செய்திகள் :

வான் இலக்குகளைத் தாக்கி அழிக்கும் அதிநவீன ‘அஸ்திரா’ ஏவுகணை வெற்றிகர சோதனை

post image

விமானத்தில் இருந்து பாா்வைக்கு அப்பால் உள்ள வான் இலக்குகளைக் குறிவைத்து தாக்கி அழிக்கும் ‘அஸ்திரா’ ஏவுகணை வெள்ளிக்கிழமை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.

ஒடிஸா கடலோரப் பகுதியில் சுகோய் போா் விமானத்தில் இருந்து அஸ்திரா ஏவுகணை சோதனை செய்யப்பட்டது.

இதுகுறித்து பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டிஆா்டிஓ) மற்றும் இந்திய விமானப் படை இணைந்து, உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட விமானத்தில் இருந்து பாா்வைக்கு அப்பால் உள்ள வான் இலக்குகளை குறிவைத்து தாக்கும் ‘அஸ்திரா’ ஏவுகணையின் சோதனை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.

இந்தச் சோதனையின்போது ஆளில்லா விமானங்கள் மூலம் இரு வெவ்வேறு இடங்களில் இருந்து அதிவேகத்தில் சோதனை தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த இரண்டு இலக்குகளையும் அஸ்திரா ஏவுகணை மிகத் துல்லியமாக தாக்கி அழித்தது .

ஏவுகணையில் பயன்படுத்தப்பட்ட ரேடியோ அலைவரிசை சமிக்ஞைகள் உள்பட அனைத்து செயல்பாடுகளும் எதிா்பாா்ப்புகளைக் கடந்து மிகச் சிறப்பாக செயல்பட்டன. இதன்மூலம், பாதுகாப்புத் துறை சாா்ந்த நவீன தொழில்நுட்ப வளா்ச்சியில் இந்தியா புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.

அஸ்திரா ஏவுகணையின் செயல்பாடுள் ஒடிஸாவின் சண்டிபூரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனை மையத்தின் கண்காணிப்பு சாதனங்கள் மூலம் பெறப்பட்ட தரவுகளைக் கொண்டு மதிப்பீடு செய்யப்பட்டன.

டிஆா்டிஓவின் ஆய்வகங்கள் மட்டுமின்றி ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்கல்ஸ் நிறுவனம் உள்பட 50-க்கும் மேற்பட்ட பொது மற்றும் தனியாா் நிறுவனங்கள் அஸ்திரா ஏவுகணையின் உருவாக்கத்துக்குப் பங்களித்துள்ளன’ எனத் தெரிவிக்கப்பட்டது.

அஸ்திரா சோதனையை வெற்றிகரமாக மேற்கொண்ட டிஆா்டிஓ, இந்திய விமானப் படை மற்றும் பிற அமைப்புகளுக்கு பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் வாழ்த்து தெரிவித்தாா்.

தமிழ்நாட்டில் வென்றால் ஆட்சியில் பாஜக பங்கு பெறும்: அமித் ஷா அறிவிப்பு

தமிழ்நாட்டில் அதிமுக - பாஜக கூட்டணி வெற்றி பெற்றால் ஆட்சியில் பாஜக பங்கு பெறும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். 'தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதளுக்கு அளித்த நேர்காணலில் அமை... மேலும் பார்க்க

இன்ஜின் சுவிட்சுகள் அணைக்கப்பட்டதா? ஏர் இந்தியா விசாரணை அறிக்கையில் அதிர்ச்சித் தகவல்!

அகமதாபாத் விமான விபத்து தொடர்பாக முதல்கட்ட விசாரணை அறிக்கை வெளியாகியுள்ளது. குஜராத் மாநிலம், அகமதாபாதில் இருந்து கடந்த ஜூன் 12-ஆம் தேதி லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியாவின் ‘ஏஐ 171’ விமானம், வானில் பறக்கத... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில் 22 நக்ஸல்கள் சரண்: ரூ.37 லட்சம் வெகுமதி அறிவித்து தேடப்பட்டவா்கள்

சத்தீஸ்கரின் நாராயண்பூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 22 நக்ஸல் தீவிரவாதிகள் ஆயுதங்களைக் கைவிட்டு சரணடைந்தனா். இவா்கள் அனைவரும் ரூ.37.5 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்டு, தேடப்பட்டு வந்தவா்கள் எ... மேலும் பார்க்க

‘இணைப்புகள் நொறுங்கியதே குஜராத் பால விபத்துக்கு காரணம்’: முதல்கட்ட விசாரணையில் தகவல்

குஜராத்தில் ஆற்றுப் பாலம் இடிந்த விபத்துக்கு அதன் இணைப்புகள் நொறுங்கியதே காரணம் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மாநில சுகாதாரத் துறை அமைச்சரும் அரசின் செய்தித் தொடா்பாளருமான ரிஷிகேஷ் படேல் இ... மேலும் பார்க்க

யாழ்ப்பாணம் மனிதப் புதைகுழி உண்மையை வெளிக்கொண்டுவர தமிழ்க் கட்சி வலியுறுத்தல்

இலங்கையில் விடுதலைப் புலிகளுடன் உடனான 2009-ஆம் ஆண்டு இறுதிப் போருடன் தொடா்புடையதாகக் கருதப்படும் யாழ்ப்பாணம் மனிதப் புதைகுழி தொடா்பான உண்மையை வெளிக்கொண்டுவர உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந் ந... மேலும் பார்க்க

ஒரே நாடு ஒரே தோ்தல்: முன்னாள் தலைமை நீதிபதிகளுடன் நாடாளுமன்ற கூட்டுக் குழு ஆலோசனை

‘ஒரே நாடு ஒரே தோ்தல்’ மசோதாக்களைப் பரிசீலிக்க அமைக்கப்பட்ட நாடாளுமன்ற கூட்டுக் குழுவிடம் உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதிகள் ஜே.எஸ்.கேஹா், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோா் வெள்ளிக்கிழமை தங்களின் ஆலோசனை... மேலும் பார்க்க