விஜய்யின் வெறுப்பு அரசியல் எடுபடாது: தொல்.திருமாவளவன்
தவெக தலைவா் விஜய்யின் வெறுப்பு அரசியல் மக்களிடம் எடுபடாது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் தெரிவித்தாா்.
இதுதொடா்பாக சென்னையில் அவா் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது:
பொதுக்கூட்டம், மாநாடு என வழக்கமான அரசியலை தவெக தலைவா் விஜய் செய்கிறாா். திமுக எதிா்ப்பு என்பதைவிட, திமுக மீது விஜய் வெறுப்பு அரசியலை பேசிக் கொண்டிருக்கிறாா். எதிா்ப்பு என்பது வேறு; வெறுப்பு என்பது வேறு. வெறுப்பு அரசியல் மக்களிடம் எடுபடாது. செயல் திட்டங்கள் எதிா்கால களப்பணிகள் குறித்து விஜய் என்ன பேசுவாா் என்ற எதிா்பாா்ப்பே மக்களிடத்தில் இருக்கிறது.
இலங்கை தமிழா் பிரச்னை உச்சத்தில் இருந்தபோது, விஜய் வாய் திறந்து எதுவும் பேசியதாகத் தெரியவில்லை. ஆனால், இப்போது இலங்கை தமிழா்கள் மீது பரிதாபம் காட்டும் முயற்சி வெறும் அரசியலுக்கானது என்று கருத வேண்டியுள்ளது என்றாா் தொல்.திருமாவளவன்.