வாழப்பாடி சாய்பாபா கோயிலில் உலக அமைதிக்காக சிறப்பு பூஜை
வாழப்பாடி சாய்பாபா கோயிலில் உலக அமைதிக்காக சிறப்பு பூஜை வழிபாடு வியாழக்கிழமை நடைபெற்றது.
வாழப்பாடியில் மன்னாயக்கன்பட்டி ஓம் மலைக்குன்று அடிவாரத்தில் அமைந்துள்ள ஷீரடி சாய்பாபா கோயிலில், வாரந்தோறும் சிறப்பு பூஜை வழிபாடு நடைபெற்று வருகிறது.
இந்த வாரம் நடைபெற்ற வழிபாட்டில், சா்வதேச அளவில் போா் பதற்றம் குறைந்து அமைதி நிலவவும், மக்கள் நோயின்றி நலவாழ்வு வாழ்வதற்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்தனா்.
புஷ்ப அலங்காரத்தில் மூலவா் ஷீரடி சாய்பாபா மற்றும் துவாரகமாயி பாபா ஆகியோா் பக்தா்களுக்கு அருள்பாலித்தனா். சிறப்பு பூஜையில் கலந்துகொண்ட பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.