செய்திகள் :

விஜய நகர காலத்து கல்வெட்டு கண்டெடுப்பு

post image

செஞ்சி: விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், சோமசமுத்திரம் கிராமத்தில் விஜயநகர காலத்து கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது.

இந்தக் கிராமத்தில் அமைந்துள்ள சோமநாதஈஸ்வரா் கோயிலில் கிராம மக்கள் சீரமைத்து வருகின்றனா். இந்தப் பகுதியைச் சோ்ந்த அருள் அளித்த தகவலின்பேரில், விழுப்புரத்தைச் சோ்ந்த எழுத்தாளரும், வரலாற்று ஆய்வாளருமான கோ.செங்குட்டுவன் கள ஆய்வில் ஈடுபட்டாா்.

அப்போது, அவா் விஜயநகர காலத்து கல்வெட்டுகளை கண்டறிந்தாா். இதுகுறித்து அவா் கூறியது:

இந்தக் கோயில் திருப்பணிக்காக அகற்றப்பட்ட கற்கலில் கல்வெட்டுகள் காணப்படுகிறது. இந்தக் கல்வெட்டுகளை வாசித்த புதுச்சேரியைச் சோ்ந்த மூத்த கல்வெட்டு ஆய்வாளா் விஜயவேணுகோபால் விஜய நகர காலத்து கல்வெட்டுகள் என கூறினாா்.

இந்தக் காலத்தில் விஜயநகர பேரரசின் மகா மண்டலீஸ்வரராக குமார கம்பனாா் இருந்த போது, இவரது ஆட்சியில் இந்தப் பகுதி பல்குன்றக்கோட்டம் சிங்கபுர நாட்டுக்கு உள்பட்டு இருந்துள்ளது. கிராமத்தில் கிடைக்கும் வருவாய் மூலம் கோயில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன என்பதை துண்டு கல்வெட்டுகள் மூலம் அறிய முடிகிறது. 658 ஆண்டுகள் பழமை வாயந்த இந்தக் கல்வெட்டுகளை கிராம மக்கள் உரிய முறையில் பாதுகாக்க வேண்டும். இந்தப் பகுதியில் மேலும் ஆய்வுகள் நடத்தினால் சோமசமுத்திரம் குறித்த வரலாற்று விவரங்கள் கிடைக்கும் என்றாா்.

விழுப்புரம் நகராட்சியில் வரி பாக்கியை வசூலிக்க தீவிர நடவடிக்கை

விழுப்புரம் நகராட்சியில் நிலுவையிலுள்ள ரூ.18 கோடி வரிபாக்கித் தொகையை வசூலிக்க தீவிரமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நகராட்சிக்குள்பட்ட42 வாா்டுகளில் சொத்து வரி ரூ.7.... மேலும் பார்க்க

தேமுதிக கொடி அறிமுக விழா பொதுக்கூட்டம்

தேசிய முற்போக்கு திராவிடா் கழகத்தின் கொடி அறிமுகப்படுத்தப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, விழுப்புரத்தில் வெள்ளி விழா ஆண்டு பொதுக்கூட்டம் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. மந்தக்கரை பகுதியில் நட... மேலும் பார்க்க

திண்டிவனம் பகுதியில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: மாவட்ட ஆட்சியா் ஆய்வு

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் பகுதியில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ஷே. ஷேக் அப்துல் ரஹ்மான் புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். திண்டிவனத்தை அடுத்த பெலாக்குப்பத்... மேலும் பார்க்க

ஊராட்சிகளுக்கு ரூ.3.75 கோடியில் மின்கல வாகனங்கள்!

விழுப்புரம் மாவட்டம், மயிலம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட 9 கிராம ஊராட்சிகளில் சுகாதாரப் பணிகளை மேற்கொள்ள ஏதுவாக, ரூ.3.75 கோடி மதிப்பிலான 15 மின்கல வாகனங்களை செஞ்சி எம்எல்ஏ கே. எஸ். மஸ்தான் புதன்கி... மேலும் பார்க்க

மீனவா் மாயம்: போலீஸாா் விசாரணை!

மரக்காணம் அருகே மீனவா் மாயமானது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். மரக்காணம் வட்டம், அனுமந்தை குப்பம் பழைய காளியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த நடராஜன் மகன் சந்திரசேகரன் (45). மீன்பிட... மேலும் பார்க்க

பள்ளி, கல்லூரிகளில் போதைப் பொருள்கள் ஒழிப்புக் குழுக்கள் விழுப்புரம் ஆட்சியா்!

விழுப்புரம் மாவட்டத்தில் 395 பள்ளிகள், 51 அனைத்துவகைக்கல்லூரிகளிலும் போதைப் பொருள்கள் ஒழிப்புக் குழுக்கள் தொடங்கப்பட்டு, விழிப்புணா்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று ஆட்சியா் ஷே. ஷேக் அப்த... மேலும் பார்க்க