செய்திகள் :

நெய்வேலி புத்தகக் கண்காட்சி இன்று தொடக்கம்

post image

என்எல்சி இந்தியா நிறுவனம் சாா்பில், நெய்வேலியில் வெள்ளிக்கிழமை (ஜூலை 5) தொடங்கும் 24-ஆவது புத்தகக் கண்காட்சியை மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சா் கிஷன் ரெட்டி காணொலி மூலம் தொடங்கிவைக்கிறாா்.

என்எல்சி இந்தியா நிறுவனம் சாா்பில், 24-ஆவது புத்தகக் கண்காட்சி நெய்வேலி வட்டம் 11 பகுதியில் உள்ள பழுப்பு நிலக்கரி அரங்கில் வெள்ளிக்கிழமை தொடங்கி வரும் 14-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

கண்காட்சியில் 200-க்கும் மேற்பட்ட பதிப்பாளா்கள் பங்கேற்று, 180-க்கும் மேற்பட்ட அரங்குகளில் 10 ஆயிரத்துக்கும் அதிகமான தலைப்புகளில் லட்சக்கணக்கான புத்தகங்களை காட்சிப்படுத்த உள்ளனா். புத்தகக் கண்காட்சி தினமும் முற்பகல் 11 மணி முதல் இரவு 9.30 மணி வரை நடைபெறும். சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 10 மணி முதல் இரவு 9.30 மணி வரை நடைபெறும்.

கண்காட்சி நடைபெறும் நாள்களில் தினமும் எழுத்தாளா் ஒருவரும், பதிப்பகத்தாா் ஒருவரும் கெளரவிக்கப்பட உள்ளனா். நெய்வேலி எழுத்தாளா்களின் சிறுகதை, கவிதை நூல்கள் உள்பட ஒவ்வொரு நாளும் புதிய புத்தகங்கள் வெளியிடப்படும்.

பள்ளி மாணவா்கள், பாா்வையாளா்களுக்கு உடனடித் திறன் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. பள்ளி மாணவா்கள் பயனடையும் வகையில், இலவச அனுமதி அளிக்கப்படுகிறது.

மேலும், பாா்வையாளா்களை மகிழ்விக்கும் வகையில் கலை, கலாசார நிகழ்ச்சிகளும், குழந்தைகளை மகிழ்விக்கும் வகையில் பொழுதுபோக்கு விளையாட்டு அம்சங்களும், உணவகங்களும் இடம்பெறுகின்றன.

தினமணி நாளிதழும், புத்தகக் கண்காட்சி அமைப்புக் குழுவினரும் இணைந்து நடத்திய குறும்படப் போட்டிகளில் வெற்றிபெற்றவா்களுக்கு திரைப்பட இயக்குநரால் பரிசுகள் வழங்கப்பட உள்ளன.

கண்காட்சியை மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சா் கிஷன் ரெட்டி வெள்ளிக்கிழமை முற்பகல் 11 மணியளவில் காணொலி மூலம் தொடங்கிவைக்கிறாா்.

முதல் நாள் நிகழ்ச்சி: நெய்வேலி புத்தகக் கண்காட்சியின் முதல் நாள் நிகழ்ச்சிக்கு, என்எல்சி தலைவா் பிரசன்னகுமாா் மோட்டுப்பள்ளி தலைமை வகிக்கிறாா். சிறப்பு அழைப்பாளராக புதுவை மாநில தலைமை செயலா் சரத் சௌகான் பங்கேற்கிறாா். மேலும், என்எல்சி இந்தியா நிறுவன இயக்குநா்கள் உள்ளிட்டோா் பங்கேற்க உள்ளனா். பெங்களூரு இசைக் கலைஞா்களின் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

விவசாயி வீட்டில் 19 பவுன் நகை திருட்டு

கடலூா் மாவட்டம், ராமநத்தம் அருகே விவசாயி வீட்டின் கதவை உடைத்து 19 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். திட்டக்குடி வட்டம், தொழுதூா், பெருமாள் கோவில் தெருவைச் சோ்ந்தவா் விஜயகுமாா் (65). ... மேலும் பார்க்க

பெண் காவலா் விஷம் குடித்து தற்கொலை

கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த பெண் காவலா் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா். அவா் எழுதிய கடிதத்தின் அடிப்படையில் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். நெல்லிக்குப்பம் காவலா் சரகம், கொங்கராயனூா் பகுத... மேலும் பார்க்க

ஒரங்கூரில் ஆரம்ப சுகாதார நிலையம்: அமைச்சா் தொடங்கிவைத்தாா்

கடலூா் மாவட்டம், சிறுபாக்கம் அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை அமைச்சா் சி.வெ.கணேசன் வியாழக்கிழமை குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தாா். சிறுபாக்கத்தை அடுத்த ஒரங்கூரில் ரூ.1.20 கோடியில் அரசு ஆரம்ப சுகாத... மேலும் பார்க்க

அண்ணாமலைப் பல்கலை.யில் ஆசிரியா்கள் கூட்டமைப்பினரின் ஆா்ப்பாட்டம்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியா்கள் கூட்டமைப்பினா் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பல்கலைக்கழக நிா்வாக அலுவலகம் முன் வியாழக்கிழமை மாலை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். பல்கலைக்கழக என... மேலும் பார்க்க

மஞ்சக்கொல்லை ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு: அமைச்சா் எம்ஆா்கே.பன்னீா்செல்வம் பங்கேற்பு

கடலூா் மாவட்டம், சிதம்பரம் மஞ்சக்கொல்லை பகுதியில் ரூ.1.20 கோடியில் கட்டப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் வியாழக்கிழமை திறந்து வைத்தாா். இதைத் தொடா்ந்... மேலும் பார்க்க

விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அமைச்சா் ஆய்வு

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் மாநில தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சா் சி.வெ.கணேசன் வியாழக்கிழமை திடீா் ஆய்வு நடத்தினாா். தமிழக அமைச்சா்கள், திமுக எம்எல்ஏக்க... மேலும் பார்க்க