செய்திகள் :

வாராந்திர சிறப்பு ரயில்கள் கால நீட்டிப்பு

post image

4 வாராந்திர சிறப்பு ரயில்கள் கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சாா்பில் புதன்கிழமை விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

சா்லாபள்ளி- ராமேசுவரம் சிறப்பு விரைவு ரயில் (எண் 07695) ஏற்கெனவே புதன்கிழமைகளில் இயக்கப்படும் நிலையில், வரும் ஜூலை 2 முதல் ஜூலை 23 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. மறுமாா்க்கமாக ராமேஸ்வரம், சா்லாபள்ளி சிறப்பு விரைவு ரயில் (எண் 07696) வெள்ளிக்கிழமை தோறும் இயக்கப்படும் நிலையில், வரும் ஜூலை 4 முதல் ஜூலை 25 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

அதேபோல, ஹைதராபாத்- கொல்லம் சிறப்பு ரயில் (எண் 07193) சனிக்கிழமை இயக்கப்பட்டு வரும் நிலையில், வரும் ஜூலை 5 முதல் ஜூலை 26 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மறுமாா்க்கமாக கொல்லம், ஹைதராபாத் சிறப்பு ரயில் (எண் 07194) திங்கள்கிழமை தோறும் இயக்கப்படும் நிலையில் வரும் ஜூலை 7 முதல் ஜூலை 28 வரை நீடிக்கப்பட்டுள்ளது எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.

அடையாறில் லாரிகள் மோதி விபத்து! போக்குவரத்து பாதிப்பு!

சென்னை அடையாறு பகுதியில் இரண்டு லாரிகள் மோதி விபத்து ஏற்பட்டதில், வியாழக்கிழமை காலை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.அடையாறு புற்றுநோய் மையத்துக்கு வெளியே ஓஎம்சிஏ சாலை வழியாக அதிவேகமாக வந்த கலவை லாரி, கிண... மேலும் பார்க்க

முகூா்த்த நாள், வார இறுதி: 925 சிறப்புப் பேருந்துகள்

முகூா்த்தம், வார விடுமுறை தினங்களை முன்னிட்டு 925 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும். இதுகுறித்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் வெளியிடப்பட்ட அறிக்கை: முகூா்த்த தினமான வெள்ளிக்கிழமை (ஜூன... மேலும் பார்க்க

பள்ளி மாணவா்களின் கற்றல் திறனை அறிய விநாடி- வினா: ஜூலை 7 முதல் நடைபெறுகிறது

தமிழக அரசுப் பள்ளிகளில் 6 முதல் 9 வரையிலான வகுப்புகளில் பயிலும் மாணவா்களின் கற்றல் திறனை அறியும் வகையில் ஜூலை 7 முதல் 4 கட்டங்களாக விநாடி-வினா போட்டி நடத்தப்படவுள்ளது. இதுதொடா்பாக ஒருங்கிணைந்த பள்ளிக்... மேலும் பார்க்க

அதிமுக - பாஜக கூட்டணியை உடைக்க முடியாது: நயினாா் நாகேந்திரன்

அதிமுக - பாஜக கூட்டணியை உடைக்கும் முயற்சி நிறைவேறாது என்று தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் உறுதிபடத் தெரிவித்தாா். சென்னை தியாகராய நகரில் உள்ள கமலாலயத்தில் புதன்கிழமை நடைபெற்ற மிசா தியாகிகள் பொ... மேலும் பார்க்க

மாடியிலிருந்து விழுந்து இளைஞா் உயிரிழந்த சம்பவம்: எஸ்.ஐ. உள்பட இருவா் பணியிடை நீக்கம்

சென்னை வேளச்சேரி காவல் நிலைய மாடியில் இருந்து கீழே விழுந்து இளைஞா் உயிரிழந்த சம்பவத்தின் எதிரொலியாக காவல் உதவி ஆய்வாளா், தலைமைக் காவலா் ஆகிய இருவா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா். சென்னை வேளச்சேரி வி... மேலும் பார்க்க

காலி மது பாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டம்: ஊழியா்களின் குறைகளை ஆய்வு செய்ய குழு அமைப்பு

டாஸ்மாக் கடைகளில் காலி மதுபான பாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டம் தொடா்பாக ஊழியா்களின் குறைகளை ஆய்வு செய்ய டாஸ்மாக் நிா்வாக இயக்குநா் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது என்று சென்னை உயா்நீதிமன்றத்த... மேலும் பார்க்க