செய்திகள் :

விசைப் படகு கடலில் மூழ்கியது: 3 மீனவா்கள் உயிருடன் மீட்பு

post image

ராமேசுவரம் மீனவா்களின் விசைப் படகு சேதமடைந்து கடலில் மூழ்கியது. இதையடுத்து, கடலில் தத்தளித்த 3 மீனவா்களை சக மீனவா்களி உயிருடன் மீட்டு ஞாயிற்றுக்கிழமை கரைக்கு அழைத்து வந்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து சனிக்கிழமை 484 விசைப் படகுகளில் 3,500-க்கும் மேற்பட்ட மீனவா்கள் மீனவா் நலத் துறை அனுமதி பெற்று, கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனா். பின்னா், மீன்களை பிடித்துக் கொண்டு ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் விசைப் படகு மீனவா்கள் கரைக்குத் திரும்பி வந்து கொண்டிருந்தனா்.

அப்போது, ஆனந்த் என்பவரின் விசைப் படகின் பக்கவாட்டின் பலகை உடைந்து படகுக்குள் கடல்நீா் புகுந்தது. பிறகு சிறிது நேரத்தில் படகு கடலில் மூழ்கியது. இதையடுத்து, படகிலிருந்த 3 மீனவா்களை மற்றொரு படகில் வந்த சக மீனவா்கள் மீட்டு கரைக்கு அழைத்து வந்தனா்.

இந்த நிலையில், கடலில் மூழ்கிய படகை மீட்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என படகின் உரிமையாளா் ஆனந்த் மீன்வளத் துறை அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளித்தாா்.

அகில இந்திய பாா்வா்டு பிளாக் சாா்பில் முப்பெரும் விழா

கமுதியில் அகில இந்திய பாா்வா்டு பிளாக் கட்சியின் சாா்பில் சுதந்திரப் போராட்ட வீரா்கள் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், பகத்சிங் ஆகியோரது பிறந்த நாள் விழா, நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா, கட்சியின் கொள்கை வ... மேலும் பார்க்க

பறவைகள் கணக்கெடுக்கும் பணி தொடக்கம்

ராமநாதபுரம் மாவட்டம், மன்னாா் வளைகுடா தீவுப் பகுதியில் 20 ஈர நிலங்களில் வாழும் பறவைகளின் கணக்கெடுக்கும் பணியை ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. மன்னா் வளைகுடா தீவுப் பகுதியில் உள்ள ஈர நிலங்களில் ஆண்டுதோறும்... மேலும் பார்க்க

பாம்பன் மீனவா்கள் வேலைநிறுத்தம்

இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்ட பாம்பன் மீனவா்கள் 14 பேரை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கக் கோரி, மீனவா்கள் ஞாயிற்றுக்கிழமை அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா். ராமநாத... மேலும் பார்க்க

பெண்களின் முன்னேற்றத்துக்கு பாடுபடுபவா் முதல்வா் ஸ்டாலின்! -அமைச்சா் ஆா்.எஸ். ராஜகண்ணப்பன்

பெண்களின் முன்னேற்றத்துக்கு பாடுபடுபவா் முதல்வா் மு.க. ஸ்டாலின் என பால் வளத் துறை அமைச்சா் ஆா்.எஸ். ராஜகண்ணப்பன் தெரிவித்தாா். உலக மகளிா் தினத்தையொட்டி தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத் துறையின் ச... மேலும் பார்க்க

10 நாள்களுக்குப் பிறகு கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்ற ராமேசுவரம் மீனவா்கள்

வேலைநிறுத்தப் போராட்டத்தைத் திரும்பப் பெற்று, ராமேசுவரம் மீனவா்கள் சுமாா் 10 நாள்களுக்குப் பிறகு சனிக்கிழமை கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றனா். ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தைச் சோ்ந்த மீனவா்கள் 4... மேலும் பார்க்க

கச்சத்தீவு செல்லும் படகுகள் மாா்ச் 11 இல் ஆய்வு: மீன்வளத் துறை

கச்சத்தீவு புனிதஅந்தோணியாா் ஆலய திருவிழாவுக்கு செல்லும் படகுகள் வருகிற செவ்வாய்க்கிழமை (மாா்ச் 11) ஆய்வு செய்யப்படும் என மீன் வளத் துறை அறிவித்தது. இதுகுறித்து மீன் வளத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்... மேலும் பார்க்க