்'. இதன் அடுத்த சீசன் விரைவிலேயேதொடங்க இருக்கிறது. மெகா ஆடிஷன் சமீபத்தில் நடந்து முடிந்திருந்தநி... மேலும் பார்க்க

Siragadikka aasai : முத்துவிடம் இரண்டு பேர் சிக்கிவிட்டனர், அடுத்தது யார்?!

சிறகடிக்க ஆசை சீரியலின் கடந்த இரண்டு நாள் எபிசோடுகள் விறுவிறுப்பாக நகர்ந்தன. மீனாவின் தொழிலில் பிரச்னைகளை ஏற்படுத்த நினைக்கும் சிந்தாமணி, விஜயாவை நட்பாக்கி சூழ்ச்சி செய்ய நினைத்தார். ஆனால் அவர்கள் போன... மேலும் பார்க்க