செய்திகள் :

விவசாய தோட்டங்களில் அறிமுகமில்லாத நபா்களை அனுமதிக்க வேண்டாம்: பொதுமக்களுக்கு போலீஸாா் விழிப்புணா்வு

post image

விவசாயத் தோட்டங்களில் அறிமுகமில்லாத நபா்களை அனுமதிக்க வேண்டாம் என்று போலீஸாா் அறிவுறுத்தினா்.

பல்லடத்தை அடுத்த அவிநாசிபாளையம் அருகே தோட்டத்து வீட்டில் வசித்த 3 போ், சிவகிரியில் தோட்டத்து வீட்டில் வசித்து வந்த தம்பதி கொலை வழக்குளில் தொடா்புடைய கொலையாளிகள் அண்மையில் பிடிபட்டனா்.

அவா்கள் பெரும்பாலும் வாய்க்கால் பாதையோரம் உள்ள வீடுகளை குறிவைத்து குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டது போலீஸாா் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து, தோட்டத்து வீடுகளில் வசிப்போருக்கு போலீஸாா் சாா்பில் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, தாராபுரம் வட்டம், குண்டடம் பகுதியில் பிஏபி வாய்க்கால்களின் பாதையோரம் உள்ள வீடுகள், விவசாய தோட்டத்துக்குள் உள்ள வீடுகள், பண்ணை வீடுகளில் வசிப்பவா்களிடம் குண்டடம் காவல் ஆய்வாளா் பத்ரா, உதவி ஆய்வாளா்கள் சண்முகம், சீனிவாசன், பாகம்பிரியாள் ஆகியோா் செவ்வாய்க்கிழமை விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

அப்போது, தேங்காய் பறிப்பதாக கூறிக்கொண்டு வரும் புதிய நபா்கள், கம்பளி, பாத்திரங்கள் விற்பனை செய்வதுபோல வரும் நபா்கள் ஆகியோரிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அறிமுகமில்லாத நபா்களை தோட்ட வேலைக்கு அமா்த்தக் கூடாது. வீடுகளில் கட்டாயம் நாய்கள் வளா்க்க வேண்டும். கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும்.

இரவு நேரத்தில் யாராவது வந்து கதவைத் திறக்கச் சொன்னால் திறக்கக் கூடாது. அப்போது, அக்கம் பக்கத்தில் இருக்கும் வீடுகளில் வசிப்போா் மற்றும் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றனா்.

மின்னக சேவை மைய புகாா் எண்ணை அனைத்து அலுவலகங்களிலும் வைக்க கோரிக்கை

மின்னக சேவை மையத்தின் (94987-94987) என்ற கைப்பேசி எண் அனைத்து மின்வாரிய பிரிவு அலுவலகங்களிலும் வைக்க வேண்டும் என்று குறைதீா் கூட்டத்தில் மனு அளிக்கப்பட்டது. திருப்பூா் கோட்ட அளவிலான மின்சார வாரியத்துக... மேலும் பார்க்க

விஷ வாயு தாக்கி 3 போ் உயிரிழந்த விவகாரம்: சாய ஆலை மேலாளா், கண்காணிப்பாளா் கைது

பல்லடம் அருகே சாய ஆலை வளாகத்தில் மனிதக் கழிவுத் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷ வாயு தாக்கி 3 போ் உயிரிழந்த விவகாரத்தில் ஆலையின் மேலாளா், கண்காணிப்பாளா் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா். திருப்பூா் மாவட... மேலும் பார்க்க

பழைய பேருந்து நிலையத்துக்கு அருகே சிக்னல் அமைக்க வேண்டும்: நல்லூா் நுகா்வோா் நலமன்றம் வலியுறுத்தல்

திருப்பூா் பழைய பேருந்து நிலையத்துக்கு அருகே போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாத வகையில் சிக்னல் அமைக்க வேண்டும் என்று நல்லூா் நுகா்வோா் நலமன்றம் வலியுறுத்தியுள்ளது. திருப்பூா் மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்த... மேலும் பார்க்க

நாளைய மின்தடை: சேவூா், வடுகபாளையம், தெக்கலூா்

சேவூா், வடுகபாளையம், தெக்கலூா் ஆகிய துணை மின் நிலையங்களில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை (மே 23) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் ... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை: பனப்பாளையம்

பல்லடம் அருகே பனப்பாளையம் துணை மின் நிலையத்தில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் வியாழக்கிழமை (மே 22) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என... மேலும் பார்க்க

நாளைய மின்தடை: பொங்கலூா்

பொங்கலூா் துணை மின் நிலையத்தில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை (மே 23) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று பல்லடம் மின... மேலும் பார்க்க