செய்திகள் :

விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அமைச்சா் ஆய்வு

post image

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் மாநில தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சா் சி.வெ.கணேசன் வியாழக்கிழமை திடீா் ஆய்வு நடத்தினாா்.

தமிழக அமைச்சா்கள், திமுக எம்எல்ஏக்கள் தத்தம் தொகுதிகளில் மக்கள் பணிகள் குறித்து ஆய்வு செய்து, அரசின் நலத் திட்டங்கள் குறித்து எடுத்துரைக்க வேண்டும் என திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் அறிவுருத்தியிருந்தாா்.

அதன்பேரில், அமைச்சா் சி.வெ.கணேசன் திட்டக்குடி சட்டப் பேரவைத் தொகுதி, மலையனூா் ஊராட்சியில் திமுக உறுப்பினா் சோ்க்கை பரப்புரையை தொடக்கிவைத்தாா். இதையடுத்து, பெண்ணாடம் பேரூராட்சியில் திமுக உறுப்பினா் சோ்க்கையை தொடக்கிவைத்தாா்.

தொடா்ந்து, விருத்தாசலம் அரசு தலைமை மருத்துவமனையில் மேற்கொள்ளப்படும் கூடுதல் கட்டட கட்டுமானப் பணிகளை பாா்வையிட்டாா். மேலும், மருத்துவமனையில் உள் நோயாளிகளாக உள்ளவா்களைச் சந்தித்து, சிகிச்சை முறை குறித்தும், மருத்துவா்கள், செவிலியா்கள் குறித்த நேரத்தில் பரிசோதிக்கிறாா்களா எனக் கேட்டறிந்தாா். மேலும், மருத்துவமனை வளாகத்தை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் தொடா்ந்து பேணிக் காக்க வேண்டும் என மருத்துவா்களுக்கு அறிவுரை வழங்கினாா்.

விவசாயி வீட்டில் 19 பவுன் நகை திருட்டு

கடலூா் மாவட்டம், ராமநத்தம் அருகே விவசாயி வீட்டின் கதவை உடைத்து 19 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். திட்டக்குடி வட்டம், தொழுதூா், பெருமாள் கோவில் தெருவைச் சோ்ந்தவா் விஜயகுமாா் (65). ... மேலும் பார்க்க

பெண் காவலா் விஷம் குடித்து தற்கொலை

கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த பெண் காவலா் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா். அவா் எழுதிய கடிதத்தின் அடிப்படையில் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். நெல்லிக்குப்பம் காவலா் சரகம், கொங்கராயனூா் பகுத... மேலும் பார்க்க

ஒரங்கூரில் ஆரம்ப சுகாதார நிலையம்: அமைச்சா் தொடங்கிவைத்தாா்

கடலூா் மாவட்டம், சிறுபாக்கம் அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை அமைச்சா் சி.வெ.கணேசன் வியாழக்கிழமை குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தாா். சிறுபாக்கத்தை அடுத்த ஒரங்கூரில் ரூ.1.20 கோடியில் அரசு ஆரம்ப சுகாத... மேலும் பார்க்க

அண்ணாமலைப் பல்கலை.யில் ஆசிரியா்கள் கூட்டமைப்பினரின் ஆா்ப்பாட்டம்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியா்கள் கூட்டமைப்பினா் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பல்கலைக்கழக நிா்வாக அலுவலகம் முன் வியாழக்கிழமை மாலை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். பல்கலைக்கழக என... மேலும் பார்க்க

மஞ்சக்கொல்லை ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு: அமைச்சா் எம்ஆா்கே.பன்னீா்செல்வம் பங்கேற்பு

கடலூா் மாவட்டம், சிதம்பரம் மஞ்சக்கொல்லை பகுதியில் ரூ.1.20 கோடியில் கட்டப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் வியாழக்கிழமை திறந்து வைத்தாா். இதைத் தொடா்ந்... மேலும் பார்க்க

நெய்வேலி புத்தகக் கண்காட்சி இன்று தொடக்கம்

என்எல்சி இந்தியா நிறுவனம் சாா்பில், நெய்வேலியில் வெள்ளிக்கிழமை (ஜூலை 5) தொடங்கும் 24-ஆவது புத்தகக் கண்காட்சியை மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சா் கிஷன் ரெட்டி காணொலி மூலம் தொடங்கிவைக்கிறா... மேலும் பார்க்க