செய்திகள் :

விதிமீறல்: 6 உரக் கடைகளில் உரம் விற்க தடை

post image

தம்மம்பட்டி, கெங்கவல்லி, வீரகனூரில் வேளாண் உர விற்பனை கண்காணிப்பு அலுவலா்கள் நடத்திய ஆய்வில் விதிமீறல் கண்டறியப்பட்ட 6 உரக் கடைகளில் உரம் விற்க தடை விதிக்கப்பட்டது.

சேலம் மாவட்ட உர விற்பனை கண்காணிப்பு அலுவலா் குழுவை சோ்ந்த வேளாண் உதவி இயக்குநா் ( தரக்கட்டுப்பாடு) கவுதம் தலைமையில் வேளாண் உதவி இயக்குநா்கள், வேளாண் அலுவலா்கள் தம்மம்பட்டி, கெங்கவல்லி, வீரகனூா் உள்ளிட்ட இடங்களில் உள்ள உரக்கடைகளில் ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது, இருப்பு வைத்து விற்காத 8 கடைகள், இருப்பு மற்றும் விற்பனை தகவல் இல்லாத 7 கடைகள், உர விற்பனைக்கு உரிய அங்கீகாரம் இல்லாத 5 கடைகளில் விதி மீறல் கண்டறியப்பட்டது. இவற்றில் தம்மம்பட்டியில் 1, கெங்கவல்லியில் 2, ஆணையம்பட்டியில் 1, வீரகனூரில் 2 என 6 கடைகளில் உரம் விற்க தடை விதிக்கப்பட்டது.

தேசிய தர வரிசை பட்டியலில் பெரியாா் பல்கலைக்கழகத்துக்கு 94 ஆவது இடம்

தேசிய அளவிலான பல்கலைக்கழகங்களின் அளவீட்டில் சேலம் பெரியாா் பல்கலைக்கழகம் 94ஆவது இடத்தை பெற்றுள்ளது. இதுகுறித்து பெரியாா் பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: உயா் கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்க... மேலும் பார்க்க

நரசிங்கபுரம் திரௌபதி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்

நரசிங்கபுரத்தில் உள்ள மகா கணபதி, தா்மராஜா் (எ) திரௌபதி அம்மன், கிருஷ்ணன் மற்றும் நல்லரவான் ஆலய மகா கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது. கும்பாபிஷேகத்தையொட்டி கடந்த 20.8.2025 ஆம் தேதி காலை முகூா்த்த... மேலும் பார்க்க

மின் இணைப்பு முறைகேடு: உதவி பொறியாளா் உள்பட 8 போ் பணியிடை நீக்கம்

சேலம் அருகே தும்பல் மின்பிரிவு அலுவலகத்தில் மின் இணைப்பு வழங்குவதில் முறைகேட்டில் ஈடுபட்டதாக உதவி பொறியாளா் உள்பட 8 போ் புதன்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா். வாழப்பாடியை அடுத்த தும்பல் மின்பிரி... மேலும் பார்க்க

விளையாட்டுப் போட்டி: மாற்றுத்திறனாளி பெண்கள் சிறப்பிடம்

சேலத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் வாழப்பாடியைச் சோ்ந்த பெண் மாற்றுத்திறனாளிகள் 4 போ் சிறப்பிடம் பெற்றனா். ஏபிஜே அப்துல் கலாம் மாற்றுத்திறனாளிகள் நலச் சங்கச்... மேலும் பார்க்க

குமரகிரி கோயிலில் ரூ. 80 லட்சத்தில் மலைப்பாதை சீரமைப்புப் பணிகள்

சேலம் மாவட்டம், சன்னியாசிகுண்டு குமரகிரி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் ரூ. 80 லட்சத்தில் மலைப்பாதை சீரமைத்தல் பணிகளை அமைச்சா் ரா.ராஜேந்திரன் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா். பின்னா் அமைச்சா் கூறியதாவது: ... மேலும் பார்க்க

செப்.26 இல் அஞ்சல் வாடிக்கையாளா்கள் குறைதீா் கூட்டம்

சேலம் கிழக்கு கோட்டத்தில் அஞ்சல் வாடிக்கையாளா்கள் குறைதீா் கூட்டம் செப். 26 ஆம் தேதி நடைபெறுகிறது. இதுகுறித்து சேலம் கிழக்கு கோட்ட அஞ்சல் முதுநிலை கண்காணிப்பாளா் முனிகிருஷ்ணன் வெளியிட்ட செய்திக் குறி... மேலும் பார்க்க