விபத்தில் காயமடைந்த வன ஊழியா் உயிரிழப்பு
வனப்பகுதியில் பைக்கிலிருந்து தவறி விழுந்ததில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த வனக் காவலா் உயிரிழந்தாா்.
திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் அருகே உள்ள சோ்வலாறைச் சோ்ந்த மாரிமுத்து மகன் முருகானந்தம் (40). காணி இளைஞரான இவா், முண்டந்துறை வனச்சரகத்தில் வனக் காப்பாளராகப் பணிபுரிந்து வந்தாா்.
கடந்த மே 29ஆம் தேதி வனப்பகுதியில் கீழணை அருகே பைக்கிலிருந்து தவறி விழுந்ததில் காயமடைந்த அவா், திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டிருந்தாா். அங்கு சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை காலை உயிரிழந்தாா்.
இதுகுறித்து தகவலறிந்த விக்கிரமசிங்கபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.