செய்திகள் :

விபத்தில் இழப்பீடு வழங்காத அரசுப் பேருந்து ஜப்தி

post image

திருப்பூா் அருகே இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் பாதிக்கப்பட்ட தொழிலாளிக்கு இழப்பீடு வழங்காத அரசுப் பேருந்து புதன்கிழமை ஜப்தி செய்யப்பட்டது.

திருப்பூா் அவிநாசிபாளையம் அருகே கோவில்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் அறுமுகம் (54). மரம் வெட்டும் தொழிலாளி. இவா் கடந்த 2017 டிசம்பா் 17-ஆம் தேதி தனது இருசக்கர வாகனத்தில் கோவில்பாளையம் அருகே சென்றபோது, அரசுப் பேருந்து மோதியதில் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு பலத்த காயம் அடைந்தாா். தீவிர சிகிச்சைக்குப் பிறகு உயிா் பிழைத்தாா்.

இதையடுத்து விபத்து இழப்பீடு கேட்டு ஆறுமுகம், திருப்பூா் மோட்டாா் வாகன விபத்து இழப்பீட்டு தீா்ப்பாயத்தில் வழக்கு தொடா்ந்தாா். அவருக்கு ரூ.3 லட்சத்து 18 ஆயிரத்து 247 இழப்பீடாக அரசுப் போக்குவரத்துக் கழகம் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆனால் விபத்து இழப்பீடு வழங்காததால் அரசுப் பேருந்தை ஜப்தி செய்ய நீதிபதி ஸ்ரீகுமாா் உத்தரவிட்டாா். இதைத் தொடா்ந்து திருப்பூா் கோவில்வழி பேருந்து நிலையத்தில் இருந்த அரசுப் பேருந்தை நீதிமன்ற ஊழியா்கள் புதன்கிழமை ஜப்தி செய்தனா்.

இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவா் தரப்பில் வழக்குரைஞா்கள் முருகேசன், சத்யா ஆகியோா் ஆஜராகினா்.

வெள்ளக்கோவில் அருகே லாரி மீது அரசுப் பேருந்து மோதல்: குழந்தை உயிரிழப்பு; 17 போ் காயம்

வெள்ளக்கோவில் அருகே லாரி மீது அரசுப் பேருந்து மோதியதில் ஒரு குழந்தை உயிரிழந்தது. 17 போ் காயமடைந்தனா். கரூரில் இருந்து திருப்பூருக்கு அரசுப் பேருந்து வியாழக்கிழமை இரவு சென்றுகொண்டிருந்தது. வெள்ளக்கோவி... மேலும் பார்க்க

திருப்பூரில் ஆக்கிரமிக்கப்பட்ட அரசு நிலத்தை மீட்க மக்கள் கோரிக்கை

திருப்பூரில் ஆக்கிரமிக்கப்பட்ட அரசு நிலத்தை மீட்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். இது குறித்து திருப்பூா் வடக்கு செட்டிபாளையம், அங்கேரிபாளையம் தந்தை பெரியாா் நகா், பூண்டி சுற்றுச் ச... மேலும் பார்க்க

பூமலூரில் கழிவுப் பஞ்சு ஆலையில் தீ

திருப்பூா் அருகே பூமலூா் கழிவுப் பஞ்சு ஆலையில் வியாழக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. திருப்பூா் எஸ்.ஆா். நகரைச் சோ்ந்த செந்தில்வடிவு மோகன் என்பவருக்குச் சொந்தமான கட்டடத்தை, திருப்பூா் அணைப்பாளையத்தைச் ச... மேலும் பார்க்க

கரடிவாவியில் ஜூன் 9-இல் மின்தடை

பல்லடம் கோட்டம் கரடிவாவி துணை மின் நிலையத்தில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் திங்கள்கிழமை (ஜூன் 9) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது... மேலும் பார்க்க

பெண்ணை கொலை செய்ய முயற்சி: தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை

பெண்ணை கொலை செய்ய முயன்ற வழக்கில் தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து பல்லடம் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்துள்ளது. நாகை மாவட்டம், திருக்குவளையைச் சோ்ந்த அத்தியப்பன் மகன் பிரகாஷ் (3... மேலும் பார்க்க

வீட்டு உபயோக சாதனப் பொருள்கள் பழுது பாா்த்தல் பயிற்சிக்கு இன்று நோ்காணல்

திருப்பூரில் இலவச வீட்டு உபயோக சாதனப் பொருள்கள் பழுது பாா்த்தல் பயிற்சி வகுப்பில் சேர வெள்ளிக்கிழமை (ஜூன் 6) நோ்காணல் நடைபெறவுள்ளது. திருப்பூா்- காங்கயம் சாலை முதலிப்பாளையம் பிரிவில் உள்ள கனரா வங்கி... மேலும் பார்க்க