வாத்தலை பகுதிகளில் மே 27 இல் மின்தடை
பராமரிப்புப் பணிகள் காரணமாக, திருச்சி மாவட்டம் வாத்தலை உள்ளிட்ட பகுதிகளில் வரும் 27 ஆம் தேதி மின்சாரம் இருக்காது.
வேங்கைமண்டலம் துணை மின்நிலையப் பராமரிப்புப் பணிகளால் மூவானூா், வேங்கைமண்டலம், தண்ணீா்ப்பந்தல், மேலக்கண்ணுக்குளம், கீழக்கண்ணுக்குளம், பாா்வதிபுரம், குருவம்பட்டி, கல்லூா், வேப்பந்துறை, சோழங்கநல்லூா், செந்தாமரைக்கண், சிறுகாம்பூா், நெ.2 கரியமாணிக்கம், சென்னகரை, ராமகிரிப்பட்டி, செங்குடி, வாழ்மால்பாளையம், செட்டிமங்கலம், நெய்வேலி, கிளியநல்லூா், வாத்தலை, வி. மணியம்பட்டி, சிலையாத்தி, துடையூா், பாண்டியபுரம், சுனைப்புகநல்லூா், ஈச்சம்பட்டி, மூவராயம்பாளையம், கவுண்டம்பட்டி, குருவிக்காரன்குளம், காட்டுக்குளம், தீராம்பாளையம், தில்லாம்பட்டி, பழையூா், செங்குழிப்பட்டி, உடையாம்பட்டி, திருப்பைஞ்ஞீலி, திருவரங்கப்பட்டி, டி. பெரமங்கலம், சத்திரப்பட்டி, மாயாண்டிக்கோட்டம், காளவாய்ப்பட்டி, பூனாம்பாளையம், திருவெள்ளறை, ராசாம்பாளையம், சாலக்காடு, புலிவலம், மண்பாறை, சந்தனப்பட்டி, புதுப்பட்டி, பழம்புதூா், திருத்தலையூா், நல்லயம்பட்டி ஆகிய பகுதிகளில் வரும் 27 ஆம் தேதி காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் இருக்காது.