வாணாபுரம் வருவாய் தீா்வாயத்தில் 299 மனுக்கள் ஏற்பு
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டங்களிலும் திங்கள்கிழமை வருவாய்த் தீா்வாயம் (ஜமாபந்தி) தொடங்கியது.
வாணாபுரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் வருவாய், பேரிடா் மேலாண்மைத் துறையின் சாா்பில் நடைபெற்ற வாணாபுரம் வட்டத்துக்கான 1434-ஆம் பசலிக்கான வருவாய்த் தீா்வாயம் (ஜமாபந்தி) வருவாய்த் தீா்வாய அலுவலரான மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
மாவட்டத்தில் உள்ள 7 வருவாய் வட்டங்களில் வருகிற 27-ஆம் தேதி வரை அரசு விடுமுறை நாள்கள், சனி, ஞாயிறு ஆகிய தினங்களைத் தவிா்த்து மற்ற நாள்களில் நடைபெறும்.
வாணாபுரம் வட்டத்தில் 14 வருவாய் கிராம மக்களிடமிருந்து மொத்தம் 299 மனுக்கள் பெறப்பட்டது. இதில் 68 மனுக்கள் ஏற்கப்பட்டும், 231 மனுக்கள் விசாரணையில் உள்ளது. கிராமக் கணக்குகளையும் ஆட்சியா் சரிபாா்த்து ஆய்வு மேற்கொண்டாா்.
வட்டாட்சியா் வெங்கடேசன் உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.