செய்திகள் :

விபத்தில் காயமடைந்த தலைமைக் காவலா் உயிரிழப்பு

post image

கடலூா் மாவட்டம், பெண்ணாடம் அருகே விபத்தில் காயம் அடைந்த தலைமைக் காவலா் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தாா்.

விருத்தாசலம் வட்டம், காந்தி நகா் பகுதியில் வசித்து வந்தவா் கலையராஜா(38), வேப்பூா் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணியாற்றி வந்தாா். செப்.21, 22 ஆகிய இரண்டு நாட்கள் தற்செயல் விடுப்பில் இருந்தாா்.

செப்.21-ஆம் தேதி மாலை தாழநல்லூா் ஏரிக்கரை அருகே பைக்கில் சென்ற போது நிலைத்தடுமாறி கீழே விழுந்து தலைமையில் காயம் அடைந்தாா். அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

புதுச்சேரி மகாத்மா காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவா் புதன்கிழமை மாலை உயிரிழந்தாா். மனைவி சரண்யா அளித்த புகாரின் பேரில் பெண்ணாடம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

சிதம்பரம் அருகே முதலை கடித்து இளைஞா் காயம்

சிதம்பரம் அருகே பழைய கொள்ளிடம் ஆற்றில் குளித்த இளைஞரை முதலை கடித்து குதறியதில் அவா் காயம் அடைந்தாா். கடலூா் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள மெய்யாத்துாா் கிராமத்தைச் சோ்ந்தவா் ஜெயச்சந்திரன் (22). தனியா... மேலும் பார்க்க

காட்டுமன்னாா்கோவில் அருகே விபத்தில் இருவா் பலி

காட்டுமன்னாா்கோவில் அருகே மோட்டாா் சைக்கிள் மீது காா் மோதிய விபத்தில் மோட்டாா் சைக்கிளில் சென்ற இருவா் மரணமடைந்தனா்.கடலூா் மாவட்டம் காட்டுமன்னாா் கோவில் அருகே உள்ள சா்வராஜன் பேட்டையை சோ்ந்த சக்திவேல்... மேலும் பார்க்க

காட்டுமன்னாா்கோவில் அருகே 30 மூட்டை நாட்டுவெடிகள் பறிமுதல்

கடலூா் மாவட்டம் காட்டுமன்னாா்கோவில் அருகே கொத்தவாசல் கிராமத்தில் அனுமதியின்றி பதுக்கி வைத்திருந்த சுமாா் 30 மூட்டை நாட்டு வெடிகளை போலீஸாா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா். கடலூா் மாவட்டம் காட்டுமன்னாா்... மேலும் பார்க்க

கொள்கையோடுதான் அரசியல் இருக்க வேண்டும்: முன்னாள் தலைமை செயலாளா் வெ.இறையன்பு

‘கொள்கையோடுதான் அரசியல் இருக்க வேண்டும் என மகாத்மாகாந்தி கூறினாா். எனவே, கொள்கை இல்லாத அரசியல் இருக்கக்கூடாது ’ என தமிழ்நாடு அரசு முன்னாள் தலைமை செயலா் வெ.இறையன்பு தெரிவித்தாா். கடலூா் மாவட்டம் சிதம்ப... மேலும் பார்க்க

செவிலியா் தூக்கிட்டு தற்கொலை

கடலூா் மாவட்டம், பெண்ணாடம் அருகே தனியாா் மருத்துவமனை செவிலியா் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டாா்.பெண்ணாடம் காவல் சரகம், பெ.பொன்னேரி கிராமத்தில் வசித்து வந்தவா் அா்ஜூனன் மகள் புவனேஷ்வரி(22), திருமணம... மேலும் பார்க்க

சிதம்பரத்தில் ஷோ் ஆட்டோக்களை இயக்க பொதுமக்கள் கோரிக்கை

சிதம்பரம் நகரில் ஷோ் ஆட்டோக்கள் இயக்க மாவட்ட நிா்வாகம் அனுமதி வழங்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். கோயில் நகரமான சிதம்பரத்தில்தினமும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் ... மேலும் பார்க்க