செய்திகள் :

வாக்கு வங்கிக்காக காவி பயங்கரவாத குற்றச்சாட்டு: காங்கிரஸ் மீது ராஜ்நாத் சிங் சாடல்

post image

மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது வாக்கு வங்கிக்காக ‘காவி பயங்கரவாதம்’ என்ற பெயரில் அப்பாவிகள் மீது பழிசுமத்தப்பட்டதாகப் பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங் சாடினாா்.

இதுதொடா்பாக பிகாா் தலைநகா் பாட்னாவில் நடைபெற்ற ஊடக நிகழ்ச்சி ஒன்றில் அவா் சனிக்கிழமை பேசியதாவது: பாகிஸ்தானுக்கு எதிரான ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கை குறித்து அண்மையில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் விவாதம் மேற்கொள்ளப்பட்டது. இரு விவாதங்களும் தலா 16 மணி நேரம் நடைபெற்றது. அப்போது விவாதத்தை மூா்க்கத்தனமாக தொடங்கிய எதிா்க்கட்சிகள், பின்னா் வாயடைத்து நின்றன.

ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையில் பயங்கரவாதிகளின் பல மறைவிடங்களை நமது தீரமிக்க பாதுகாப்புப் படைகள் அழித்தன. இந்தச் சூழலில் பாதுகாப்புப் படைகளுக்கு மரியாதை செலுத்தப்பட்டிருக்க வேண்டுமே தவிர, ஆபரேஷன் சிந்தூா் குறித்து எதிா்க்கட்சிகள் பல கேள்விகளை எழுப்பியது வருத்தத்துக்குரியது.

இதுபோன்ற சூழல்களில் பாதுகாப்புப் படைகளுக்கு மரியாதை செலுத்துவதே கடந்த கால வழக்கமாக இருந்தது. கடந்த 1971-ஆம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் போரின்போது இந்திரா காந்தி பிரதமராக இருந்தாா். அப்போது மத்திய அரசுக்கு பாஜக முன்னாள் தலைவா் அடல் பிகாரி வாஜ்பாய் முழுமனதுடன் ஆதரவு தெரிவித்தாா்.

1999-ஆம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் இடையே காா்கில் ஏற்பட்டபோது வாஜ்பாய் பிரதமராகப் பதவி வகித்தாா். அப்போதும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு ஆதரவாக அரசியல் மற்றும் சமுதாய ஒற்றுமை காணப்பட்டது. அந்த ஒற்றுமை பயங்கரவாதத்தை முழுமையாக ஒழிக்க மிகவும் அவசியமாகும்.

ஆனால் மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது வாக்கு வங்கி மற்றும் ஒரு சாராரை திருப்திப்படுத்தும் அரசியலுக்காக, பயங்கரவாதத்துக்கு எதிராக மென்மையான நிலைப்பாட்டை அக்கட்சி கடைப்பிடித்தது.

2013-ஆம் ஆண்டு பாட்னாவில் பாஜகவின் பிரதமா் வேட்பாளராக மோடி (அப்போது குஜராத் முதல்வராக இருந்தாா்) பங்கேற்ற கூட்டத்தின்போது காந்தி மைதானத்தில் தொடா் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இதுபோல 2014-ஆம் ஆண்டுக்கு முன்பு வரை, மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த காலத்தில், நாட்டில் பயங்கரவாதத் தாக்குதல்கள் சா்வசாதாரணமாக நடைபெற்றதை நினைவுகூா்வதற்கு மக்கள் நடுங்குகின்றனா்.

இதேபோல காங்கிரஸ் ஆட்சியின்போது மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில், ‘காவி பயங்கரவாதம்’ என்ற பெயரில் அப்பாவிகள் மீது பழிசுமத்தப்பட்டது. வாக்கு வங்கிக்காக ‘காவி பயங்கரவாதம்’ என்ற கருத்தை ஜோடித்து அப்பாவிகளை சிக்கவைக்க முயற்சிக்கப்பட்டது. அந்த வழக்கில் தீா்ப்பளித்த நீதிபதி பயங்கரவாதத்துக்கு மதம் இல்லை என்று குறிப்பிட்டாா். பயங்கரவாதத்துக்கு எதிரான நாட்டின் போராட்டத்தை வாக்கு வங்கி அரசியல் பலவீனப்படுத்துகிறது என்றாா்.

குடியரசுத் தலைவர் முர்முவுடன் பிரதமர் மோடி சந்திப்பு

தில்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை பிரதமர் மோடி ஞாயிற்றுக்கிழமை சந்தித்தார். இந்த சந்திப்பை குடியரசுத் தலைவர் மாளிகையும் உறுதிப் படுத்தியுள்ளது. இருப்பினம... மேலும் பார்க்க

உத்தரப் பிரதேசத்தில் கால்வாயில் கார் கவிழ்ந்ததில் 11 பேர் பலி !

உத்தரப் பிரதேசத்தில் சர்யு கால்வாயில் கார் கவிழ்ந்ததில் 11 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம், சிஹாகான் கிராமத்தைச் சேர்ந்தவர்கள், கர்குபூரில் உள்ள பிருத்விநாத் கோயி... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீரில் 3 துருப்பிடித்த பீரங்கி குண்டுகள் கண்டுபிடிப்பு

ஜம்மு-காஷ்மீரில் 3 துருப்பிடித்த பீரங்கி குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு பாதுகாப்பாக அழிக்கப்பட்டன. ஜம்மு-காஷ்மீரின் சம்பா மாவட்டத்தில் உள்ள பால்த் கிராமத்திற்கு அருகே பசந்தர் ஆற்றின் கரையில் கைவிடப்பட்... மேலும் பார்க்க

பூரியில் 15 வயது சிறுமி மரண வழக்கில் திடீர் திருப்பம்! போலீஸ் விளக்கம்!

பூரியில் 15வயது சிறுமி மரணத்தில் யாருக்கும் தொடர்பு இல்லை என்று ஒடிசா போலீஸ் விளக்கமளித்துள்ளது. ஒடிசா மாநிலம், பூரி மாவட்டத்தின் பலங்கா பகுதியில் உள்ள தனது வீட்டின் அருகே கடந்த ஜூலை 19 ஆம் தேதி தீக்க... மேலும் பார்க்க

கேரளத்தில் சிறுத்தையிடம் இருந்து 4 வயது மகனைக் காப்பாற்றிய தந்தை !

கேரளத்தில் சிறுத்தையிடம் இருந்து 4 வயது மகனை அவனின் தந்தை துணிச்சலுடன் காப்பாற்றியுள்ளார். கேரள மாநிலம், திரிசூர் மாவட்டதில் உள்ள மலக்கப்பராவின் வீரன்குடி பழங்குடியினர் குடியிருப்பில் பேபி என்பவர் தனத... மேலும் பார்க்க

நவி முமையில் நடனப் பாரை தாக்கி சேதப்படுத்திய நவநிர்மாண் சேனை தொண்டர்கள் !

நவி மும்பையில் உள்ள நடனப் பாரை தாக்கியதோடு அதன் வளாகத்தை மகாராஷ்டிர நவநிர்மாண் சேனை தொண்டர்கள் சேதப்படுத்தியுள்ளனர். மகாராஷ்டிர மாநிலம், பன்வேலின் புறநகரில் உள்ள நைட் ரைடர்ஸ் பாரில் மகாராஷ்டிர நவநிர்ம... மேலும் பார்க்க