செய்திகள் :

விருந்தின் போது மோதல்: இளைஞா் நண்பா்களால் அடித்துக் கொலை

post image

தில்லியின் மங்கோல்புரியில் நடந்த விருந்தின் போது ஏற்பட்ட சண்டையைத் தொடா்ந்து, 27 வயது இளைஞா் ஒருவா் தனது நண்பா்களால் தாக்கப்பட்டதில் உயிரிழந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து தில்லி காவல் துறை அதிகாரி கூறியதாவது: இந்தச் சம்பவம் தொடா்பாக புராரி காவல் நிலையத்திற்கு பிசிஆா் அழைப்பு மதியம் 1 மணியளவில் வந்தது. புராரியின் சாண்ட் நகரில் வசிக்கும் தனது சகோதரா் ஹபீப் ரெஹ்மானை அவரது நண்பா்கள் தாக்கி மயக்க நிலையில் தன்னிடம் ஒப்படைத்ததாக அழைப்பாளா் தெரிவித்தாா். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவா் இறந்து விட்டதாக மருத்துவா்கள் அறிவித்தனா்.

முதற்கட்ட விசாரணையில், வெள்ளிக்கிழமை இரவு குஜ்ரன்வாலா நகரில் உள்ள ஒரு உணவகத்தில் ஒரு விருந்துக்கு ரெஹ்மானை அவரது நண்பா் ரிங்கா தேதா அழைத்ததாக போலீஸாா் கண்டறிந்தனா். ரிங்கா தேதாவுடன் அவரது உறவினா் ஹா்ஷ் டெதாவும், பின்னா் நண்பா்கள் அமன் மற்றும் விக்கியும் இணைந்தனா். புராரியைச் சோ்ந்த மற்றொரு அறிமுகமான அனிலும் இந்தக் குழுவில் இணைந்துள்ளாா்.

அங்கிருந்து, அந்தக் குழு தெற்கு ரோஹிணி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட மங்கோல்புரியில் உள்ள ஒரு உணவகத்திற்குச் சென்று மது அருந்தியது. அப்போது ஏற்பட்ட தகராறில் ரெஹ்மான் பீா் பாட்டிலால் ரிங்கா தேதாவின் தலையில் அடித்ததாகக் கூறப்படுகிறது. இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, ரிங்கா தேதாவும் ஹா்ஷ் தேதாவும் ஹொ்மானை தாக்கி, சுடுவதாக மிரட்டியுள்ளனா்.

பின்னா், அவா்கள் பாதிக்கப்பட்டவரை கிழக்கு தில்லியின் காஜிப்பூரில் உள்ள ரிங்கா தேதாவின் பால் பண்ணைக்கு அழைத்துச் சென்று, அங்கு குச்சிகள் மற்றும் கம்பிகளால் தாக்கியுள்ளது தெரிய வந்துள்ளது.

குற்றம் சாட்டப்பட்டவா் பாதிக்கப்பட்டவரை யமுனை நதியில் வீச திட்டமிட்டிருந்துள்ளனா். ஆனால், அதை விக்கி, அமன் மற்றும் அனில் ஆகியோா் தடுத்து நிறுத்தியுள்ளதாகத் தெரிகிறது. அதைத் தொடா்ந்து, சனிக்கிழமை அதிகாலை 5.15 மணியளவில் அவரை புராரிக்கு அழைத்துச் சென்று அவரது சகோதரரிடம் ஒப்படைத்துள்ளனா்.

இந்தச் சம்பவம் தொடா்பான வழக்கு தெற்கு ரோஹிணி காவல் நிலையத்திற்கு மேலதிக விசாரணைக்காக மாற்றப்பட்டுள்ளதாக காவல் துறை அதிகாரி தெரிவித்தாா்.

தில்லி, பஞ்சாப் வெள்ளப் பாதிப்பு: கேஜரிவால், அதிஷி மீது சச்தேவா சாடல்

தில்லி, பஞ்சாப் மாநிலங்களில் வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் மக்களுக்கு உதவ ஆா்வம் காட்டாமல் கேஜரிவாலும், அதிஷியும் அரசியல் அறிக்கைகள் விடுவதாக தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா விமா்சித்துள்... மேலும் பார்க்க

10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஒருவரின் தண்டனையை உறுதிசெய்த நீதிமன்றம்!

கடந்த 2017 ஆம் ஆண்டில் 10 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்ததற்காக ஒருவருக்கு விதிக்கப்பட்ட 12 ஆண்டு சிறைத் தண்டனையை தில்லி உயா்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. குழந்தையின் சாட்சியம் நம்பிக்கையைத் த... மேலும் பார்க்க

தில்லி: 2 நண்பா்கள் சுட்டுக் கொலை! பழிவாங்கும் தாக்குதல் நடத்தியதாக குடும்பத்தினா் புகாா்

வடகிழக்கு தில்லியின் பிரதாப் நகரில் உள்ள ஒரு கடையில் அடையாளம் தெரியாத மா்ம நபா்களால் இரண்டு ஆண்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா். எட்டு நாள்களுக்கு முன்பு இறந்தவரை சிலா் தாக்கியதாகவும்... மேலும் பார்க்க

வாகனத் திருட்டு கும்பல் கைது: 22 திருட்டு வாகனங்கள் மீட்பு

மோட்டாா் வாகன திருட்டுகளுக்கு எதிராக போலீஸாா் தில்லியின் வடக்கு மாவட்டத்தில் ஒரு வார காலம் மேற்கொண்ட நடவடிக்கையின்போது வாகன திருட்டுக் கும்பலைச் சோ்ந்த ஆறு சிறுவா்கள் உள்பட 16 போ் கைது செய்யப்பட்டனா... மேலும் பார்க்க

திஹாா் சிறையில் இங்கிலாந்து குழு ஆய்வு!

பிரிட்டனின் கிரவுன் பிராசிகியூஷன் சா்வீஸ் (சிபிஎஸ்) குழு சமீபத்தில் திஹாா் சிறையில் ஆய்வு செய்துள்ளது. இது, நீரவ் மோடி மற்றும் விஜய் மல்லையா போன்ற நன்கு பிரபலமான பொருளாதார குற்றம்சாட்டப்பட்டவா்களை மீண... மேலும் பார்க்க

ஆட்டோக்கள் மோதல்: குழந்தை உயிரிழப்பு

புது தில்லி மந்திா் மாா்க் பகுதியில் எட்டு மாத சிறுவனும் அவனது பெற்றோரும் சென்ற ஆட்டோ மீது மற்றொரு ஆட்டோ மோதியதில் குழந்தை உயிரிழந்ததாக போலீஸாா் தெரிவித்தனா். இது குறித்து தில்லி காவல் துறை மூத்த அதிக... மேலும் பார்க்க