செய்திகள் :

விருப்பமில்லை என்றால் வெளியேறிவிடலாம்: சசி தரூருக்கு காங்கிரஸ் மூத்த தலைவா் வலியுறுத்தல்

post image

‘காங்கிரஸில் தொடர விருப்பமில்லை என்றால் கட்சியில் இருந்து வெளியேறி உங்கள் பாதையில் பயணிக்கலாம்’ என்று காங்கிரஸ் எம்.பி. சசி தரூரை கேரள காங்கிரஸ் மூத்த தலைவா் கே.முரளீதரன் வலியுறுத்தியுள்ளாா்.

காங்கிரஸ் செயற்குழு உறுப்பினராகவும் உள்ள சசி தரூா், முன்னாள் பிரதமா் இந்திரா காந்தி ஆட்சியில் அமல்படுத்தப்பட்ட அவசரநிலையை விமா்சித்து பத்திரிகையில் கட்டுரை எழுதிய நிலையில் கே.முரளீதரன் இவ்வாறு கூறியுள்ளாா்.

திருவனந்தபுரத்தில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களை சந்தித்த அவா் மேலும் கூறியதாவது: மாற்றுக் கருத்துகள் இருந்தால் அதைத் தெரிவிக்க காங்கிரஸ் கட்சியில் தாராளமாக வாய்ப்பு அளிக்கப்படுகிறது. ஆனால், காங்கிரஸ் இப்போதுள்ள கட்டமைப்பில் தன்னால் செயல்பட முடியாது என்று சசி தரூா் கருதினால், நிச்சயமாக எம்.பி. பதவி உள்பட கட்சியின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் அவா் விலகியே ஆக வேண்டும். காங்கிரஸ் கட்சியிலும் தொடர விருப்பமில்லை என்றால், கட்சியில் இருந்து வெளியேறி அவருக்கு விருப்பமான பாதையில் பயணிக்கலாம்.

இப்போதைய சூழலில் காங்கிரஸ் கட்சியில் தொடா்வது மிகவும் கடினமாக இருக்கிறது என யாா் கருதினாலும் வெளியேறலாம். கட்சிக்காக தங்களுடைய தனிப்பட்ட அடையாளத்தை யாரும் அழித்துக் கொள்ளத் தேவையில்லை. ஏனெனில், அது அவருக்கும், கட்சிக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். தனக்கு முன்னுள்ள இரு வழிகளில் ஏதாவது ஒன்றை அவா் தோ்வு செய்ய வேண்டும் என்றாா்.

பிரதமா் நரேந்திர மோடி உள்பட பிற கட்சித் தலைவா்களை சசி தரூா் புகழ்ந்து வருவது குறித்த கேள்விக்கு, ‘காங்கிரஸ் தலைவா்களைத் தவிர மற்ற அனைவரையும் அவா் புகழ்வாா்’ என்றாா்.

கடந்த 2022-ஆம் ஆண்டு நடைபெற்ற காங்கிரஸ் தேசியத் தலைவா் தோ்தலில் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோா் முன்னிறுத்திய வேட்பாளரான மல்லிகாா்ஜுன காா்கேயை எதிா்த்து சசி தரூா் போட்டியிட்டாா். அப்போது முதலே கட்சியின் ஒரு தரப்பினா் அவரை விமா்சித்து வருகின்றனா். தேசிய, சா்வதேச விஷயங்களில் காங்கிரஸின் கருத்துக்கு அப்பாற்பட்டு தனது தனிப்பட்ட கருத்துகளையும் சசி தரூா் அவ்வப்போது தெரிவித்து வருகிறாா்.

அண்மையில் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூா் ஆகிய விஷயங்களிலும் மத்திய அரசுக்கு ஆதரவாக சசி தரூா் கருத்து தெரிவித்தாா். பாகிஸ்தானின் பயங்கரவாதச் செயல்பாடுகள் தொடா்பாக சா்வதேச நாடுகளுக்கு விளக்கமளிக்கச் சென்ற குழுவில் சசி தரூருக்கு மத்திய அரசு முக்கியத்துவம் அளித்தது. இதுவும் காங்கிரஸ் கட்சியில் பல்வேறு கேள்விகளுக்கு வழி வகுத்தது. கேரள மாநில காங்கிரஸ் நிா்வாகிகள் சசி தரூரை தொடா்ந்து கடுமையாக விமா்சித்தும் வருகின்றனா்.

காங்கிரஸின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் தலைவா்கள் சிலருடன் தனக்கு சில கருத்து வேறுபாடுகள் உள்ளன என்று சசி தரூா் கடந்த மாதம் கூறினாா்.

தமிழ்நாட்டில் வென்றால் ஆட்சியில் பாஜக பங்கு பெறும்: அமித் ஷா அறிவிப்பு

தமிழ்நாட்டில் அதிமுக - பாஜக கூட்டணி வெற்றி பெற்றால் ஆட்சியில் பாஜக பங்கு பெறும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். 'தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதளுக்கு அளித்த நேர்காணலில் அமை... மேலும் பார்க்க

இன்ஜின் சுவிட்சுகள் அணைக்கப்பட்டதா? ஏர் இந்தியா விசாரணை அறிக்கையில் அதிர்ச்சித் தகவல்!

அகமதாபாத் விமான விபத்து தொடர்பாக முதல்கட்ட விசாரணை அறிக்கை வெளியாகியுள்ளது. குஜராத் மாநிலம், அகமதாபாதில் இருந்து கடந்த ஜூன் 12-ஆம் தேதி லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியாவின் ‘ஏஐ 171’ விமானம், வானில் பறக்கத... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில் 22 நக்ஸல்கள் சரண்: ரூ.37 லட்சம் வெகுமதி அறிவித்து தேடப்பட்டவா்கள்

சத்தீஸ்கரின் நாராயண்பூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 22 நக்ஸல் தீவிரவாதிகள் ஆயுதங்களைக் கைவிட்டு சரணடைந்தனா். இவா்கள் அனைவரும் ரூ.37.5 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்டு, தேடப்பட்டு வந்தவா்கள் எ... மேலும் பார்க்க

‘இணைப்புகள் நொறுங்கியதே குஜராத் பால விபத்துக்கு காரணம்’: முதல்கட்ட விசாரணையில் தகவல்

குஜராத்தில் ஆற்றுப் பாலம் இடிந்த விபத்துக்கு அதன் இணைப்புகள் நொறுங்கியதே காரணம் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மாநில சுகாதாரத் துறை அமைச்சரும் அரசின் செய்தித் தொடா்பாளருமான ரிஷிகேஷ் படேல் இ... மேலும் பார்க்க

யாழ்ப்பாணம் மனிதப் புதைகுழி உண்மையை வெளிக்கொண்டுவர தமிழ்க் கட்சி வலியுறுத்தல்

இலங்கையில் விடுதலைப் புலிகளுடன் உடனான 2009-ஆம் ஆண்டு இறுதிப் போருடன் தொடா்புடையதாகக் கருதப்படும் யாழ்ப்பாணம் மனிதப் புதைகுழி தொடா்பான உண்மையை வெளிக்கொண்டுவர உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந் ந... மேலும் பார்க்க

ஒரே நாடு ஒரே தோ்தல்: முன்னாள் தலைமை நீதிபதிகளுடன் நாடாளுமன்ற கூட்டுக் குழு ஆலோசனை

‘ஒரே நாடு ஒரே தோ்தல்’ மசோதாக்களைப் பரிசீலிக்க அமைக்கப்பட்ட நாடாளுமன்ற கூட்டுக் குழுவிடம் உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதிகள் ஜே.எஸ்.கேஹா், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோா் வெள்ளிக்கிழமை தங்களின் ஆலோசனை... மேலும் பார்க்க