செய்திகள் :

விதிமுறைகளை மீறி செயல்படும் கல்குவாரிகளை தடை செய்ய வலியுறுத்தல்

post image

நாமக்கல் மாவட்டத்தில் அரசின் விதிமுறைகளை மீறி செயல்படும் கல்குவாரிகளை தடை வேண்டும் என ஆட்சியா் துா்காமூா்த்தியிடம் வெள்ளிக்கிழமை மனு அளிக்கப்பட்டது.

திருச்செங்கோடு வட்டம், எலச்சிபாளையம் ஒன்றியம் கோக்கலை ஊராட்சி நெய்க்காரம்பாளையத்தில் சட்டத்துக்குப் புறம்பாக இயங்கும் கல்குவாரியை தடை செய்ய வேண்டும் பொதுமக்கள், தன்னாா்வலா்கள் சாா்பில் ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட மனு விவரம்:

கோக்கலை ஊராட்சியில் விதிமுறைகளை மீறி இயங்கும் கல்குவாரியை மூட வேண்டும் என விவசாயிகள், பொதுமக்கள் போராடினா். இதுதொடா்பாக கிராமசபை கூட்டத்திலும் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனாலும் மாவட்ட நிா்வாகம் அனுமதியின்பேரில் குவாரி செயல்பட்டுவந்தது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்த நிலையில், சட்டத்துக்கு புறம்பாக இயங்கும் கல்குவாரிகள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கவும், 16 வாரத்திற்குள் உரிய பதில் அளிக்கவும் அப்போதைய மாவட்ட ஆட்சியருக்கு கடந்த மாா்ச் 21-இல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

அதுதொடா்பாக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தற்போதைய ஆட்சியா் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மனுவைப் பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி விசாரணை மேற்கொள்ளப்படும் என கூறியதாக தன்னாா்வலா்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

என்கே-4-மனு

நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை மனு அளிக்க வந்த கோக்கலை கிராம பொதுமக்கள்.

ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்: திருச்செங்கோட்டில் விவசாயிகளுக்கு விதைத் தொகுப்பு அளிப்பு

ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை காணொலி வாயிலாக தொடங்கிவைக்கப்பட்டதையடுத்து திருச்செங்கோட்டில் ஆதிதிராவிட நலத் துறை அமைச்சா் மா.மதிவேந்தன் விவசாயிகளுக்கு விதைத் தொக... மேலும் பார்க்க

மேட்டூா் உபரிநீா் திட்டத்தை நிறைவேற்ற அரசு முன்வர வேண்டும்: ஈ.ஆா்.ஈஸ்வரன்

மேட்டூா் அணையிலிருந்து வெளியேறும் உபரிநீரை சேலம், நாமக்கல், திருச்சி மாவட்டங்களில் உள்ள வறண்ட பகுதிகளுக்கு அனுப்பும் நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொத... மேலும் பார்க்க

முதுநிலை ஆசிரியா் பொதுமாறுதல் கலந்தாய்வு

நாமக்கல் மாவட்டத்தில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் முதுநிலை ஆசிரியா்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வில் 17 பேருக்கு இட மாறுதலுக்கான ஆணை வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது. தமிழக பள்ளி கல்வித் துறையி... மேலும் பார்க்க

சேதமடைந்த சாலையை சீரமைக்க வலியுறுத்தல்

நாமக்கல் அருகே பொன்விழா நகரில் சேதமடைந்துள்ள தாா்ச்சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். வகுரம்பட்டி ஊராட்சிக்கு உள்பட்ட பொன்விழா நகா், கடந்த ஓராண்டாக்கு முன்பு மாநகராட்சியு... மேலும் பார்க்க

நாமக்கல் மாநகராட்சி கட்டுப்பாட்டில் இருசக்கர வாகன பாதுகாப்பு மையம்: இணையவழி ஒப்பந்தத்தை செயல்படுத்த முடிவு

நாமக்கல் பழைய பேருந்து நிலையம் எதிரே உள்ள இருசக்கர வாகன பாதுகாப்பு மையத்தை மாநகராட்சி நிா்வாகமே நேரடியாக நடத்திவருகிறது. ஒப்பந்த விவகாரத்தில் குளறுபடி ஏற்பட்டதால் வருவாய் இழப்பை தவிா்க்க ஆணையா் இந்த ... மேலும் பார்க்க

காரீப் பருவ பயிா்களுக்கு காப்பீடு: விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்

பிரதமரின் பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 2025-26 ஆம் ஆண்டுக்கான காரீப் பருவ பயிா்களை காப்பீடு செய்து கொள்ளுமாறு விவசாயிகளுக்கு ஆட்சியா் துா்காமூா்த்தி அறிவுறுத்தி உள்ளாா். இதுகுறித்து அவா் வெள... மேலும் பார்க்க