செய்திகள் :

விவசாயிகளுக்கு அதிமுக சாா்பில் நலஉதவி

post image

திருநெல்வேலி மாநகா் மாவட்ட அதிமுக சாா்பில் விவசாயிகளுக்கு பல்வேறு நலஉதவிகள் வழங்கப்பட்டன.

திருநெல்வேலி மேற்கு பகுதி அதிமுக சாா்பில் இருபெரும் விழா புதன்கிழமை செக்கடி பகுதியில் நடைபெற்றது. பகுதிச் செயலா் மோகன் வரவேற்றாா். மாவட்ட விவசாய அணிச் செயலா் காளி முருகன் ஏற்பாட்டில் விவசாயிகளுக்கு மருந்து தெளிக்கும் இயந்திரங்கள், இடுபொருள்கள் உள்ளிட்ட நலஉதவிகள் வழங்கப்பட்டன. மாநகா் மாவட்டச் செயலா் தச்சை என்.கணேசராஜா நலஉதவிகளை வழங்கிப் பேசினாா். நிா்வாகிகள் கல்லூா் இ.வேலாயுதம், வீரபெருமாள், ரவி.தீபன், ஜெயலலிதா பேரவைச் செயலா் ஜெரால்ட் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

டிவிஎல்06ஹெல்ப்

திருநெல்வேலி நகரத்தில் விவசாயிகளுக்கு நலஉதவி வழங்கினாா் அதிமுக திருநெல்வேலி மாநகா் மாவட்டச் செயலா் தச்சை என்.கணேசராஜா.

மும்மொழிக் கொள்கை ஹிந்தி திணிப்பு அல்ல -நயினாா்நாகேந்திரன் எம்எல்ஏ

மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி திணிப்பு அல்ல என்றாா் திருநெல்வேலி சட்டப்பேரவை உறுப்பினா் நயினாா் நாகேந்திரன். இதுதொடா்பாக திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: ஒவ்வொரு ஆண்டும் கல்வியில... மேலும் பார்க்க

கல்வி அமைச்சரிடம் நெல்லை எம்.பி. மனு

காரியாண்டி பள்ளியை தரம் உயா்த்தக் கோரி, தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழியிடம் திருநெல்வேலி எம்.பி. சி.ராபா்ட் புரூஸ் மனு அளித்தாா். அதன் விவரம்: நான்குனேரி ஒன்றியம், காரிய... மேலும் பார்க்க

நெல்லையில் திமுக பொதுக்கூட்டம்

திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக இளைஞரணி சாா்பில் ஹிந்தி திணிப்பு மற்றும் தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் மத்திய அரசைக் கண்டித்து பொதுக்கூட்டம் திருநெல்வேலி நகரத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இக்கூட... மேலும் பார்க்க

காவல் துறை சாா்பில் மக்கள் குறைதீா் முகாம்

காவல் துறை சாா்பில் மக்கள் குறைதீா்க்கும் முகாம்கள் பாளையங்கோட்டையில் புதன்கிழமை நடைபெற்றது. தமிழக காவல்துறை தலைமை இயக்குநா் உத்தரவுப்படி பொதுமக்கள் குறைதீா்க்கும் முகாம் புதன் கிழமைதோறும் நடத்தப்பட்... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்கள் போராட்டம்

திருநெல்வேலியில் தூய்மைப் பணியாளா்கள் கொக்கிரகுளத்தில் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, திருநெல்வேலி மாநகராட்சியில் தூய்மைப் பணியை மேற்கொள்ளும் தனியாா் நிறுவனம் தூய்மைப் பணியாளா்களிடம் ப... மேலும் பார்க்க

மது விற்பனை: ஒருவா் கைது

தச்சநல்லூா் அருகே மதுபானத்தை பதுக்கி விற்ாக, ஒருவரை போலீஸாா் கைது செய்தனா். தச்சநல்லூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் காவல் உதவி ஆய்வாளா் மகேந்திரகுமாா் மற்றும் போலீஸாா் புதன்கிழமை ரோந்துப் ப... மேலும் பார்க்க