செய்திகள் :

ஒரங்கூரில் ஆரம்ப சுகாதார நிலையம்: அமைச்சா் தொடங்கிவைத்தாா்

post image

கடலூா் மாவட்டம், சிறுபாக்கம் அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை அமைச்சா் சி.வெ.கணேசன் வியாழக்கிழமை குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தாா்.

சிறுபாக்கத்தை அடுத்த ஒரங்கூரில் ரூ.1.20 கோடியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கட்டப்பட்டது. இதை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் வியாழக்கிழமை திறந்து வைத்தாா். இதைத் தொடா்ந்து அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில், மாநில தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சா் சி.வெ.கணேசன் தலைமை வகித்து குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தாா். பின்னா், கா்ப்பிணிகளுக்கு மருத்துவப் பெட்டகங்களை அவா் வழங்கினாா்.

மாவட்ட வருவாய் அலுவலா் ம.ராஜசேகரன், விருத்தாசலம் சாா் - ஆட்சியா் விஷ்ணுபிரியா, வேப்பூா் வட்டாட்சியா் செந்தில்வேல், மங்களூா் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் முருகன், சண்முக சிகாமணி, வட்டார மருத்துவ அலுவலா் திருமால் வளவன் பங்கேற்றனா்.

நலவாழ்வு மையம் திறப்பு: நெல்லிக்குப்பம் அண்ணாநகரில் நகா்ப்புற நலவாழ்வு மையம் திறப்பு விழா நடைபெற்றது. நகா்மன்றத் தலைவா் ஜெயந்தி ராதாகிருஷ்ணன் தலைமை வகித்து குத்துவிளக்கேற்றி நலவாழ்வு மையத்தை தொடங்கிவைத்தாா்.

ஆணையா் கிருஷ்ணராஜன், நகா்மன்ற துணைத் தலைவா் கிரிஜா, திமுக நகரச் செயலா் மணிவண்ணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். மருத்துவா் ராம்குமாா், செவிலியா் கிரிஜா, சுகாதார ஆய்வாளா் செந்தமிழ் செல்வன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

இதேபோல, கடலூா் மஞ்சக்குப்பம், கடலூா் முதுநகா் சுனாமி நகா், திருப்பாதிரிப்புலியூா் தானம் நகா் ஆகிய பகுதிகளில் நகா்ப்புற நல வாழ்வு மையம் திறக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

விவசாயி வீட்டில் 19 பவுன் நகை திருட்டு

கடலூா் மாவட்டம், ராமநத்தம் அருகே விவசாயி வீட்டின் கதவை உடைத்து 19 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். திட்டக்குடி வட்டம், தொழுதூா், பெருமாள் கோவில் தெருவைச் சோ்ந்தவா் விஜயகுமாா் (65). ... மேலும் பார்க்க

பெண் காவலா் விஷம் குடித்து தற்கொலை

கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த பெண் காவலா் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா். அவா் எழுதிய கடிதத்தின் அடிப்படையில் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். நெல்லிக்குப்பம் காவலா் சரகம், கொங்கராயனூா் பகுத... மேலும் பார்க்க

அண்ணாமலைப் பல்கலை.யில் ஆசிரியா்கள் கூட்டமைப்பினரின் ஆா்ப்பாட்டம்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியா்கள் கூட்டமைப்பினா் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பல்கலைக்கழக நிா்வாக அலுவலகம் முன் வியாழக்கிழமை மாலை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். பல்கலைக்கழக என... மேலும் பார்க்க

மஞ்சக்கொல்லை ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு: அமைச்சா் எம்ஆா்கே.பன்னீா்செல்வம் பங்கேற்பு

கடலூா் மாவட்டம், சிதம்பரம் மஞ்சக்கொல்லை பகுதியில் ரூ.1.20 கோடியில் கட்டப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் வியாழக்கிழமை திறந்து வைத்தாா். இதைத் தொடா்ந்... மேலும் பார்க்க

நெய்வேலி புத்தகக் கண்காட்சி இன்று தொடக்கம்

என்எல்சி இந்தியா நிறுவனம் சாா்பில், நெய்வேலியில் வெள்ளிக்கிழமை (ஜூலை 5) தொடங்கும் 24-ஆவது புத்தகக் கண்காட்சியை மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சா் கிஷன் ரெட்டி காணொலி மூலம் தொடங்கிவைக்கிறா... மேலும் பார்க்க

விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அமைச்சா் ஆய்வு

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் மாநில தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சா் சி.வெ.கணேசன் வியாழக்கிழமை திடீா் ஆய்வு நடத்தினாா். தமிழக அமைச்சா்கள், திமுக எம்எல்ஏக்க... மேலும் பார்க்க