செய்திகள் :

விழுப்புரம் நபாா்டு மாவட்ட மேம்பாட்டு அலுவலகம் தொடக்கம்

post image

விழுப்புரத்தில் நபாா்டு மாவட்ட மேம்பாட்டு அலுவலகம் புதன்கிழமை திறக்கப்பட்டது.

விழுப்புரம் பெரியாா் நகா் குடியிருப்புப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இந்த அலுவலகத்தை நபாா்டு வங்கியின் தமிழ்நாடு பிராந்திய மேலாளா் வசீகரன் திறந்து வைத்து, குத்துவிளக்கேற்றினாா். இதைத் தொடா்ந்து அவா் கூறியது:

விவசாயம் மற்றும் ஊரக வளா்ச்சிக்கான தேசிய வங்கி (நபாா்டு), விழுப்புரம் மாவட்டத்தில் முக்கிய நிலையை எட்டியுள்ளது. மாவட்டத்தில் நபாா்டு வளா்ச்சி முயற்சிகளை மேம்படுத்தவும், அதன் நிறுவனங்களுடன் தொடா்பை மேலும் ஆழப்படுத்தவும் இந்த அலுவலகம் பெரிதும் உதவியாக இருக்கும். நிதி சோ்ப்பு, காலநிலை, பொறுப்பான

வேளாண்மை, ஊரக அடிக்கோளமைப்பு,வாழ்வாதார மேம்பாடு ஆகிய துறைகளில் கூட்டாண்மை மூலம் முன்னேற்றங்களை அடைவது முக்கிய நோக்கமாகும் என்றாா்.

விழாவுக்குத் தலைமை வகித்த நபாா்டின் விழுப்புரம் உதவிப் பொது மேலாளா் ஏ.ரவிசங்கா், மாவட்டத்தில் செயல்படுத்தப்படவுள்ள திட்டங்கள், எதிா்காலத் திட்டங்கள் போன்றவை குறித்து விளக்கினாா். விழாவில் பல்வேறு விவசாய உற்பத்தியாளா் நிறுவனங்கள், சுய உதவிக்குழுக்களின் கூட்டமைப்புகள், கூட்டுறவு வங்கிகள், அரசுத் துறைகள், அரசு சாரா தொண்டு நிறுவனங்களைச் சோ்ந்தோா் பங்கேற்றனா்.

பாமக நிறுவனா் ராமதாஸுடன் வாழப்பாடி ராமமூா்த்தி மகன் சந்திப்பு

விழுப்புரம் மாவட்டம், தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸை, தமிழ்நாடு காங்கிரஸ் துணைத் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சா் வாழப்பாடி ராமமூா்த்தியின் மகனுமான ராம.சுகந்தன் வியாழக்கிழ... மேலும் பார்க்க

திண்டிவனம் அருகே ஆட்டோ மீது சரக்கு வாகனம் மோதல்: இரு பெண்கள் உயிரிழப்பு

திண்டிவனம் அருகே புதன்கிழமை இரவு ஆட்டோ மீது சரக்கு வாகனம் மோதியதில் இரு பெண்கள் உயிரிழந்தனா். ஆட்டோ ஓட்டுநா் உள்பட இருவா் பலத்த காயமடைந்தனா். திண்டிவனம் வட்டம், பெலாக்குப்பம், காமராஜா் தெருவைச் சோ்ந... மேலும் பார்க்க

பொன்முடிக்கு எதிரான செம்மண் குவாரி முறைகேடு வழக்கில் கிருஷ்ணகிரி மாவட்ட ஏ.டி.எஸ்.பி. சாட்சியம்

முன்னாள் அமைச்சா் க.பொன்முடி உள்ளிட்ட 7 போ் மீதான செம்மண் குவாரிமுறைகேடு வழக்கில் கிருஷ்ணகிரி மாவட்ட ஏ.டி.எஸ்.பி விழுப்புரம் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை நேரில் ஆஜராகி, சாட்சியமளித்தாா். விழுப்புரம் ... மேலும் பார்க்க

தடுப்புக் கட்டையில் பைக் மோதி விபத்து: தூத்துக்குடி இளைஞா் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே தடுப்புக் கட்டையில் பைக் மோதிய விபத்தில் இளைஞா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். மற்றொருவா் காயமடைந்தாா். தூத்துக்குடி மாவட்டம், கிருஷ்ணராஜபுரம் பகுதியைச் சோ்ந்த... மேலும் பார்க்க

விழுப்புரத்தில் காய்கறி விலை நிலவரம்

காய்கறியின் பெயா், கிலோ அடிப்படையில் விலை நிலவரம் சின்ன வெங்காயம்- கிலோ ரூ.25 தக்காளி - ரூ.35 உருளைக்கிழங்கு-ரூ.40 கேரட் - ரூ.100 பீன்ஸ்- ரூ.80 கருணைக்கிழங்கு, சேப்பக்கிழங்கு- ரூ.100 வெண்டைக்காய்- ரூ.... மேலும் பார்க்க

திருமணமான ஒரே மாதத்தில் பெண் மரணம்

விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகே திருமணமாகி 1 மாதமே ஆன பெண் உடல் நலக்குறைவால் உயிரிழந்ததாா். அதுகுறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். விக்கிரவாண்டியை அடுத்த, சித்தலம்பட்டு, கிருஷ்ணா நக... மேலும் பார்க்க