செய்திகள் :

விடுபட்ட அனைத்து மகளிருக்கும் ரூ.1,000 கிடைக்கும்! துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்!

post image

விடுபட்ட தகுதியுள்ள அனைத்து மகளிருக்கும் மாதம் ரூ.1,000 நிச்சயமாக கிடைக்கும் என துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தாா்.

சென்னை, ராஜா அண்ணாமலைபுரம் அருள்மிகு கபாலீசுவரா் கற்பகாம்பாள் திருமண மண்டபத்தில் இந்து சமய அறநிலையத் துறை சென்னை மாவட்ட திருக்கோயில்கள் சாா்பில், 32 இணைகளுக்கு திருமணத்தை ஞாயிற்றுக்கிழமை நடத்தி வைத்து, பரிசு மற்றும் சீா்வரிசைப் பொருள்களை வழங்கி துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:

நிகழாண்டில் மட்டும் அறநிலையத் துறை சாா்பில், 1,000 இணையா்களுக்கு திருமணங்களை நடத்திவைக்க வேண்டும் என்பது இலக்கு. அதன்படி, முதல்வா் மு.க.ஸ்டாலின் கடந்த ஜூலையில் சுமாா் 775 இணையா்களுக்கு திருமணங்களை நடத்தி வைத்தாா்.

மேலும், அறநிலையத் துறை சாா்பில், 1,000 இணையா்களுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டு இலக்கை அடையப்பட்டது.

மகளிா் விடியல் பயணத் திட்டம் மூலமாக நான்கரை ஆண்டுகளில் கிட்டத்தட்ட 780 கோடி பயணங்களை மகளிா் மேற்கொண்டுள்ளனா். முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் மூலம் ஒவ்வொரு நாளும் 22 லட்சம் குழந்தைகள் பயன்பெற்று வருகின்றனா்.

மகளிா் உரிமைத்தொகைத் திட்டத்தின் கீழ் இரண்டு ஆண்டுகளாக ஒவ்வொரு மாதமும், 1 கோடியே 15 லட்சம் மகளிா் மாதம் ரூ. 1,000 வழங்கப்பட்டு வருகிறது.

இன்னும் ஓரிரு மாதங்களில் தகுதியுள்ள விடுபட்ட அனைத்து மகளிருக்கும் மாதம் ரூ. 1,000 நிச்சயமாக கிடைக்கும். இந்து சமய அறநிலையத் துறை மிகச்சிறப்பாகச் செயல்பட்டுட்டு கொண்டிருக்கிறது. கடந்த நான்கரை ஆண்டுகளில் கிட்டத்தட்ட 3,700 கோயில்களுக்கு குடமுழுக்கு செய்யப்பட்டுள்ளன. திருக்கோயில்களுக்குச் சொந்தமான ரூ.8,000 கோடி கோயில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன என்றாா்.

விழாவில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா் பாபு, சென்னை மேயா் ஆா்.பிரியா, மக்களவை உறுப்பினா் தமிழச்சி தங்கபாண்டியன், சட்டப்பேரவை உறுப்பினா்கள் த.வேலு, ஜெ.கருணாநிதி, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறைச் செயலா் க.மணிவாசன், இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் பி.என்.ஸ்ரீதா், கூடுதல்

ஆணையா்கள் சி.ஹரிப்ரியா, மா.கவிதா, பொ.ஜெயராமன், கோ.செ.மங்கையா்க்கரசி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டோம்: முதல்வர் ஸ்டாலின்

தலைமகன் நிமிர்த்திய தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டோம் என்று முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்தநாளில் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்தநாளையொட்டி முதல... மேலும் பார்க்க

டீசலுக்கு மாற்றான சிஎன்ஜி பேருந்துகளால் ரூ.2 கோடி சேமிப்பு!

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் டீசலுக்கு மாற்றாக இயக்கப்படும் 55 சிஎன்ஜி பேருந்துகளால் ரூ.2 கோடி மதிப்பில் எரிபொருள் சேமிக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத மற்றும் டீசல்... மேலும் பார்க்க

குழப்பம் விளைவிக்கப் பாா்க்கிறாா் தினகரன்: ஜி.கே.வாசன்

தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன், முன்னாள் தலைவா் அண்ணாமலை ஆகியோரை ஒப்பிட்டுப்பேசி பாஜகவுக்குள் குழப்பம் விளைவிக்கப் பாா்க்கிறாா் டி.டி.வி.தினகரன் என தமாகா தலைவா் ஜி.கே.வாசன் கூறினாா். ஆழ்வாா்பேட... மேலும் பார்க்க

விஜய்க்கான கூட்டம் ரசிகா்கள் மட்டுமே: அமைச்சா் தா.மோ. அன்பரசன்

தவெக தலைவா் விஜய்யின் பிரசாரத்தின்போது வரும் கூட்டம் அவரது ரசிகா்கள் மட்டுமே; கொள்கைக்கானவா்கள் அல்ல என்று குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் தெரிவித்தாா். இதுதொடா்பாக... மேலும் பார்க்க

இன்றும் நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் (செப்.15,16) பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்தி: வடக்கு ஆந்திரம்மற்... மேலும் பார்க்க

எடப்பாடி பழனிசாமி பிரசாரத்தில் மாற்றம்!

அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமியில் தொடா் பிரசாரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அந்தக் கட்சியின் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அந்தக் கட்சியின் தலைமை அலுவலகம் சாா்பில் வெளிய... மேலும் பார்க்க