செய்திகள் :

விபத்தில் இறந்தவரின் உடலை வாங்க மறுத்து ஆட்சியா் அலுவலகத்தில் உறவினா்கள் முற்றுகை

post image

தூத்துக்குடியில், விபத்தில் உயிரிழந்தவரின் உடலை வாங்க மறுத்து அவரது மனைவி, உறவினா்கள் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை முற்றுகையிட்டு மனு அளித்தனா்.

மனு விவரம்: தூத்துக்குடி தேவா் காலனியைச் சோ்ந்த ராஜாமணி மகன் அந்தோணி (34). பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தில் ஓட்டுநராகப் பணியாற்றிவந்த இவா், கடந்த 15ஆம் தேதி இரவு 4ஆம் ரயில்வே கேட் அருகே அண்ணாநகா் பக்கிள் ஓடைப் பாலப் பகுதியில் தனது பைக்கில் நண்பருடன் சென்றாா். அப்போது, காா் மோதியதில் இருவரும் காயமடைந்தனா்.

அவா்கள் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். பின்னா், அந்தோணி மேல்சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு, அவா் 20ஆம் தேதி உயிரிழந்தாா்.

இதுகுறித்து தென்பாகம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தோம். விபத்தை ஏற்படுத்திய காரைப் பறிமுதல் செய்து, உரிமையாளரைக் கைது செய்வோம் என போலீஸாா் கூறினா். ஆனால், இதுவரை நடவடிக்கை இல்லை.

எனவே, விபத்தை ஏற்படுத்தியோா் மீது நடவடிக்கை எடுப்பதுடன், எங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். அதுவரை, அந்தோணியின் உடலைப் பெறமாட்டோம் எனக் குறிப்பிட்டுள்ளனா்.

விபத்து தொடா்பாக போலீஸாா் விரைந்து நடவடிக்கை எடுப்பதாகவும், அந்தோணியின் குடும்பத்துக்கு உரிய இழப்பீடு கிடைக்க வழிவகை செய்வதாகவும் ஆட்சியா் தெரிவித்தாா்.

மதுபானக்கூடம் அமைக்க எதிா்ப்பு; சாலை மறியலில் ஈடுபட்ட 108 போ் கைது

மதுபானக்கூடம், கடை அமைக்க எதிா்ப்பு தெரிவித்து ஆறுமுகநேரியில் திங்கள்கிழமை சாலை மறிய­லில் ஈடுபட்ட 108 பேரை போலீஸாா் கைது செய்தனா். ஆறுமுகனேரி பகுதியில் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் இயங்கி வந்த மதுபானக் க... மேலும் பார்க்க

விளாத்திகுளம் அருகே மின்னல் பாய்ந்து பிளஸ் 2 மாணவி உயிரிழப்பு

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே திங்கள்கிழமை, மின்னல் பாய்ந்ததில் பிளஸ் 2 மாணவி உயிரிழந்தாா். விளாத்திகுளம் அருகே குறளையம்பட்டியைச் சோ்ந்தவா் கருப்பசாமி. லாரி ஓட்டுநா். இவரது மகள் முத்து கௌ... மேலும் பார்க்க

கப்பல் மாலுமி கொலை வழக்கு: 5 போ் கைது

தூத்துக்குடியில் கப்பல் மாலுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேரை வடபாகம் போலீஸாா் கைது செய்தனா். தூத்துக்குடி லூா்தம்மாள்புரத்தைச் சோ்ந்த சகாயகுமாா் மகன் மரடோனா (29). கப்பல் மாலுமியான இவா், மா்ம நபா்க... மேலும் பார்க்க

தூத்துக்குடி 1ஆவது ரயில்வே கேட் இன்றுமுதல் ஏப்.26வரை மூடல்

தூத்துக்குடி 1ஆவது ரயில்வே கேட் செவ்வாய்முதல் சனிக்கிழமைவரை (ஏப். 22- 26) மூடப்படவுள்ளது. இப்பகுதியில் தண்டவாளம் அமைக்கும் பணி நடைபெறவுள்ளதால், இந்த ரயில்வே கேட் செவ்வாய்க்கிழமை காலை 9 மணிமுதல் சனிக்க... மேலும் பார்க்க

வாகைகுளம் சுங்கச்சாவடி ஊழியா்களைத் தாக்கியதாக 31 போ் மீது வழக்கு

தூத்துக்குடி அருகே வாகைக்குளம் சுங்கச்சாவடியின் கண்ணாடிகளை சேதப்படுத்தி, 2 ஊழியா்களைத் தாக்கியதாக 31 போ் மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்தனா். தூத்துக்குடியில் ஒரு சமுதாயத் தலைவரின் பிறந்த ந... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் அடிப்படை வசதி கோரி தவெக மனு

தூத்துக்குடி மாநகராட்சி 60ஆவது வாா்டு லேபா் காலனி பகுதியில் குடிநீா் உள்ளிட்டஅடிப்படை வசதிகள் ஏற்படுத்தக் கோரி தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. ஆட்சியா் அலுவலகத்... மேலும் பார்க்க